பாடிலாங்க்வேஜூம் வடிவேலுவும் - உடல்மொழி - 2

உடல்மொழியின்(பாடிலாங்க்வேஜ் ) முக்கியத்துவம், இரண்டாண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் இருக்கும் வடிவேலுவின் இடம்

பாடில்ங்க்வேஜ் பற்றி சும்மா ஒரு போஸ்ட் போட்டேன், நிறைய நண்பர்கள் உள்பெட்டியில் வந்து (சரி சரி இரண்டு நண்பர்கள் தான்) இதைப்பற்றி அடிக்கடி எழுதலாமே என்றார்கள், சரி நேரம் கிடைக்கும் போது எழுதலாம் என்று ஆரம்பித்துள்ளேன்,


நம்ம வடிவேலு என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர் படங்களில் வந்ததற்கும் இம்சை அரசன் இரண்டாம் புலிகேசியில் வந்ததற்கும் எவ்வளவு வித்தியாசங்கள்? அவருடைய வாய்ஸ் மாடுலேஷன், பாடிலாங்குவேஜ்களில் அவர் ஏற்படுத்திக்கொண்ட மாற்றங்கள் தான் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வடிவேலு ஃபீல்டில் இல்லாத போதும் இன்னும் வடிவேலுவின் இடம் நிரப்பப்படாமல் இருப்பதற்கான காரணம்.


நாம் பேசும் வார்த்தைகள் மூலமே பெரும்பாலும் பிறருடன் கம்யூனிகேஷன் செய்துவிடுகிறோம், நம்முடைய வார்த்தைகளே பிறருக்கு நாம் சொல்ல வருவதை புரிந்து கொள்வார்களா? அது மட்டும் போதுமா? என்றால் நிச்சயம் இல்லை.

"ராஸ்கல் என்ன இது சின்ன புள்ளதனமா இருக்கு"

இது வடிவேலுவின் பிரபலமான ஒரு டயலாக், இந்த டயலாக்கை ரகுவரன் சொல்வது போல நினைத்து பாருங்கள், வடிவேலு சொல்வதை போல நினைத்து பாருங்கள். ரகுவரன் சொல்வது வில்லத்தனமாகவும் வடிவேலு சொல்வது காமெடியாகவும் இருக்கும்.

ஆராய்ச்சி முடிவுகள் நிரூபிப்பது என்னவென்றால் நாம் தொடர்புகொள்ள பயன்படுத்தும் மொழி, சொற்கள் மூலம் பிறர் புரிந்து கொள்வது வெறும் 7% மட்டுமே... ஆனால் 93% நாம் சொல்வதை பிறர் புரிந்து கொள்வது நம் வார்த்தைகள் மூலம் அல்ல.

நம்ப முடியவில்லையா? நம் வார்த்தைகள் நாம் சொல்ல வருவதை பிறருக்கு புரிய வைப்பதில் வெறும் 7% மட்டுமே துணைபுரிகிறது மீதி 93% என்பது நம் குரல், மாடுலேஷன், நம் உடல்மொழிகள் மூலம் தான் பிறருக்கு புரியவைக்கிறோம்.

நம் வார்த்தைகள் பிறருக்கு வெறும் 7% மட்டுமே புரியவைக்கும் என்றால் மிச்சம் 93%த்தை ஏன் நாம் கவனிக்காமல் இருக்கிறோம்? இந்த 93% ஐயும் திறமையாக பயன்படுத்தியதால் தான் சிவாஜி கணேசன், வடிவேலு போன்றவர்கள் காலத்தை தாண்டியும் நிற்பதும் எல்லா டயலாக்கையும் ஒரே மாடுலேஷனில் பேசும் நடிகர்கள் டொக்காவதும் காரணமாகும்.

நாம் பிறரிடம் தொடர்புகொள்வது

1) நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் - 7%
2) நம் குரல் (வாய்ஸ் டோன், மாடுலேஷன்) - 38%
3) நம் உடல்மொழி(பாடிலாங்க்வேஜ்) - 55%

நம் குரல் மூலம் நம்மை பிறர் புரிந்து கொள்வதும், குரல் மூலம் நாம் பிறருக்கு உணர்த்துவதும் நாம் நன்றாக அறிந்ததே.

ஆனால் 55% உடல்மொழிகள் மூலம் நாம் தொடர்புகளை மேற்கொண்டாலும் நாம் அதில் பெரும்பாலும் கவனம் செலுத்துவதே இல்லை.

ஒருவர் பேசும் வார்த்தைகளை அவர் உண்மையாக பேசுகிறாரா, அல்லது மறைத்துக்கொண்டு பேசுகிறாரா என்பதை நம்மால் கண்டுபிடித்து விட முடிந்தால் எவ்வளவு சூப்பராக இருக்கும்?

பிசினஸ் டீலிங்குகளில் கலக்கலாம், மேனேஜர் அப்ரைசலில் பட்டைய கிளப்பலாம், யாரேனும் டிவியில் பேட்டி கொடுத்தால் ஏய் பார்ரா டுபாக்கூர் உடறான் என்று கண்டுபிடித்து கலாய்க்கலாம். ஆனால் சில கில்லாடிகள் இருக்கிறார்கள் உடல்மொழியை வைத்து எங்கே நாம் டுபாக்கூர் விடுகிறோமா என்பதை கண்டுபிடித்துவிடுவார்களோ என்று பொய் உடல்மொழிகளை வெளிப்படுத்துவது, டிவி விவாதங்களில் பேசும்போது மண்டையை மண்டையை ஆட்டி முடியை சிலுப்பி விடுவதும், உடல் மொழியில் ஆக்ரோசமாக வெளிப்படுத்துவதையும் உற்று நோக்கினால் அது உண்மையான உடல் மொழிகளை மறைக்கும் உத்தியாக இருப்பதாக‌ கருத வேண்டியுள்ளது.

ஒருவரின் வார்த்தைகள் பொய் சொல்லலாம் ஆனால் எவ்வளவு தான் மறைத்தாலும் நம் உடல்மொழி மட்டும் பொய் சொல்லாது.

ஐந்தறிவு நாய் ஒன்று கூட்டல் கழித்தல் கணக்கிற்கெல்லாம் கூட சரியான விடையை சொன்ன அதிசயம் நடந்தது எப்படி? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

தலித்கள் பொய்வழக்குகள் போடுபவர்களா? தலித்களுக்கு எதிரான சாதிவெறி பிடித்த கட்சி திமுக!

மதுரையில் அழகிரி ஆதரவாளர் ஒருவரை ஸ்டாலின் ஆதரவாளர்கள் அவரது தலித் சாதியை குறிப்பிட்டு திட்டியதாக போலிசில் பிசிஆர் கேஸ் கொடுத்தார்.

ஒரு நியாயமான கட்சியாக தலித் ஆதரவு கட்சியாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? கட்சித்தலைமை தலித் கொடுமை புரிந்த கட்சிகாரரை தானே கட்சியை விட்டு நீக்க வேண்டும்? ஆனால் இன்று காலை அழகிரியை அழைத்து கோபாலபுரத்தில் வைத்து கட்டை பஞ்சாயத்து செய்கிறார்கள் அந்த வன்கொடுமை வழக்கை வாபஸ் வாங்க வேண்டுமென்று.

இந்த மாதிரி வன்கொடுமை புகாரை வாபஸ் வாங்கவேண்டுமென்று ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்திருந்த அஞ்சாநெஞ்சன் அழகிரி தலித் சாதி மருமகனை கூப்பிட்டு அவமானப்படுத்தியுள்ளார்கள் சாதிவெறி பிடித்த தலித் விரோதி கருணாநிதி குடும்பத்தினர்கள். தலித் பெண்ணை திருமணம் செய்திருப்பதால் தானே அழகிரிக்கு இந்த அவமானத்தை செய்துள்ளது சாதிவெறி பிடித்த கருணாநிதி குடும்பம்.

ஒரு பாதிக்கப்பட்ட தலித் கொடுத்த வன்கொடுமை புகாரை வாபஸ் பெறவைக்க தலித் மருமகனை மிரட்டியும் அடிபணியாததால் சாதிவெறிபிடித்த திமுக தலைமை ஆதிக்க முதலியார் சாதிவெறியர் அன்பழகன் மூலம் ஒரு தலித் விரோத அறிக்கையை வெளியிடுகிறார்கள், அதில் சாதிவெறியால் பாதிக்கப்பட்டவரையே கொடுமை செய்ததை போல சித்தரித்து வன்கொடுமை கேஸ் கொடுத்தவர்கள் பழிவாங்கும் நோக்குடன் பொய் புகார் கொடுத்துள்ளார்கள் என்று முதலியார் சாதிவெறி அன்பழகன் அறிக்கை சொல்கிறது, பிசிஆர் கேஸ்களை பொய்யாக கொடுப்பவர்கள் தலித்கள் என்று சாதிவெறியர் அன்பழகன் கூறுகிறாரா?

தலித்களுக்கு எதிரான சாதிவெறி கொண்ட திமுக தலைமை பாதிக்கப்பட்ட தலித் கொடுத்த வன்கொடுமை புகாரை வாபஸ் வாங்க சொல்லி கட்டை பஞ்சாயத்தும் செய்து, தலித்கள் பொய்யாக கேஸ்கொடுக்கிறார்கள் என்பது போன்று அறிக்கையும் கொடுத்து கடைசியாக தலித்களின் மீதான மிரட்டலை அஞ்சாமல் எதிர்கொண்டு கேசை வாபஸ் வாங்காத தலித்களின் மருமகன் அழகிரியையும் கட்சியை விட்டு நீக்கி தான் ஒரு ஆதிக்க சாதிவெறி பிடித்த, தலித்களுக்கு எதிரான கட்சி என்று திமுகவும், அதன் தலைமையும் நிரூபித்துள்ளது.

----சாவுங்கடா---

ஒரு சமுதாயம் தனக்கான தலைவர்களை தானே உருவாக்கி கொள்ளும்

ஒரு சமுதாயம் அந்த காலகட்டத்திற்கான தலைவர்களை தானே உருவாக்கி கொள்ளும்

ஏற்கனவே இதை ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தேன், தற்போது இங்கேயும்

சமூகம் காலத்துக்கேற்றவாறு தன்னை தானே சரிசெய்து கொள்ளும் வலிமை உடையது, அதற்கு தேவை ஏற்படும் போது அந்த பிரச்சினையின் தீர்வுக்கும் மாற்றத்துக்குமான‌ தலைவர்களை தானே உருவாக்கும், அரசியலில் தூய்மை, நேர்மை, ஊழல் இல்லாத அரசியல் என்ற ஒரு அரசியல் சுதந்திரத்துக்கு முன்பும் சுதந்திரத்துக்கு பின்பும் சில காலங்கள் இருந்து வந்தது. ஆனால் அது சமூக பிரச்சினைகளை சுத்தமாக ஒதுக்கிவைத்திருந்தது, சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அதிகார பரவலாக்கத்துக்கு தேவையான தலைவர்கள் அப்போது தேவைப்பட்டதால் சமூகம் பெரியார், அம்பேத்கார் போன்ற தலைவர்களை உருவாக்கியது, பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான அரசியல் அதிகார பரவலாக்கத்திற்காக அது சோஷலிஸ்ட் கட்சி ஆட்கள், லல்லு பிரசாத் யாதவ், முலாயம் சிங், அண்ணாதுரை, கருணாநிதி, ராமதாஸ், திருமா போன்றவர்களை சமூகம் தனது தேவைகளுக்காக உருவாக்கியது.

அரை நூற்றாண்டுகாலத்தில் தற்போது மீண்டும் அரசியலில் தூய்மை, ஊழலற்ற நிர்வாகம், அரசியலில் வெளிப்படை தன்மை இவற்றுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் சமூகம் தனக்காக அர்விந்த் கேஜ்ரிவால் போன்றவர்களை உருவாக்குகிறது. தேவை ஏற்படின் மீண்டு இந்த சமுதாயமே பெரியார், அம்பேத்கார், லல்லு, முலாயம், கருணாநிதி, ராமதாஸ், திருமா போன்ற தலைவர்களையும் உருவாக்கும்.

பிரச்சினைகளுக்கு ஏற்றவாறு சமுதாயம் தனக்கான தலைவர்களை தானே உருவாக்கி கொள்ளும்...

ஆம் ஆத்மி அர்விந்த் கேஜ்ரிவால் கட்சி அதன் சமூக பார்வை குறித்து டிப்பிக்கல் தமிழ்நாட்டு முற்போக்கு ஸ்டைல் விமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ளன, அர்விந்த் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற் பட்டவர் அல்ல விமர்சனங்கள் வரட்டும் நல்லது தான்.

இந்திய தேசியத்துடன் அரசியலில் நேர்மை தூய்மை என முழங்கும் கெஜ்ரிவால் போல தமிழ்தேசியத்துடன் அரசியலில் நேர்மை தூய்மை என்று தமிழகத்தில் வந்தால் ஒரு மாற்றத்துக்கான ஆரம்பம் ஏற்படலாம். கவிஞர் தாமரை சில நாட்களுக்கு முன் அவரது ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டது போல பொதுவாழ்விலும் தனி வாழ்விலும் தூய்மையில்லாதவர்களால் நல்ல‌ அரசியலை முன்னெடுக்க முடியாது.

மாற்று கொண்டு வருவோம் என முழங்குபவர்கள் புதியவர்களை, பொது வாழ்வில் தூய்மையானவர்களாக இருக்க வேண்டியதேவை உள்ளது, விஜயகாந்த் மாற்று கொண்டு வருகிறேன் என மற்ற கட்சியில் சீட்டு கிடைக்காதவர்கள், பணக்காரர்கள், உள்ளூர் தாதாக்களை எல்லாம் களம் இறக்கினால் சீன் தான்.

அப்படி வரும் புதியவர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்றால் இந்த டெக்னிக்கெல்லாம் தெரிய வர கொஞ்ச நாளாவது ஆகும், அது வரை சமூகத்துக்கு லாபம் தானே!

கூட்டத்தில் அதிகாரம் மிக்கவர் யார் என கண்டுபிடிக்கனுமா? - உடல் மொழி

கூட்டத்தில் அதிகாரம் மிக்கவர் யார் என கண்டுபிடிக்கனுமா?