ஜெகத்கஸ்பர் அருட்தந்தையா? புளுகுமூட்டையா?

ஃபாதர் ஜெகத்கஸ்பர் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகும் பெயர், நான்காம் ஈழத்தில் நான்காம் கட்டப்போர் உச்சத்தை எட்டியிருந்த போது தமிழகத்தில் தேர்தல் உச்சத்தில் இருந்தது, அந்த நேரத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மீது மிக கடுமையாக விமர்சனம் எழுந்தது, திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தமிழின துரோகம் அக்கூட்டணிக்கு தேர்தல் தோல்வி ஏற்படுத்துமென்றே நம்பப்பட்டது.

அந்த நேரத்தில் ஃபாதர் ஜெகத்கஸ்பர்(கனிமொழி கருணாநிதி யின் நண்பர் மற்றும் திமுக ஆதரவாளர், ஜெயலலிதாவினால் புலி ஆதரவாளர் என விமர்சிக்கப்பட்டவர், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கைது செய்யப்பட்டுவிடுவார் என்றே நம்பப்பட்ட ஒருவர்) ஈழப்போராட்டம் பற்றிய பதிவுகளை எழுத ஆரம்பித்தார்...

அவரோட பதிவுகள் எல்லாம் இயக்குனர் சங்கர் படங்களை போன்றே இருந்தன, பல உண்மைகளுக்கு இடையில் தம் பொய் பரப்புரைகளை புகுத்துவது, முதலில் இலை மறைவாக தமிழகத்தின் ஈழத்தமிழ் ஆதரவு தலைவர்களை(இவர்களை எல்லாம் யோக்கியம் என்று சொல்லவில்லை) விமர்சித்தார் அவரோட விமர்சனம் எல்லாமே கருணாநிதியையும் காங்கிரசையும் காப்பது போன்றே இருந்தது.

நக்கீரனில் ஒரு பதிவில் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை குறிப்பிட்டு இவர் போர் நிறுத்தத்திற்கு மிகவும் முயன்றதாகவும் கனிமொழி கண் உறங்காமல் பாடுபட்டதாகவும் எழுதினார், பாவம் நக்கீரன் லேஅவுட் மற்றும் ஃப்ரூப் ரீடர்கள் கண்ணில் அது படவில்லையோ என்னமோ, நக்கீரனின் வேறு கட்டுரைகளின் பக்கங்களில் வேட்டி கட்டிய உயர்ந்த பதவியில் இருக்கும் முக்கிய தமிழர் இன்னுமா முடிக்கலை, இன்னும் என்னவெல்லாம்தான் உதவி செய்வது என்று சிங்களனை திட்டிக்கொண்டே அந்த உயர்மட்ட கூட்டத்திற்கு கலந்து கொள்ள சென்றார் என்று எழுதியிருந்தார்கள், இதில் எது உண்மை?

போர் நிறுத்தத்திற்கு தமிழக காங்கிரஸ் பெரியமனிதர்(ப.சிதம்பரம்?) மற்றும் திமுக பெரிய இடத்து ஆட்கள் எல்லாம் உறங்காமல் முயன்று கொண்டிருந்த போது தமிழகத்தின் முக்கிய ஈழ ஆதரவு தலைவர்கள் இன்னமும் நிலமை மோசமாகட்டும் அப்போது தான் நாம் இங்கே தேர்தலில் வெற்றி பெறலாமென ஜெகத் கஸ்பர் காது பட பேசினார்களாம், கனிமொழியின் நண்பர், திமுகவின் ஜால்ரா ஜெகத் கஸ்பர் காதில் விழுமாறு பேசும் அளவிற்கு அந்த தலைவர்கள் கேணையர்களா? அவ்வளவு தூரம் சொல்பவர் ஏன் கிசு கிசு பாணியில் எழுத வேண்டும் பெயரை சொல்ல வேண்டியது தானே?

போர் முடிந்தும் இப்போதும் திமுகவிற்கும் காங்கிரசுக்கும் விழுந்த துரோக கறையை துடைக்க முடிந்த அளவிற்கு தம் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுக்கொண்டே இருக்கின்றார் அருட்தந்தை.

தற்போது ஒரு போராளி போன் செய்து சொன்னார் என்றும் பொய்யான நம்பிக்கையை தந்தார்கள் தமிழக தலைவர்கள் அதனால் தான் எல்லாம் போயிருச்சி என்றும் மீண்டும் ஒரு முறை இவர்கள் மீது விழுந்து பிடுங்கியுள்ளார் அருட்தந்தை? போயும் போயும் இந்த தலைவர்கள் தந்த கணிப்புகளை நம்பி செயல்படும் அளவிற்கு கேணத்தனமாகவா இருந்தார்கள் போராளிகள்? அருட்தந்தையின் புளுகுமூட்டைகளுக்கு அளவேயில்லையா?

ஈழத்தமிழர் விசயத்தில் இப்படித்தான் தமிழகத்தின் ஒவ்வொரு இயக்க ஆட்களும் தங்கள் தலைமைகளுக்கு சப்பைகட்டு கட்டிக்கொண்டுள்ளார்கள் தங்கள் தலைமைகளின் துரோகம் தெரிந்தும்.

ஈழத்தமிழர்கள் விசயத்தில் தமிழகத்தின் அத்தனை பேரும் துரோகம் செய்துள்ளார்கள், கட்சி தலைமைகளுக்கு அடிமைகளாய் அவர்களின் துரோகங்கள் தெரிந்திருந்தும் அதை சப்பைகட்டு கட்டும் காவல்நாய்களாய் இருக்கும் தொண்டர்கள், பணத்திற்காக தங்கள் வாக்குகளை விற்ற பொதுமக்கள் என அத்தனைபேருக்கும் பொறுப்பு உண்டு.

அருட்தந்தை ஜெகத்கஸ்பர் கனிமொழிக்கு கூஜா தூக்கட்டும், திமுகவுக்கு ஜால்ரா போடட்டும் ஏன் உடன்பிறப்பாக மாறி தலைவர் வாழ்க, தளபதி வாழ்க கோசமும் கூட போடட்டும் ஆனால் ஈழத்தமிழ் போராட்டத்தில் தம் ஈனத்தனத்தை காட்ட வேண்டாம்.

நக்கீரன் பத்திரிக்கைக்கு ஒரு நிகழ்வை சுட்டிக்காட்ட விரும்புகிறேன், நக்கீரனுக்கு முன்பு தராசு என்றொரு பத்திரிக்கை இருந்தது, ஷ்யாம் அதன் ஆசிரியர், தராசு பெரிய அளவில் விற்பனையில் இருந்தது, மிகப்பிரபலமான அரசியல் பத்திரிக்கை, அந்த பத்திரிக்கைக்கும் திமுக(மற்றும் அப்போதைய உள்துறை செயலாளர் நாகராஜன்)வுக்கும் பிரச்சினை எழுந்தது, பாக்சர் வடிவேலு தலைமையில் ரவுடி கும்பல் அந்த பத்திரிக்கையின் உள் புகுந்து அடித்து இருவரை கொலை செய்தனர்.

இதை சமாளிக்க ஜெயலலிதா ஆதரவுக்கு மாற துவங்கியது இந்த தராசு பத்திரிக்கை, கொஞ்சம் கொஞ்சமாக அதன் நடுநிலை குறைய ஆரம்பித்த போது நக்கீரன் களம் இறங்கி மொத்த தராசு வின் வியாபரத்தையும் எடுத்துக்கொண்டு மிகப்பிரபலமானது.

நக்கீரன் பத்திரிக்கைக்கும் ஜெயலலிதாவிற்கும் மிகப்பெரிய பிரச்சினைகள் நடந்துள்ளது, இன்னமும் இருக்கலாம், அதற்காக திமுக மற்றும் கருணாநிதியின் முழு ஜால்ராவாக மாற ஆரம்பிப்பது நக்கீரன் பத்திரிக்கையின் வியாபாரத்திற்கும் அதன் நடுநிலைக்கும் சரியானதாக இருக்காது. திமுக சார்புநிலை என்பதை தாண்டி திமுக ஜால்ரா என்ற நிலைக்கு நக்கீரன் சென்று கொண்டுள்ளது.

தற்போது அரசியல் பத்திரிக்கைகளே இல்லையென நினைக்க வேண்டாம் "தமிழக அரசியல்" என்றொரு பத்திரிக்கை தற்போது சர்க்குலேசனில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது, மேலும் உங்கள் மார்க்கெட் பலவீனப்படும் போது மற்றவர்கள் அந்த இடத்தை பிடிக்க கடும் முயற்சி செய்வார்கள்

ஜ்யோராம் = ரோசா = வன்முறையாளன் = ? = ? = ?

ரோசாவைப் பார் என்பார்
அவர் அடித்தார் என்பார்
அவர் குத்தினார் என்பார்
தெரியுதுபார் அவர் குத்தியது
மூக்கில் ஒழுகும் ரத்தத்திலென்பார்
அடித்தவர் நின்று அடித்தது
தானே என்றதால் ஆச்சி
இல்லையெனில்
அய்யகோ எப்படி நிரூபிப்பது?


மருமகன் டிவி வைத்திருந்தால்
அய்யோ கொல்றாங்க கொல்றாங்க
என்று படம் புடிச்சாவது நிரூபிக்கலாம்
போலி பிரச்சினையென்றால் கூட
அட்லீஸ்ட் ஸ்க்ரீன் ஷாட் சாட்சியாகும்
மூஞ்சியில் குத்தியவர் ஓடிப்போயிருந்தால்
மூஞ்சியில் குத்து வாங்கியதற்கு
உடைந்த மூக்கும்
மூக்கினில் ஒழுகும் ரத்தமுமே சாட்சியாம்

எத்தேச்சையானதா என்றால்
இது திட்டமிட்டதே என்பார்
அன்பாக பேசி அழைத்தார்
உணவில் விஷம் வைத்து கொல்லவே என்பார்
குடியில் அடித்துக்கொண்டதா என்றால்
நான் தான் நிறைய அவர் குடித்தது குறைவே என்பார்


ரோசாவின் பக்கமும் நியாயமிருக்குமே
குத்த தூண்டியதின் நியாமென்னவோ
என்றால்
அடுத்தவர் செயல்களை ஆராய
தன்னை மேல் நிலையில் நிறுத்தி
குத்தியதற்கு காரணம் வேண்டுமானால் இருக்கலாம்
ஆனால் நியாயங்கள் இருக்க முடியாது என
அவர்கள் என்னமோ கொலைக்கு
உடந்தை போல் என்று சிலர் அடையாளம்
சுட்டப் படுவர்

பின் நவீனச் சிந்தனையாளர்களாய் அறியப்படும்
சிலர் அடுத்தவன் பேங்க் கணக்கையும் பெட்ரூம் கணக்கையும்
சொல்வது வன்முறையில்லையா?

எழுத்தில் பெண்ணியம் பேசும் பலர்
தம் மனைவிகளையைக் கொலை செய்கின்றார்
மெதுவாக
எழுத்தில் அறம் குறித்துப் பேசுபவர் செயல்பாடுகளில்
அறமற்ற தன்மையே துறுத்தி நிற்கிறது பெரும்பாலும்

இதைப்பற்றி பேசினாலோ
எழுதினாலோ
சண்டைக்கு நிற்கிறான் பாரு
வேலையத்தவனுங்க என்கிறார்கள்

எல்லார்க்குள்ளும் கொஞ்சம் கொஞ்சம்
வன்முறையாளன் இருக்கிறான்

டைப்பர் போடாத என் பையன்
என் முதுகில் சூடாக மூச்சா போனதால்
போய் கழுவலாமா என நினைப்பதால்
பாதியில் நிற்கப் போகிறது
இந்த (இந்த வன்முறை) கவிதை

நண்பா ஜ்யோராம்,
காயங்கள் ஆறியிருக்குமென நம்புகிறேன், நலமடைந்திருப்பாய் சம்பவத்திற்கு பின் இரண்டு பதிவுகள் பார்த்தேன் உம் வலைப்பதிவில், இது ஒரு மொழிவிளையாட்டு, இது ஒரு கவிதை, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வன்முறையாளன் இருக்கிறான் அவன் வாய்ப்பை பொறுத்து கொஞ்சமாகவோ அதிகமாகவோ வன்முறை செய்கிறான், அதை மொழிவிளையாட்டாக இதில் கூறியுள்ளேன், மற்றபடி யாரையும் நக்கல் செய்தோ கிண்டல் அடித்தோ அல்லது எந்த வன்முறையையும் ஆதரித்தோ இல்லை.... என் வாக்குமூலத்தை நம்பி இதை வெறும் கவிதையாகவோ அல்லது வெறும் மொழிவிளையாட்டாக மட்டும் எடுத்துக்கொண்டு இதை ரசிக்க உங்களால் முடிந்தால் சூப்பர் ஜ்யோராம்.... மிக்க நன்றி, உங்களை கை எடுத்து கும்பிடுகிறேன்.... இதற்கு மேல் இந்த பதிவை நீங்கள் படிக்க தேவையில்லை....

ஆனால் இதை படிக்கும்போதோ அல்லது அதற்கு நான் மொழிவிளையாட்டு எல்லோருக்குள்ளும் வன்முறையாளன் இருக்கிறான் என ஒரு வியாக்கியானம் செய்யும் போதோ என் மூஞ்சி மேல ஒரு அறைவிடனுமென்று தோன்றியிருந்தாலோ, சில பல கெட்ட வார்த்தைகளை உதிர்த்திருந்தாலோ, மயிரான் என் வலி தெரியுமாடா உனக்கு என்று நினைத்திருந்தாலோ, ஏன்டா பாடு என் மூஞ்சியில் குத்தியதில் உனக்கு மொழிவிளைட்டாடா என்றோ, உன் மூஞ்சியில் எவனாவது குத்தியிருந்தா தெரியும்டா நாயே உனக்கு அதனோட வலி என்றோ அல்லது ஒரு எரிச்சலாவது ஏற்பட்டிருந்தால்... மன்னிக்கவும் நண்பா உன்னை எரிச்சல் படுத்துவதற்கோ அல்லது வேறு எதற்குமோ நான் இதை எழுதவில்லை...

மற்றவர்களுக்கு ஒரு நிகழ்ச்சி நடைபெறும்போது நமக்கு அவர்கள் வலி புரிவதில்லை, அட புரியவில்லை என்றால் மூடிக்கொண்டாவது இருக்கலாம், ஆனால் நாமோ மூடிக்கொண்டும் இருப்பதில்லை, நாம் நம் முற்போக்குத்தனத்தையும் மேன்மையையோ, நம் நவீனத்துவத்தையோ அல்லது ஹா இதெல்லாம் ஒரு மேட்டரா என்றோ பல தத்துவ இசங்களை பேசிக்கொண்டே போகிறோம் அவர்களின் உணர்வுகளை மதிக்காமல், ஆனால் ஒரு நிகழ்ச்சி நமக்கே நடக்கும்போது நாம் பிறருக்கு சொல்லும் முற்போக்கு தன்மையையும், நவீனத்துவத்தையும் மற்ற பல எழவுகளையும் கடைபிடிப்பதில்லை....

போலி = மூர்த்தி = ? = ? = ? பதிவை உம் மொழிவிளையாட்டை படித்து பார்க்கவும், ஞாபகம் இருக்கா நண்பா அன்றே நாம் தொலைபேசியில் பேசிக்கொண்டோம் இது யாரையும் ஆதரித்து அல்ல, ஒவ்வொருவனுக்குள்ளும் ஒரு போலியிருக்கிறான் என்று சொன்னீர்கள், அதே போன்றே இன்று இதற்கு நானும் ஒவ்வொருவனுக்குள்ளும் ஒரு வன்முறையாளன் இருக்கிறான் என்ற விளக்கம் சொல்லும்போது நீங்கள் என்ன நினைத்துக்கொண்டீர்கள் என்று என்னிடம் சொல்லவெல்லாம் வேண்டாம்... அன்றைக்கு போலி பிரச்சினையில் பாதிக்கப்பட்டவர்கள் உணர்வுகளை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளாமல் அதை ஒரு கவிதையாக அணுக சொல்லியிருப்பீர்கள், நீங்கள் அடிபட்டதை எழுதிய பதிவில் ஒரு அனானி நகைச்சுவையாக எழுதியிருந்ததை உங்களால் நகைச்சுவையாக எடுக்க முடியவில்லையே... இன்று உங்களால் இதை ஒரு கவிதையாக மட்டுமே அணுக முடிந்ததா என்று உங்கள் மனசாட்சியிடம் மட்டும் கேட்டுக்கொள்ளவும், முன்பும் இதே போன்றே ஒரு பதிவு சுகுணாவுக்கு எழுதியது அந்த பதிவில் சில வரிகள் மீண்டும் இங்கே

அறிவுரை முற்போக்கு புரட்சி புண்ணாக்கு எல்லாம் மற்றவர்களுக்கு பேசும்போது நல்லா தான் இருக்கும், தமக்கும் அதே சூழல் வரும் போது எப்படியாக இருக்கும் என்பதற்கான ஒரு நிகழ்வு தான்...காத்திருந்து மாட்டுனியாடா மகனே என்று நேரம் கிடைக்கும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போது குத்தி காட்டுகிறாயா என்று கேட்பீர்களானால் ஆமாம் காத்திருந்து சரியான வாய்ப்பு கிடைக்கும் போது சொன்னால் தான் உணர்வு பூர்வமாக புரியும் இல்லையென்றால் அப்போதும் முற்போக்கு மூளைக்கு சரியாக புரியாது...

இந்த பதிவு விடயத்தை சுகுணா திவாகருக்கு ஜ்யோராமுக்கு மட்டும் தெரிவிக்க வேண்டுமெனில் சுகுணாவுக்கு ஜ்யோராமுக்கு ஒரு மின் மடலோ அவரின் கைபேசியில் அழைத்தோ சொல்லியிருப்பேன், ஆனா இது சுகுணாவுக்கு ஜ்யோராமுக்கு மட்டுமல்ல, இதே போன்று எண்ணமிருக்கும் சில முற்போக்குவாதிகளுக்கும் இந்த செய்தி போக வேண்டுமென்பதால் இது பதிவாகவே ஆனது.

நண்பா ஜ்யோராம் மேலேயிருக்கும் கவிதை(?) மொழிவிளையாட்டு என் நிலைப்பாட்டினை சொல்வதற்கில்லை, உம்மை வெறுப்பேற்ற வேண்டுமென்ற ஒற்றை காரணத்திற்காக தேடி தேடி எழுதியது, நடந்த துன்ப நிகழ்வின் தொடர்பான என் நிலைப்பாட்டிற்கும் அதில் உள்ள வரிகளுக்கும் துளிகூட தொடர்பில்லை.... நான் அந்த துன்ப நிகழ்வில் ரோசாவை நிச்சயமாக அவருக்கு எத்தனை காரணங்கள் இருந்தாலும் எத்தனை நியாயங்கள் இருந்தாலும் அடித்தது மிகத்தவறு அதை நான் ஆதரிக்கவில்லை...

முன்பே இது தயாராகிவிட்டாலும் கொஞ்சம் நாளாவது ஆகட்டுமென காத்திருந்து இப்போது தான் பதிவிடுகிறேன்...

அழகிய தமிழ் பெயர் பெண் குழந்தைக்கு சூட்ட பரிந்துரையுங்கள்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தூய தமிழ் பெயரை குழந்தைகளுக்கு வைப்பது என் வட்டாரங்களில் எனக்கு அறிமுகமான இடங்களில் மிக குறைவாக (கிட்டத்தட்ட இல்லையென்றே சொல்லலாம்) முதலில் என் கல்லூரி நண்பர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு தூய தமிழ்பெயர்கள் வைக்க ஆரம்பித்தனர், அதன் பின் நானும் என்னை தொடர்ந்து என் சகோதரியும் என இப்படியாக தூய தமிழ்பெயர் வைப்பது என் வட்டத்தில் தற்போது அதிகரித்துள்ளது, தொடர்ச்சியாக பலரிடமும் தூய தமிழ்பெயர் வைப்பதின் அவசியத்தை எடுத்து கூறிக்கொண்டுள்ளோம்...

ஆனால் சிறந்த தூய புதுமையான தமிழ்பெயர்கள் கிடைப்பது அரிதாகவே உள்ளது, தமிழ்பெயர் புத்தகங்கள் எல்லாம் பெரும்பாலும் வடமொழி பெயர்களையே கொண்டுள்ளன...

என் மகனிற்கு தூய தமிழ்பெயர் சூட்ட பெயர்களை தேடினோம், இலக்கிய பாடல்களிலிருந்தெல்லாம் தேடினோம், என் நண்பனின் மகனுக்கும் இப்படியே தேடி பதிவில் இட்டோம், பல நல்ல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

என் நண்பரின் பெண் குழந்தைக்கு சூட்ட ஒரு தூய தமிழ்பெயர் தேவைப்படுகிறது, தூய தமிழ்பெயர்களை தெரிவித்து உதவுங்கள்...

Mustafa Warehouse sale Singapore

சிங்கப்பூர் முஸ்தபா நிறுவனத்தின் Warehouse sale அக்டோபர் 8 முதல் 11
வரை

பயணப்பெட்டிகள், மற்றும் LCD TV போன்றவைகள் விலை சற்று குறைவாக உள்ளன, அல்ஜூனைட் MRT யில் இருந்து பேருந்து எண் 100 எடுக்கவும்...

மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்