கணிணி அடிப்படை தொழில்நுட்ப பாடங்கள் தேவை

கணிணி அடிப்படை தொழில்நுட்ப பாடங்கள் ஏதேனும் தமிழில் தேவைப்படுகின்றன, எடுத்துக்காட்டாக விசைப்பலைகை(கீ போர்ட்) விசைகள் SHIFT Enter CTL பற்றிய விளக்கங்கள், Notepad பயன்படுத்துவது, மவுஸ் பயன்படுத்துவது போன்ற அடிப்படையான பாடங்கள் தமிழில் கிடைத்தால் தந்து உதவவும்.

தேடுபொறிகளில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை, எனவே உங்களுக்கு தெரிந்தால் இங்கே கொடுக்கவும்.

நன்றி

பிழைக்கத்தெரியாதவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

இனத்தை அடகு வைத்து பிழைத்திருக்கலாம்
உன் பேரன்கள் உலகின் பெரிய பணக்காரர்
வரிசையில் வந்து சேர

தமிழை அடகு வைத்து பிழைத்திருக்கலாம்
உன் பையன்களுக்கு மத்திய மாகாண
மந்திரிகளாக வந்து சேர

மொழியை அடகு வைத்து பிழைத்திருக்கலாம்
உன் குடும்பங்கள் ஊருக்கு ஒரு சேனல் கொண்டு
தொழிலதிபர்களாக வந்து சேர

உன் மீதான நம்பிக்கையை வைத்து பிழைத்திருக்கலாம்
உன் பதவி பறிபோகாமல் சாகும்வரை
பதவிகள் வந்து சேர

எம் இனத்துக்கான போராட்டத்தை அடக்கி பிழைத்திருக்கலாம்
பல்லாயிரம் கோடி ஊழல்கள் மூலம்
பணம் வந்து சேர


இதெல்லாம் செய்தால் பழி வந்துசேருமா?

அடப்போய்யா அண்டி பிழைக்கும் நாய்களை
விட்டு சொல்ல சொல்வோம்
ராஜதந்திரமென குரைக்க சொல்லலாம்

இதெல்லாம் இனத்துரோகி என்ற பெயர் வருமா?

அடப்போய்யா பாராட்டி பிழைக்கும்
ஓணாண்டிபுலவர்களை விட்டு நடத்துவோம்
ஒரு மொழி மாநாடு

இதெல்லாம் செய்தால் கோழையா?

அடப்போய்யா பொழைக்க தெரியாதவனே
எவன் காலை நக்கியும் பிழைக்க தெரியனும்

துரோகிகளும், பிழைப்புவாதிகளும், கோழைகளும்
நிறைந்த இந்த கேடு கெட்ட இனம்
இன்னமுமா இந்த மண்ணில் இருக்கு
என்றே வியந்திருக்கேன்
இவ்வினம் இம்மண்ணில்
பிழைத்திருப்பதே உன் போன்ற
வீரர்களாலும்
அவர்களின் ஈடற்ற தியாகங்களாலுமே


உன் போன்ற ஒரு தலைவன்
ஆயிரமாண்டுகளாய் கண்டதில்லை
எம் இனம்

உன் போன்ற ஒரு வீரன்
ஆயிரமாண்டுகளாய் கண்டதில்லை
எம் இனம்

உன் போன்ற ஒரு மனிதன்
ஆயிரமாண்டுகளாய் கண்டதில்லை
எம் இனம்

வீரர்களை பார்த்ததில்லை
மாவீரர்களையும் பார்த்ததில்லை
கேட்டிருக்கேன், கதைகள் பல கேட்டிருக்கேன்
எம் இன வீரர்களின் கதைகள் பல படித்திருக்கேன்
இதோ உன் காலத்திலேயே நாங்களும் வாழ்ந்திருக்கோம்


'ஈன'த்தலைவர்களை
எல்லாம் 'இன'த்தலைவர்களாக
நெஞ்சில் சுமந்து திரிந்திருக்கேன்

ஏ பிழைக்கத்தெரியாதவனே
நீ தான் எம் இனத்தலைவன்
தமிழனத்தலைவன்

நீ இருந்தாலும் இல்லையென்றாலும்
எப்போதும் நீ வாழ்கிறாய்
எங்கள் நெஞ்சிலும்
எம் இன சரித்திரத்திலும்

"ஈழம்- மௌனத்தின் வலி" யில் சைத்தான்களின் காவியம்!

கோமாளிகள் வசனம் பேசின
அவை கவிதையானது!
தத்துபித்து ´பஞ்ச்´ டயலாக்குகள்
வீர வசனங்களாயின,
அவை வியாபாரமானது.
ஏகாதிபத்யம் மனிதநேயத்தை
சாமியார்களின் போதனைகளாக்கின!
அவை ´அன்பே´ சிறந்தது.
தீவிரவாதம் ஒழியட்டும்,
´அன்பே´ மனிதனை ஆளட்டும் என்கிறது!

யுத்தத்தில் இறந்த ஈழத் தமிழர்களின் ஒரு மசுறுக்கு கூட இந்த புத்தகத்தை சமர்ப்பிக்க முடியாதபோது, ஈழத்தமிழர்களின் வலிகளை வியாபாரமாக்க முயலும் வியாபாரிகளின் குரூரத்தை நாம் அம்பலப்படுத்தவே முயல்கிறோம். உண்மையான உணர்வாளர்கள் ஒவ்வொருவரும் இப்புத்தகத்தை புறக்கணிக்க வேண்டும்.

என்று பொங்குகிறார் தோழர் தமிழச்சி, மேலும் முழு கட்டுரையும் படிக்க செல்லுங்கள் இங்கே

பெரியாரியத்தை மதமாக்கும் சில பெரியாரிஸ்ட்கள்


இந்த கட்டுரை யாரையும் காயப்படுத்தவோ வருத்தப்படுத்தவோ அல்ல, சில நேரங்களில் சுயவிமர்சனங்கள் தேவைப்படுகின்றன, அப்படியானதொரு சுயவிமர்சனம் தான் இது...

மதங்கள் எப்படி தோன்றியிருக்கும் அது எப்படி மிகவும் இறுக்கமானதாக மூர்க்கமானதாக மாறியிருக்கும் என்பது பற்றி பல நேரங்களில் விளங்கிக்கொள்ள முயற்சித்திருக்கிறேன், அதை எனக்கு தற்போது முழுமையாக செய்முறையாக விளக்கிக்கொண்டிருக்கின்றார்கள் சில பெரியாரிஸ்ட்கள்...

எல்லா காலங்களுக்கும் எல்லா மக்களுக்கும் எல்லா சூழலுக்கும் பொறுந்தக்கூடிய கருத்தோ நியாயமோ இருக்கவே முடியாது, எனவே எந்த கருத்துகளையும் யார் சொல்லியிருந்தாலும் அது எந்த சூழலில் யாருக்கு சொல்லப்பட்டிருக்கின்றது(context) என்பதை கணக்கில் எடுத்து அதன் வழியாக தான் அந்த கருத்துகளை புரிந்து கொள்ளவேண்டுமேயொழிய அந்த வார்த்தைகளை அப்படியே எடுத்துக்கொண்டு அதை எக்காலத்துக்கும் எல்லா சூழலுக்கும் எல்லா மனிதர்களுக்கும் பொறுத்தி பார்க்க கூடாது, ஆனால் எல்லா மதங்களும் சொல்வது அவர்களின் புனித நூல்கள் சொல்லும் கருத்துகள் எக்காலத்துக்கும் எப்போதுமே பொறுந்தும் என்பதே...

புரியாத சடங்குகள் பற்றிய புரிதலை கொடுத்தது ஒரு ஜென் கதை, எல்லோருக்கும் தெரிந்த கதை தான், ஒரு ஜென் துறவி தம் சீடர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருப்பார், அப்போது அவர் வளர்த்துக்கொண்டிருந்த பூனை இதற்கு இடையூறாக குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தது, எனவே ஜென் துறவி வகுப்பு ஆரம்பிக்கும் முன்பு அந்த பூனையை பிடித்து கட்டி போட சொன்னார். ஒரு நாள் ஜென் துறவியும் இறந்து போக கொஞ்ச நாளில் பூனையும் இறந்து போக புதிதாக பொறுப்புக்கு வந்த துறவி வகுப்பு எடுக்கும் முன் சீடர்களை பார்த்து கேட்டாராம் ஏன் இன்று பூனையை கட்டி போடவில்லை என்று, அதற்கு பூனை செத்து போயிவிட்டது என்றார்களாம், அதனாலென்ன இன்னொரு பூனையை வாங்கிக்கொண்டு வந்து கட்டி போடுங்கள் உங்களுக்கு தெரியாதா வகுப்பு எடுக்கும் முன் பூனையை கட்டிப்போடுவது நம் பெரிய துறவி ஏற்படுத்திய வழக்கமென்று...இந்த கதை சடங்குகள் எப்படி ஒரு புரிதலின்றி நடத்தப்படுகின்றது என்பதை புரியவைக்கும்.

ஒரு பெரியாரிஸ்ட் என சொல்லிக்கொள்பவர் காலையில் எக்காரணம் கொண்டும் குளிக்க மாட்டார் மாலையில் தான் குளிப்பார், காலையில் குளிப்பது நம் பழக்கமில்லை என்பார், அது பார்ப்பனர்கள் உருவாக்கிய வழக்கம் என்பார், சரி நல்லது ஆனால் அதற்காக எக்காரனம் கொண்டும் காலையில் குளிக்க கூடாது என்ற சடங்கை பின்பற்ற தேவையில்லை ஆனால் அவர் எந்த சூழலிலும் எந்த காரணத்துக்காகவும் காலையில் குளிக்க கூடாது என்ற சடங்கை கடுமையாக பின்பற்றுகிறார்.

விடுதலை பத்திரிக்கையில் ஒரு கட்டுரை வருகிறது, நாம் நம் குடும்பங்களோடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் இப்படி குடும்பங்களாக கலந்துகொள்வதால் திருமண உறவுகள் நம் இயக்க தோழர்களின் குடும்பங்களுக்குள் உருவாகும் என்கிறார்கள், இப்படித்தானே கோவிலிலும் மற்ற விழா நிகழ்ச்சிகளிலும் நடைபெறுகிறது, சரி இது கூட பரவாயில்லை

கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு பெண்ணை ஒரு பெரியாரிஸ்ட் திருமணம் செய்கிறார் அதெப்படி கடவுள் நம்பிக்கை உள்ள பெண்ணை திருமணம் செய்யலாம் நீயெல்லாம் ஒருபெரியாரிஸ்ட்டா என இன்னொரு பெரியாரிஸ்ட் விமர்சிக்கிறார், அப்படியென்றால் ஒரு பெரியாரிஸ்ட் இன்னொரு பெரியாரிஸ்ட்டை மட்டும் தான் திருமணம் செய்ய வேண்டும் போல அடடே இப்படி தானே ஒரே மதத்திற்குள் மட்டுமே திருமண உறவுகள் என்று மதங்கள் தங்களை இறுக்கிக்கொள்கின்றன.

பெரியார் திருமணத்தை பற்றியும் குழந்தை பெற்றுக்கொள்வதை பற்றியும் கருத்துகளையும் விமர்சனங்களையும் வைக்கிறார் அவர் பெண் விடுதலை என்ற நோக்கில் இதை நெறி செய்கிறார், ஆனால் ஒரு சில பெரியாரிஸ்ட்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாத திருமணம் செய்யாமல் சேர்ந்து மட்டுமே வாழனும் என்று எதிர்பார்க்கிறார்கள் (சிலர் இதை பெண்களிடம் நூல்விட பயன்படுத்தியுள்ளார்கள் என்பது வேறு கதை), பெண் விடுதலை என்பதன் அடிப்படையிலேயே பெரியார் அதை சொல்லியிருப்பார் அவரே திருமணமும் செய்திருக்கார், ஆனால் இவர்கள் பெண் விடுதலையை தூக்கிப்போட்டுவிட்டு திருமணமும் குழந்தையும் வேண்டாமென்று பெரியாரின் கருத்துகளை உதிர்த்துவிட்டு வார்த்தைகளாக மட்டுமே பின்பற்றிகிறார்கள் வேதங்களை பின்பற்றுவது போல.

எப்படி மதத்தை பின்பற்றுபவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் மதத்தை சிறு வயதிலிருந்தே திணிக்கின்றார்களோ அதே போல பல பெரியாரிஸ்ட்கள் குடும்பங்களில் சிறு வயதிலிருந்தே கடவுள் இல்லையென்றும் பெரியாரியமும் திணிக்கப்படுகின்றது, இப்படியாக சிறு வயதிலிருந்தே மதத்தை போல பழக்கப்படுத்தப்படும்போது(புரிந்து தெளிந்து ஏற்றுகொள்பவர்களை குறிப்பிடவில்லை) எப்படி மதவாதிகளால் அவர்கள் மதத்தை தாண்டி பார்க்க இயலாதோ அதே போல இவர்களும் ஆக்கப்படுகிறார்கள்.

மிஷனரி கல்வி நிறுவங்கள், இந்து மடம் கல்வி நிறுவங்கள் போன்றவற்றில் மதப்பிரச்சாரம் வலிந்து திணிக்கப்படுகிறது என்று விமர்சித்துக்கொண்டே பெரியார் மணியம்மை கல்லூரியில் மாணவிகளின் பெட்டிகள் திறந்து பார்க்கப்படுகின்றன சாமி படம் எதுவும் வைத்திருக்கிறார்களா என்று, மாணவிகள் கடவுள் நம்பிக்கையுடன் உள்ள சின்னங்களை அணிய அனுமதிப்பதில்லை(கல்லூரியில் இல்லையென்றாலும் விடுதியிலாவது அணுமதிக்கலாமே?)படிக்கிறார்களோ இல்லையோ எல்லோருக்கும் திராவிடர் கழக பத்திரிக்கை சந்தா கட்டியாக வேண்டும் அந்த பத்திரிக்கை அவர்கள் வீட்டுக்கு போய்விடும், இங்கே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை நிராகரிக்கின்றார்கள், அதிகாரம் உள்ளதால் தங்கள் நம்பிக்கையை வலிந்து திணிக்கின்றார்கள், பெரியாரியலை புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டியதை வருத்தி திணிக்கிறார்கள், இவைகளைத்தானே மதங்களும் செய்கின்றன பிற மதத்தவர்கள் மீது.

ஒரு பெரியாரிஸ்ட் பெரியாரின் தாடி மயிர் எங்களிடம் உள்ளது, இதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம், பாதுகாப்பாக வைத்திருக்கோம் என்கிறார். என்ன புத்தர் பல் பாதுகாக்கப்படுவது நினைவுக்கு வருகிறதா?

இதற்கடுத்ததாக பெரியார் கொள்கைகளை சரியாக எடுத்து செல்லவில்லை என்ற சண்டை அதில் இயக்கம் உடைகிறது, ஒரு குழு தாங்களே உண்மையான பெரியார் தொண்டர்கள் அவரோட எழுத்துகள், புத்தகங்கள் (மற்றும் சொத்துகள்) எங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று வழக்கு போடுகிறார்கள், கேட்டால் மற்றவர்கள் பெரியாரின் எழுத்துகளை திரித்துவிடுவார்கள் என்கிறார்கள் ஆகா இப்படித்தானே ஹீனயானமும் மகாயானமும் புத்தமத்தில் உருவானது, இப்படித்தானே கத்தோலிக்க, புராட்டஸ்டண்ட் உருவானது.

பெரியாரின் எழுத்துகளுக்கு சொந்தம் கொண்டாடும் திராவிடர் கழகமும் அதன் தொண்டர்களும் பெரியாரின் எழுத்துகளையே தங்கள் தலைமை திணித்துள்ள வாரிசை ஏற்றுக்கொள்ள பயன்படுத்துகிறார்கள், மதவாதிகள் எல்லாவற்றையும் அவர்களின் வேத நூலில் இருந்தே எடுத்து நியாயப்படுத்துவதை போல.


தமிழ் ஓவியா அவர்களின் கட்டுரைகளை படித்துவிட்டு ஒருவர் உரையாடியில் கேட்டார்
--------------------
10:11 PM நண்பர்: thala
tamiloveiya post la periyar solli irukiratha potirukare athu nijama?
10:13 PM me: யெஸ்
100% அவர் சொன்னது தான்
நண்பர்: kodumai :)) ithuku karunanithi better
-------------------
மற்றொரு நண்பர் உரையாடியில் பேசியது
1:05 PM நண்பர்: என்ன கொடுமை தலைவா இது
me: edhu?
நண்பர்: இப்படி பட்ட மீனிங்கா பெரியார் சொன்னார்? தமிழ் ஓவியா பதிவு பற்றி
me: எதை சொல்றீங்க
1:06 PM அதுக்கு தான் சொன்னேன் தாலிபான் என்று தல
1:07 PM நண்பர்: பெரியாரும் ஒரு கும்பலை இப்படி ஆக்கி வைத்திருக்கிறாரே என்று

வருத்தம் வருகிறது :(
1:08 PM me: இல்லை
நண்பர்: இயக்கத்துக்குள் பகுத்தறியக்கூடாதா??
me: உலகத்தில் எதுவுமே எக்காலத்துக்கும் எல்லா இடத்திலும் எல்லோருக்கும்
பொறுத்தமான சரியான ஒன்று உலகில் எப்போதுமே இல்லை
1:09 PM பெரியாரின் எழுத்துகள் மட்டுமின்றி எல்லோருடையதும் அபப்டித்தான்
நண்பர்: மந்தையாய் வாழ்வதே இயக்கம் மாதிரி அர்த்தமாயிடுச்சே தமிழ் ஓவியா சொல்வது

:(
me: சூழ்நிலைகளையும் எம்மாதிரியான தருணங்களில் சொல்லப்பட்டது
என்பது முக்கியம்
---------------------
ராமசாமி சொல்றான்னு நான் சொல்ற எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள், நீங்கள் உங்கள் பகுத்தறிவைக்கொண்டு ஆராய்ந்து பாருங்கள் என்று சொன்ன பெரியாரை ஒரு சர்வாதிகாரி போன்றும் மாற்று கருத்துகளுக்கு மதிப்பளிக்காதவராகவும் போன்ற தோற்றம் அளிக்கும் வகையில் தமிழ் ஓவியா பெரியாரின் கருத்துகளை எடுத்து போட்டுள்ளார்.

ஒரு முறை திரு.வீரமணி அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது கீழ் வெண்மணி கொடுமை நடந்த பின் பெரியார் கம்யூனிஸ்ட் கட்சிகளை தடை செய்ய சொல்லி அறிக்கை விட்டாரே சரியா என்று கேட்ட போது திரு வீரமணி அவர்கள் கூறியது என்னவெனில் அதை அப்படியே இன்றைக்கு சொன்னது போல எடுத்துக்கொள்ள கூடாது, எந்த சூழலில் அதை சொன்னார் என்று கவனிக்க வேண்டும், அப்போது தான் அண்ணாதுரை ஆட்சிக்கு வந்துள்ளார், அந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க வேண்டுமென திட்டத்தில் பலர் இதை காரணமாக வைத்து பிரச்சினைகள் செய்தனர் என்றார். அப்போது புரிந்து கொண்டேன் பெரியாரை பிழையாமை வேண்டும் என்று ஆனால்

தமிழ் ஓவியா அவர்கள் பெரியார் கூறிய இயக்க கட்டுப்பாடு பற்றி கூறிய கருத்துகளை எந்த சூழலில் கூறினார் என்பதை சொல்லாமல் மொட்டையாக பெரியார் வார்த்தைகளை போட்டதால் பெரியார் மிக மோசமான கருத்தை சொன்னதான தோற்றம் நண்பர்களுக்கு ஏற்பட்டுள்ளது, பெரியார் ஒரு சர்வாதிகாரி போன்றும் மாற்று கருத்துகளுக்கு மதிப்பளிக்காதவராகவும் போன்ற தோற்றம். பெரியார் எந்நிலையில் அதை கூறினார், திராவிடர் கழகம் என்ற சமூக விடுதலை இயக்கத்தை அதன் அடிப்படையிலிருந்து அதை விலக்கி அதிகாரத்தை கைப்பற்றும் ஒரு கருவியாக அண்ணாதுரை அவர்கள் பயன்படுத்த விரும்பியதும் அதற்கு திராவிடர் கழகத்தினுள்ளேயே பெரும் ஆதரவு உருவாகியதுமான (பின்னே அதிகாரம் பெறுவதென்றால் ஆதரவுக்கா பஞ்சம்) நிலையில் கருத்தாடல்கள், அறிவுஜீவித்தனம், விவாதம் என்ற பெயரில் கழகத்தின் அடிப்படையான சமூக விடுதலை இயக்கம் என்பதிலிருந்து விலகி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென்ற அண்ணாதுரைக்கு ஆதரவு திரட்டப்படுவதுமான சூழலில் பெரியார் இப்படியான கருத்துகளை தெரிவித்தார், அப்படியான ஒரு சூழலா இன்று இயக்கத்தில் உள்ளது? இவர்கள் தங்கள் தலைமையின் மீதான விசுவாசத்தையும் அடிமைத்தனத்தையும் நியாயப்படுத்த பெரியாரின் எழுத்துகளை பயனபடுத்துகிறார்கள்...

இந்த மாதிரியாக நடந்துகொள்ளும் பெரியாரிஸ்ட்கள் புரிந்து ஏற்றுக்கொண்டு அனுபவிக்க வேண்டிய பெரியாரியத்தை மதங்களை போல பழக்கத்திலும் புரிந்து கொள்ளாமலும் பின்பற்றுவது பெரியாரியத்தையும் இன்னொரு மதமாக்காமல் இவர்கள் ஓயமாட்டார்கள் என்றே தோன்றுகிறது, கருப்பு சட்டை போடுவதும் 'மானமிகு' என்று அழைத்துக்கொள்வதையும் சடங்காக்கிவிடாதீர்கள்...

திராவிடர் கழகத்தின் வர்ணாசிரம தலைமையும் மானங்கெட்ட மானமிகுகளும்

திராவிடர் கழகம் கண்ட பெரியாரின் மிக முக்கிய கொள்கை வர்ணாசிரம எதிர்ப்பு மற்றும் சுயமரியாதையை வலியுறுத்தல், வர்ணாசிரமம் என்றால் என்ன? பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே உயர்வு தாழ்வு பார்ப்பது, பிறப்பின் அடிப்படையில் தகுதியை நிர்ணயிப்பது, பிறப்பின் அடிப்படையில் பலரை தாழ்த்தி சிலரை உயர்த்துவது... பாவம் திராவிடர் கழக கூடாரத்தில் இருப்பவர்கள் பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு பார்ப்பதை வெறும் சாதி அளவில் மட்டும் என்று நினைத்துவிட்டார்கள் போலும், அது தலைவரின் மகன் என்ற பிறப்பின் அடிப்படையில் பதவி வழங்குவதும் வர்ணாசிரமம் தான் என்பதை மறந்துவிட்டார்கள்

சுயமரியாதை என்பதை பெரியார் வலியறுத்திய மிக முக்கியமான ஒன்று, சுயமரியாதை என்பது தம்முடைய மரியாதைக்கும் சுயத்துக்கும் இழுக்கு ஏற்படுத்தும் எதையும் வற்புறுத்தலாலோ அல்லது மதத்தின் பெயராலோ அறியாமையாலோ ஏற்று கொள்ளாமல் எதிர்த்து போராடுவது, அதனாலேயே திராவிடர் கழகத்தின் தலையிலிருந்து வால்வரை அத்தனை பேரும் "மானமிகு" என்று அழைத்துக்கொள்வதும் போட்டுக்கொள்வதும்.

திராவிடர் கழகத்திற்கு நாம் பெரியாரின் கருத்துகளை விளக்க வேண்டிய கொடுமையை பாருங்கள்...

திராவிடர் கழகத்தின் எத்தனையோ செயல்வீரர்கள், அனுபவமும் திறமையும் மிக்க அடுத்த கட்ட தலைவர்கள், கழகத்திற்காக முழு நேரமும் பாடுபட்டவர்கள், தம் வாழ்க்கையையே அற்பணித்தவர்கள் என பலரும் இருக்கும் போது ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களின் புதல்வர் திரு.அன்புராஜ் அவர்கள் கழகத்தின் அதிகாரம்மிக்க பதவிக்கு வந்துள்ளர், அதாவது வர்ணாசிரமத்தின்படி பிறப்பின் அடிப்படையில் பதவிக்கு வந்துள்ளார், பிறப்பின் அடிப்படை என்பது பார்ப்பான், சத்திரியன், வெள்ளாளன், தலித் மட்டுமா? தலைவரின் மகன் என்ற அடிப்படையில் வழங்கப்படும் பதவி பிறப்பின் அடிப்படையில் இல்லையா? இந்த கூட்டத்தில் தலைவர் சொன்னதாக பத்திரிக்கையில் வெளியான செய்தி என்னவென்றால் இந்த நியமணத்திற்கு என்ன எதிர்ப்பு வந்தாலும் அதை எதிர்கொள்ள தயார் என்றாராம், அதாவது தலைவர் எதற்கும் துணிந்து தான் இந்த வேலையை செய்துள்ளார்.

திமுகவில் வாரிசு அரசியல் இல்லையா, பாமகவில் இல்லையா என்று வாதத்திற்கு வரும் முன் அவைகள் எல்லாம் ஓட்டு பொறுக்கி அரசியல் கட்சிகள், திராவிடர் கழகம் தான் ஓட்டுப்பொறுக்காத சமூக விடுதலை இயக்கமாச்சே,வர்ணாசிரமத்தை எதிர்க்கும் பேரியக்கமாச்சே இங்கே ஏன் இப்படி?

பெரியாரின் பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு பார்ப்பதை எதிர்க்கும் கொள்கைக்கு தான் திக தலைமை குழி தோண்டி புதைத்துவிட்டதென்றால் அதன் "மானமிகு" தொண்டர்களும் நிர்வாகிகளும் பெரியாரின் சுயமரியாதைக்கு பாடை கட்டியுள்ளனர்.

திரு.அன்புராஜ்க்கு பதவிபிரமாணம் செய்ய தலைமை முடிவெடுத்திருந்தாலும் திராவிடர் கழக "மானமிகு" தொண்டர்களும் நிர்வாகிகளும் என்ன செய்திருக்க வேண்டும், கழக தொண்டு, கழக பணிகள், அனுபவம், தியாகம், திறமை இவைகளையெல்லாம் தாண்டி திரு.அன்புராஜ் அதிகாரம்மிக்க பதவிக்கு அறிவிக்கப்பட்டிருப்பது இந்த திறமையான மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள் இவர்களை எல்லாம் தகுதி குறைத்த செயல்தானே, இவர்களுடைய தகுதி குறைக்கப்பட்டது என்பது இவர்களின் சுயமரியாதைக்கு இழுக்குதானே, இந்த மானமிகுகளின் சுயமரியாதைக்கு இழுக்கு என்றவுடன் என்ன செய்திருக்க வேண்டும், தலைமையை எதிர்த்து குரல் எழுப்பியிருக்க வேண்டாமா?

இந்த நியமணத்தை எதிர்த்து போராடியிருக்க வேண்டாமா சுயமரியாதையை தன் மூச்சாக கருதிய பெரியாரின் இந்த தொண்டர்கள்... மத நம்பிக்கைகளையும், மூட நம்பிக்கைகளையும் அடிமைத்தனத்தையும் (அடிமைத்தனம் எந்த உருவத்தில் என்றாலும் பாசம், எஜமான விசுவாசம், மத நம்பிக்கை, காதல் என எந்த உருவத்திலும்) எதிர்த்த பெரியாரின் இந்த மானமிகு தொண்டர்கள் எந்த விசுவாசத்தின் அடிப்படையில் இதை சகித்துக்கொண்டுள்ளார்கள்?

இதையெல்லாம் பார்க்கும்போது இவர்கள் போடும் கருப்பு சட்டைக்கும் "மானமிகு" அடைமொழிக்கும் பொருள் புரிந்து தான் போடுகிறார்களா? அல்லது இவர்களும் காவி உடுத்தி பெயரின் முன் ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜல்சானந்தா சுவாமிகள் என்று போடுவது போல கருப்பு சட்டையையும் "மானமிகு" அடைமொழியையும் பயன்படுத்துகிறார்களா என்று புரியவில்லை

தலைப்பு கடுமையாக இருக்கிறது என்று நினைத்தால் பார்பனீயத்தையும் வர்ணாசிரமத்தையும் எதிர்த்து திக வினர் வெளியிட்ட கட்டுரைகளின் தலைப்புகளின் கடுமையை பார்க்கும்போது இந்த தலைப்பெல்லாம் ஒன்றுமேயில்லை.

இணைப்புகள்

அப்பாடா! சுமை இறங்கியது!

இந்தச் சூழலில் அன்புராஜ் தான் உருவாக முடியும்!

சாமி,ரூசோ,தாகி மற்றும் பலர் திமுகவினரின் சகோதர படுகொலைகள்

சாமி,ரூசோ,தாகி,சீனி.பன்னீர்செல்வம் மற்றும் பல உட்கட்சி தகராறுகளில் கொல்லப்பட்ட திமுகவினர், யார் இவர்களெல்லாம்,இவர்களை கொன்றவர்கள் யார்? கொன்றது எந்த கட்சிகாரர்கள், எடுத்து பார்த்தால் திமுகவின் முக்கிய புள்ளிகளான அவர்களை வெட்டி யும், குத்தியும், சுட்டும் கொன்றதும் திமுக காரர்கள்தான்.

ஒரே நோக்கத்திற்காக போராடும் இரண்டு இயக்கங்கள் கருத்து வேறுபாட்டால் அடித்துக்கொண்டால் அது சகோதர மோதல்கள் சகோதர படுகொலைகள், அப்போது ஒரே இயக்கத்துக்குள் அவைகள் நடந்தால் அதன் பெயர் என்ன? திமுகவினரின் சகோதர படுகொலைகள் என்று சொல்வதா? திமுகவினரின் தற்கொலைகள் என்று சொல்வதா?

யாம் எந்த படுகொலைகளையும் நியாயப்படுத்தவோ, ஆதரிக்கவோ இல்லை, எல்லா படுகொலைகளும் கண்டிக்கத்தக்கவையே, எல்லா படுகொலைகளும் மனிதத்தன்மையற்றவையே...

மூச்சுக்கு முன்னூறு முறை தன்னுடைய இன துரோகத்தை மறைக்க கருணாநிதி பரப்புரை செய்யும் சகோதரபடுகொலைகள் என்றும் திசை மாற்றும் கருணாநிதி இந்த படுகொலைகளுக்கு என்ன பெயர் சொல்வார்?

திமுக ஒரு ஆயுதம் ஏந்தாத இயக்கம், அரசியல் கட்சி, இராணுவத்திடமிருந்தோ அரசிடமிருந்தோ எந்த உயிர் அச்சுறுத்தல்களும் இல்லாத இயக்கம், திமுகவினர் எந்த இராணுவத்தாலும், காவல்துறையாலும் பார்த்த இடத்திலே சுட்டுத்தள்ளப்படுவார்கள் என்ற நிலையில் இல்லாத ஒரு இயக்கம், அதன் தலைமையை பல நாடுகளின் உளவுத்துறையாலோ இராணுவத்தாலோ கொல்லப்படும் அபாயமில்லாத நிலை, தினம் தினம் சுற்றியிருப்பவர்களால் உயிராபத்து ஏற்படுமோ என்ற நிலை இல்லாத போதும் ஏன் இத்தனை படுகொலைகள் அதுவும் சொந்த கட்சிகாரர்களையே கொல்லும் படுகொலைகள், இதில் நாம் திமுகவினர் கொன்ற அதிமுக, மதிமுக மற்றும் பல மாற்று கட்சிகாரர்களை நாம் கணக்கில் எடுக்கவேயில்லை...

திருப்பத்தூர் அரசியலில் வளர்ந்து வந்த இளம்தலைமுறை ரூசோவை உட்கட்சி அரசியலுக்காக கொன்றவர்களை கட்சி தலைவர் கருணாநிதி என்ன செய்தார்?

தாகி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள், அப்போ தாகியை கொன்றது யார்? தாகி ஒரு வேளை தற்கொலை செய்து கொண்டாரா?

வைகோ, எம்ஜிஆர் மற்றும் பலர் தலைமையுடன் முரண்பட்ட போது கழுத்தை பிடித்து இயக்கத்தை விட்டு வெளியேற்றினாரே கருணாநிதி, ஒரு வேளை திமுக ஆயுதம் தாங்கி போராடும் இயக்கமாக இருந்திருந்தால்? இவர்கள் கதி? இவர்கள் வாய்வீச்சு அரசியல் செய்து கொண்டிருந்ததற்கு பதில் ஆயுத போராட்டம் செய்து கொண்டிருந்தவர்கள் என்றிருந்தால் என்ன ஆகி இருக்கும், இவர்கள் கையில் ஆயுதம் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்யலாம்...

ஆட்சியும் அதிகாரமும் ஊடகமும் கையில் இருக்கிறது என்பதற்காக தம் இனத்துரோகத்தை மறைக்க தம் பொய் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டுக் கொண்டும் தம் துரோகத்தை மறைக்க தமிழ்செம்மொழி மாநாடு நடத்தவும் தலைப்பட்டிருக்கும் இவர்களை இன்னமுமா இனமான தமிழர்களும் மூளையுள்ள தொண்டர்களும் நம்புகிறார்கள்?

இந்த பதிவின் பின்னூட்டங்கள் கடும் மட்டுறுத்தலுக்குள்ளாகும், பதிவிற்கு தொடர்பில்லாத எந்த பின்னூட்டங்களும் அனுமதிக்கப்படாது

ஜெகத்கஸ்பர் அருட்தந்தையா? புளுகுமூட்டையா?

ஃபாதர் ஜெகத்கஸ்பர் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகும் பெயர், நான்காம் ஈழத்தில் நான்காம் கட்டப்போர் உச்சத்தை எட்டியிருந்த போது தமிழகத்தில் தேர்தல் உச்சத்தில் இருந்தது, அந்த நேரத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மீது மிக கடுமையாக விமர்சனம் எழுந்தது, திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தமிழின துரோகம் அக்கூட்டணிக்கு தேர்தல் தோல்வி ஏற்படுத்துமென்றே நம்பப்பட்டது.

அந்த நேரத்தில் ஃபாதர் ஜெகத்கஸ்பர்(கனிமொழி கருணாநிதி யின் நண்பர் மற்றும் திமுக ஆதரவாளர், ஜெயலலிதாவினால் புலி ஆதரவாளர் என விமர்சிக்கப்பட்டவர், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கைது செய்யப்பட்டுவிடுவார் என்றே நம்பப்பட்ட ஒருவர்) ஈழப்போராட்டம் பற்றிய பதிவுகளை எழுத ஆரம்பித்தார்...

அவரோட பதிவுகள் எல்லாம் இயக்குனர் சங்கர் படங்களை போன்றே இருந்தன, பல உண்மைகளுக்கு இடையில் தம் பொய் பரப்புரைகளை புகுத்துவது, முதலில் இலை மறைவாக தமிழகத்தின் ஈழத்தமிழ் ஆதரவு தலைவர்களை(இவர்களை எல்லாம் யோக்கியம் என்று சொல்லவில்லை) விமர்சித்தார் அவரோட விமர்சனம் எல்லாமே கருணாநிதியையும் காங்கிரசையும் காப்பது போன்றே இருந்தது.

நக்கீரனில் ஒரு பதிவில் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை குறிப்பிட்டு இவர் போர் நிறுத்தத்திற்கு மிகவும் முயன்றதாகவும் கனிமொழி கண் உறங்காமல் பாடுபட்டதாகவும் எழுதினார், பாவம் நக்கீரன் லேஅவுட் மற்றும் ஃப்ரூப் ரீடர்கள் கண்ணில் அது படவில்லையோ என்னமோ, நக்கீரனின் வேறு கட்டுரைகளின் பக்கங்களில் வேட்டி கட்டிய உயர்ந்த பதவியில் இருக்கும் முக்கிய தமிழர் இன்னுமா முடிக்கலை, இன்னும் என்னவெல்லாம்தான் உதவி செய்வது என்று சிங்களனை திட்டிக்கொண்டே அந்த உயர்மட்ட கூட்டத்திற்கு கலந்து கொள்ள சென்றார் என்று எழுதியிருந்தார்கள், இதில் எது உண்மை?

போர் நிறுத்தத்திற்கு தமிழக காங்கிரஸ் பெரியமனிதர்(ப.சிதம்பரம்?) மற்றும் திமுக பெரிய இடத்து ஆட்கள் எல்லாம் உறங்காமல் முயன்று கொண்டிருந்த போது தமிழகத்தின் முக்கிய ஈழ ஆதரவு தலைவர்கள் இன்னமும் நிலமை மோசமாகட்டும் அப்போது தான் நாம் இங்கே தேர்தலில் வெற்றி பெறலாமென ஜெகத் கஸ்பர் காது பட பேசினார்களாம், கனிமொழியின் நண்பர், திமுகவின் ஜால்ரா ஜெகத் கஸ்பர் காதில் விழுமாறு பேசும் அளவிற்கு அந்த தலைவர்கள் கேணையர்களா? அவ்வளவு தூரம் சொல்பவர் ஏன் கிசு கிசு பாணியில் எழுத வேண்டும் பெயரை சொல்ல வேண்டியது தானே?

போர் முடிந்தும் இப்போதும் திமுகவிற்கும் காங்கிரசுக்கும் விழுந்த துரோக கறையை துடைக்க முடிந்த அளவிற்கு தம் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுக்கொண்டே இருக்கின்றார் அருட்தந்தை.

தற்போது ஒரு போராளி போன் செய்து சொன்னார் என்றும் பொய்யான நம்பிக்கையை தந்தார்கள் தமிழக தலைவர்கள் அதனால் தான் எல்லாம் போயிருச்சி என்றும் மீண்டும் ஒரு முறை இவர்கள் மீது விழுந்து பிடுங்கியுள்ளார் அருட்தந்தை? போயும் போயும் இந்த தலைவர்கள் தந்த கணிப்புகளை நம்பி செயல்படும் அளவிற்கு கேணத்தனமாகவா இருந்தார்கள் போராளிகள்? அருட்தந்தையின் புளுகுமூட்டைகளுக்கு அளவேயில்லையா?

ஈழத்தமிழர் விசயத்தில் இப்படித்தான் தமிழகத்தின் ஒவ்வொரு இயக்க ஆட்களும் தங்கள் தலைமைகளுக்கு சப்பைகட்டு கட்டிக்கொண்டுள்ளார்கள் தங்கள் தலைமைகளின் துரோகம் தெரிந்தும்.

ஈழத்தமிழர்கள் விசயத்தில் தமிழகத்தின் அத்தனை பேரும் துரோகம் செய்துள்ளார்கள், கட்சி தலைமைகளுக்கு அடிமைகளாய் அவர்களின் துரோகங்கள் தெரிந்திருந்தும் அதை சப்பைகட்டு கட்டும் காவல்நாய்களாய் இருக்கும் தொண்டர்கள், பணத்திற்காக தங்கள் வாக்குகளை விற்ற பொதுமக்கள் என அத்தனைபேருக்கும் பொறுப்பு உண்டு.

அருட்தந்தை ஜெகத்கஸ்பர் கனிமொழிக்கு கூஜா தூக்கட்டும், திமுகவுக்கு ஜால்ரா போடட்டும் ஏன் உடன்பிறப்பாக மாறி தலைவர் வாழ்க, தளபதி வாழ்க கோசமும் கூட போடட்டும் ஆனால் ஈழத்தமிழ் போராட்டத்தில் தம் ஈனத்தனத்தை காட்ட வேண்டாம்.

நக்கீரன் பத்திரிக்கைக்கு ஒரு நிகழ்வை சுட்டிக்காட்ட விரும்புகிறேன், நக்கீரனுக்கு முன்பு தராசு என்றொரு பத்திரிக்கை இருந்தது, ஷ்யாம் அதன் ஆசிரியர், தராசு பெரிய அளவில் விற்பனையில் இருந்தது, மிகப்பிரபலமான அரசியல் பத்திரிக்கை, அந்த பத்திரிக்கைக்கும் திமுக(மற்றும் அப்போதைய உள்துறை செயலாளர் நாகராஜன்)வுக்கும் பிரச்சினை எழுந்தது, பாக்சர் வடிவேலு தலைமையில் ரவுடி கும்பல் அந்த பத்திரிக்கையின் உள் புகுந்து அடித்து இருவரை கொலை செய்தனர்.

இதை சமாளிக்க ஜெயலலிதா ஆதரவுக்கு மாற துவங்கியது இந்த தராசு பத்திரிக்கை, கொஞ்சம் கொஞ்சமாக அதன் நடுநிலை குறைய ஆரம்பித்த போது நக்கீரன் களம் இறங்கி மொத்த தராசு வின் வியாபரத்தையும் எடுத்துக்கொண்டு மிகப்பிரபலமானது.

நக்கீரன் பத்திரிக்கைக்கும் ஜெயலலிதாவிற்கும் மிகப்பெரிய பிரச்சினைகள் நடந்துள்ளது, இன்னமும் இருக்கலாம், அதற்காக திமுக மற்றும் கருணாநிதியின் முழு ஜால்ராவாக மாற ஆரம்பிப்பது நக்கீரன் பத்திரிக்கையின் வியாபாரத்திற்கும் அதன் நடுநிலைக்கும் சரியானதாக இருக்காது. திமுக சார்புநிலை என்பதை தாண்டி திமுக ஜால்ரா என்ற நிலைக்கு நக்கீரன் சென்று கொண்டுள்ளது.

தற்போது அரசியல் பத்திரிக்கைகளே இல்லையென நினைக்க வேண்டாம் "தமிழக அரசியல்" என்றொரு பத்திரிக்கை தற்போது சர்க்குலேசனில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது, மேலும் உங்கள் மார்க்கெட் பலவீனப்படும் போது மற்றவர்கள் அந்த இடத்தை பிடிக்க கடும் முயற்சி செய்வார்கள்

ஜ்யோராம் = ரோசா = வன்முறையாளன் = ? = ? = ?

ரோசாவைப் பார் என்பார்
அவர் அடித்தார் என்பார்
அவர் குத்தினார் என்பார்
தெரியுதுபார் அவர் குத்தியது
மூக்கில் ஒழுகும் ரத்தத்திலென்பார்
அடித்தவர் நின்று அடித்தது
தானே என்றதால் ஆச்சி
இல்லையெனில்
அய்யகோ எப்படி நிரூபிப்பது?


மருமகன் டிவி வைத்திருந்தால்
அய்யோ கொல்றாங்க கொல்றாங்க
என்று படம் புடிச்சாவது நிரூபிக்கலாம்
போலி பிரச்சினையென்றால் கூட
அட்லீஸ்ட் ஸ்க்ரீன் ஷாட் சாட்சியாகும்
மூஞ்சியில் குத்தியவர் ஓடிப்போயிருந்தால்
மூஞ்சியில் குத்து வாங்கியதற்கு
உடைந்த மூக்கும்
மூக்கினில் ஒழுகும் ரத்தமுமே சாட்சியாம்

எத்தேச்சையானதா என்றால்
இது திட்டமிட்டதே என்பார்
அன்பாக பேசி அழைத்தார்
உணவில் விஷம் வைத்து கொல்லவே என்பார்
குடியில் அடித்துக்கொண்டதா என்றால்
நான் தான் நிறைய அவர் குடித்தது குறைவே என்பார்


ரோசாவின் பக்கமும் நியாயமிருக்குமே
குத்த தூண்டியதின் நியாமென்னவோ
என்றால்
அடுத்தவர் செயல்களை ஆராய
தன்னை மேல் நிலையில் நிறுத்தி
குத்தியதற்கு காரணம் வேண்டுமானால் இருக்கலாம்
ஆனால் நியாயங்கள் இருக்க முடியாது என
அவர்கள் என்னமோ கொலைக்கு
உடந்தை போல் என்று சிலர் அடையாளம்
சுட்டப் படுவர்

பின் நவீனச் சிந்தனையாளர்களாய் அறியப்படும்
சிலர் அடுத்தவன் பேங்க் கணக்கையும் பெட்ரூம் கணக்கையும்
சொல்வது வன்முறையில்லையா?

எழுத்தில் பெண்ணியம் பேசும் பலர்
தம் மனைவிகளையைக் கொலை செய்கின்றார்
மெதுவாக
எழுத்தில் அறம் குறித்துப் பேசுபவர் செயல்பாடுகளில்
அறமற்ற தன்மையே துறுத்தி நிற்கிறது பெரும்பாலும்

இதைப்பற்றி பேசினாலோ
எழுதினாலோ
சண்டைக்கு நிற்கிறான் பாரு
வேலையத்தவனுங்க என்கிறார்கள்

எல்லார்க்குள்ளும் கொஞ்சம் கொஞ்சம்
வன்முறையாளன் இருக்கிறான்

டைப்பர் போடாத என் பையன்
என் முதுகில் சூடாக மூச்சா போனதால்
போய் கழுவலாமா என நினைப்பதால்
பாதியில் நிற்கப் போகிறது
இந்த (இந்த வன்முறை) கவிதை

நண்பா ஜ்யோராம்,
காயங்கள் ஆறியிருக்குமென நம்புகிறேன், நலமடைந்திருப்பாய் சம்பவத்திற்கு பின் இரண்டு பதிவுகள் பார்த்தேன் உம் வலைப்பதிவில், இது ஒரு மொழிவிளையாட்டு, இது ஒரு கவிதை, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வன்முறையாளன் இருக்கிறான் அவன் வாய்ப்பை பொறுத்து கொஞ்சமாகவோ அதிகமாகவோ வன்முறை செய்கிறான், அதை மொழிவிளையாட்டாக இதில் கூறியுள்ளேன், மற்றபடி யாரையும் நக்கல் செய்தோ கிண்டல் அடித்தோ அல்லது எந்த வன்முறையையும் ஆதரித்தோ இல்லை.... என் வாக்குமூலத்தை நம்பி இதை வெறும் கவிதையாகவோ அல்லது வெறும் மொழிவிளையாட்டாக மட்டும் எடுத்துக்கொண்டு இதை ரசிக்க உங்களால் முடிந்தால் சூப்பர் ஜ்யோராம்.... மிக்க நன்றி, உங்களை கை எடுத்து கும்பிடுகிறேன்.... இதற்கு மேல் இந்த பதிவை நீங்கள் படிக்க தேவையில்லை....

ஆனால் இதை படிக்கும்போதோ அல்லது அதற்கு நான் மொழிவிளையாட்டு எல்லோருக்குள்ளும் வன்முறையாளன் இருக்கிறான் என ஒரு வியாக்கியானம் செய்யும் போதோ என் மூஞ்சி மேல ஒரு அறைவிடனுமென்று தோன்றியிருந்தாலோ, சில பல கெட்ட வார்த்தைகளை உதிர்த்திருந்தாலோ, மயிரான் என் வலி தெரியுமாடா உனக்கு என்று நினைத்திருந்தாலோ, ஏன்டா பாடு என் மூஞ்சியில் குத்தியதில் உனக்கு மொழிவிளைட்டாடா என்றோ, உன் மூஞ்சியில் எவனாவது குத்தியிருந்தா தெரியும்டா நாயே உனக்கு அதனோட வலி என்றோ அல்லது ஒரு எரிச்சலாவது ஏற்பட்டிருந்தால்... மன்னிக்கவும் நண்பா உன்னை எரிச்சல் படுத்துவதற்கோ அல்லது வேறு எதற்குமோ நான் இதை எழுதவில்லை...

மற்றவர்களுக்கு ஒரு நிகழ்ச்சி நடைபெறும்போது நமக்கு அவர்கள் வலி புரிவதில்லை, அட புரியவில்லை என்றால் மூடிக்கொண்டாவது இருக்கலாம், ஆனால் நாமோ மூடிக்கொண்டும் இருப்பதில்லை, நாம் நம் முற்போக்குத்தனத்தையும் மேன்மையையோ, நம் நவீனத்துவத்தையோ அல்லது ஹா இதெல்லாம் ஒரு மேட்டரா என்றோ பல தத்துவ இசங்களை பேசிக்கொண்டே போகிறோம் அவர்களின் உணர்வுகளை மதிக்காமல், ஆனால் ஒரு நிகழ்ச்சி நமக்கே நடக்கும்போது நாம் பிறருக்கு சொல்லும் முற்போக்கு தன்மையையும், நவீனத்துவத்தையும் மற்ற பல எழவுகளையும் கடைபிடிப்பதில்லை....

போலி = மூர்த்தி = ? = ? = ? பதிவை உம் மொழிவிளையாட்டை படித்து பார்க்கவும், ஞாபகம் இருக்கா நண்பா அன்றே நாம் தொலைபேசியில் பேசிக்கொண்டோம் இது யாரையும் ஆதரித்து அல்ல, ஒவ்வொருவனுக்குள்ளும் ஒரு போலியிருக்கிறான் என்று சொன்னீர்கள், அதே போன்றே இன்று இதற்கு நானும் ஒவ்வொருவனுக்குள்ளும் ஒரு வன்முறையாளன் இருக்கிறான் என்ற விளக்கம் சொல்லும்போது நீங்கள் என்ன நினைத்துக்கொண்டீர்கள் என்று என்னிடம் சொல்லவெல்லாம் வேண்டாம்... அன்றைக்கு போலி பிரச்சினையில் பாதிக்கப்பட்டவர்கள் உணர்வுகளை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளாமல் அதை ஒரு கவிதையாக அணுக சொல்லியிருப்பீர்கள், நீங்கள் அடிபட்டதை எழுதிய பதிவில் ஒரு அனானி நகைச்சுவையாக எழுதியிருந்ததை உங்களால் நகைச்சுவையாக எடுக்க முடியவில்லையே... இன்று உங்களால் இதை ஒரு கவிதையாக மட்டுமே அணுக முடிந்ததா என்று உங்கள் மனசாட்சியிடம் மட்டும் கேட்டுக்கொள்ளவும், முன்பும் இதே போன்றே ஒரு பதிவு சுகுணாவுக்கு எழுதியது அந்த பதிவில் சில வரிகள் மீண்டும் இங்கே

அறிவுரை முற்போக்கு புரட்சி புண்ணாக்கு எல்லாம் மற்றவர்களுக்கு பேசும்போது நல்லா தான் இருக்கும், தமக்கும் அதே சூழல் வரும் போது எப்படியாக இருக்கும் என்பதற்கான ஒரு நிகழ்வு தான்...காத்திருந்து மாட்டுனியாடா மகனே என்று நேரம் கிடைக்கும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போது குத்தி காட்டுகிறாயா என்று கேட்பீர்களானால் ஆமாம் காத்திருந்து சரியான வாய்ப்பு கிடைக்கும் போது சொன்னால் தான் உணர்வு பூர்வமாக புரியும் இல்லையென்றால் அப்போதும் முற்போக்கு மூளைக்கு சரியாக புரியாது...

இந்த பதிவு விடயத்தை சுகுணா திவாகருக்கு ஜ்யோராமுக்கு மட்டும் தெரிவிக்க வேண்டுமெனில் சுகுணாவுக்கு ஜ்யோராமுக்கு ஒரு மின் மடலோ அவரின் கைபேசியில் அழைத்தோ சொல்லியிருப்பேன், ஆனா இது சுகுணாவுக்கு ஜ்யோராமுக்கு மட்டுமல்ல, இதே போன்று எண்ணமிருக்கும் சில முற்போக்குவாதிகளுக்கும் இந்த செய்தி போக வேண்டுமென்பதால் இது பதிவாகவே ஆனது.

நண்பா ஜ்யோராம் மேலேயிருக்கும் கவிதை(?) மொழிவிளையாட்டு என் நிலைப்பாட்டினை சொல்வதற்கில்லை, உம்மை வெறுப்பேற்ற வேண்டுமென்ற ஒற்றை காரணத்திற்காக தேடி தேடி எழுதியது, நடந்த துன்ப நிகழ்வின் தொடர்பான என் நிலைப்பாட்டிற்கும் அதில் உள்ள வரிகளுக்கும் துளிகூட தொடர்பில்லை.... நான் அந்த துன்ப நிகழ்வில் ரோசாவை நிச்சயமாக அவருக்கு எத்தனை காரணங்கள் இருந்தாலும் எத்தனை நியாயங்கள் இருந்தாலும் அடித்தது மிகத்தவறு அதை நான் ஆதரிக்கவில்லை...

முன்பே இது தயாராகிவிட்டாலும் கொஞ்சம் நாளாவது ஆகட்டுமென காத்திருந்து இப்போது தான் பதிவிடுகிறேன்...

அழகிய தமிழ் பெயர் பெண் குழந்தைக்கு சூட்ட பரிந்துரையுங்கள்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தூய தமிழ் பெயரை குழந்தைகளுக்கு வைப்பது என் வட்டாரங்களில் எனக்கு அறிமுகமான இடங்களில் மிக குறைவாக (கிட்டத்தட்ட இல்லையென்றே சொல்லலாம்) முதலில் என் கல்லூரி நண்பர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு தூய தமிழ்பெயர்கள் வைக்க ஆரம்பித்தனர், அதன் பின் நானும் என்னை தொடர்ந்து என் சகோதரியும் என இப்படியாக தூய தமிழ்பெயர் வைப்பது என் வட்டத்தில் தற்போது அதிகரித்துள்ளது, தொடர்ச்சியாக பலரிடமும் தூய தமிழ்பெயர் வைப்பதின் அவசியத்தை எடுத்து கூறிக்கொண்டுள்ளோம்...

ஆனால் சிறந்த தூய புதுமையான தமிழ்பெயர்கள் கிடைப்பது அரிதாகவே உள்ளது, தமிழ்பெயர் புத்தகங்கள் எல்லாம் பெரும்பாலும் வடமொழி பெயர்களையே கொண்டுள்ளன...

என் மகனிற்கு தூய தமிழ்பெயர் சூட்ட பெயர்களை தேடினோம், இலக்கிய பாடல்களிலிருந்தெல்லாம் தேடினோம், என் நண்பனின் மகனுக்கும் இப்படியே தேடி பதிவில் இட்டோம், பல நல்ல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

என் நண்பரின் பெண் குழந்தைக்கு சூட்ட ஒரு தூய தமிழ்பெயர் தேவைப்படுகிறது, தூய தமிழ்பெயர்களை தெரிவித்து உதவுங்கள்...

Mustafa Warehouse sale Singapore

சிங்கப்பூர் முஸ்தபா நிறுவனத்தின் Warehouse sale அக்டோபர் 8 முதல் 11
வரை

பயணப்பெட்டிகள், மற்றும் LCD TV போன்றவைகள் விலை சற்று குறைவாக உள்ளன, அல்ஜூனைட் MRT யில் இருந்து பேருந்து எண் 100 எடுக்கவும்...

மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்

மகஇக ஏஜென்ட் மருதையன் எத்தனை முறை சிறை சென்றிருக்கிறார்?

மகஇக பொதுத்தளத்தில் யாருக்கும் தெரியுமோ என்னமோ ஆனால் இணையத்தில் வாய்கிழிய பேசும் இயக்கம், பெரியார் திக காரர்கள் மகஇக வோடு சோடி போட்டுக்கொண்டு சுற்றினார்கள், மகஇகவின் பார்ப்பன தலைமை சாயம் வெளுத்ததோ என்னமோ இப்போது முறைத்துக்கொண்டு திரிகின்றார்கள்...

எல்லோரையும் நோண்டு நொங்கெடுக்கும் புனித(?!)மான மகஇக வின் நிரந்தர பொதுச்செயலாளர் மருதையன் அவர்களின் மீது ஒரு சந்தேகம், எந்த மகஇக தோழர்களாவது தீர்த்துவைத்தால் தன்யனாவேன்...

சாதாரண பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் அவரில் ஆரம்பித்து நெடுமாறன், வைகோ, சுப.வீ, கொளத்தூர் மணி என்று நீளுகிற பட்டியல் தமிழர் விடுதலைப்படை மாறன், தமிழர் மீட்சிப்படை முத்துக்குமார் என பெரும் பட்டியல்... அடடே இதென்ன பட்டியல் என்கிறீர்களா? ஆம் இவர்களெல்லாம் பொதுவாழ்வில் அது பத்திரிக்கையாகவோ, அரசியலாகவோ, ஆயுதப்போராட்டமாகவோ என அரசையும் அதிகாரத்தையும் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக எதிர்த்து போராடியவர்கள் (உடனே மகஇக தோழர்கள் இவன் இது செய்தான் அவன் அது செய்தான் என்றெல்லாம் பட்டியல் போடவேண்டாம், இவர்கள் அனைவரும் நான் புனிதர்கள் என்று சொல்லவில்லை), இதற்காக இவர்கள் மீது தடா பொடா என ஏகப்பட்ட வழக்குகள், அந்த வழக்குகளுக்காக மாதக்கணக்கில் ஆண்டுக்கணக்கில் சிறையினுள் இருந்தவர்கள்... இன்னமும் ஏகப்பட்ட வழக்குகள் இவர்கள் மீது உள்ளன...

எதற்கெடுத்தாலும் நாங்கள் தான் காவல்துறையின் கடும் அடுக்குமுறையை சந்திக்கிறோம் என்று காவல்துறை தங்களின் க(ன்)ணை தங்கள் பிடறியின் மீது வைத்திருப்பதாக பீலா விட்டுக்கொண்டிருக்கும் மகஇக (இங்கே குறிப்பது மகஇக வின் அடிமட்ட தொண்டர்களையோ அல்லது இடை மட்ட பொறுப்பாளர்களையோ அல்ல அவர்கள் பாவம் பலியாடுகள், மகஇக வின் தலைமையை குறிப்பிடுகிறேன்)

நான் மேலே குறிப்பிட்டவர்களை போல ஏதேனும் மகஇக மருதையன் மீது அரசாங்கத்திற்கு எதிராக போராடி அதனால் சிறைக்குள் மாதக்கணக்கில் ஆண்டுகணக்கில் இருந்திருக்கிறாரா?

1.தோழர் மருதையன் எத்தனை முறை சிறை சென்றுள்ளார்?( ரிலையன்ஸ் போராட்டத்தில் மதியம் அரெஸ்ட் ஆகி மாலை ரிலீஸ் ஆன கதை போன்றல்ல)

2. மருதையன் மீது என்னென வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன?

3. தடா, பொடா, குண்டாஸ், மிசா என்ற வழக்குகள் ஏதேனும் அவர் மீது இருந்தனவா? அல்லது இருக்கின்றனவா? அப்படியெனில் எத்தனை மாதம் உள்ளே இருந்தார்?

4. மகஇக அடிமட்ட தொண்டர்களையே போலிஸ் ஜட்டியோடு அடிப்பதாக பீலா விடும் மகஇக வினர் மருதையன் அது மாதிரி எத்தனை முறை பரேடு வாங்கியிருக்கிறார்?

இந்த கேள்வியை சுத்தி சுத்தி சிலரிடம் விசாரித்தேன்... ம் பதில் கிடைக்கவில்லை, அது தான் இப்போது பதிவில் கேட்கிறேன்... ஒரு வேளை மருதையன் மீது பெரிய வழக்குகள் ஏதுமில்லை, உள்ளேயெல்லாம் போனதில்லை, ஜட்டியோடு அடிவாங்குவதெல்லாம் மகஇக தொண்டர்கள் மட்டும் தானென்றால் மருதையனின் புரட்சி யாரின் தயவில் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்...

செந்தில்நாதனுக்காக பிரார்த்தியுங்கள் - இன்று VAD fixing அறுவை சிகிச்சை

செந்தில்நாதன் என்னும் சிங்கைநாதனுக்கு இன்று சிங்கப்பூர் நேரம் காலை 8:00 மணிக்கு முதல்கட்டமான VAD fixing அறுவை சிகிச்சை நடைபெற ஆரம்பித்துள்ளது... நேற்று செந்தில்நாதனை சந்தித்தப்போது மிகுந்த நம்பிக்கையுடன் தெளிவாக இருந்தார், 2 வாரங்களுக்கு முன் சந்தித்தபோது இருந்ததை விட தெளிவுடனும் நம்பிக்கையுடனும் இருந்தார்...

இந்த அறுவை சிகிச்சை 8 மணி நேரம் நடைபெறும், செந்தில்நாதன் எப்போதும் எங்களிடம் கேட்டுக்கொள்வது பிரார்த்தனை செய்யுங்கள் என்று... செந்தில்நாதனுக்கு நடைபெறும் இந்த அறுவை சிகிச்சை வெற்றியடைந்து நல்லபடியாக வீடு திரும்ப அனைவரும் செந்தில்நாதனுக்காக பிரார்த்தியுங்கள்...

காசி, தமிழ்மணம், பத்திரப்பதிவு ஊழல், ஈ-கவர்னென்ஸ், உளவு பார்க்கும் அரசாங்கம்

காசி அண்ணன் கொஞ்ச நாளைக்கு முன்பு சில கேள்விகள் அனுப்பி பதிலனுப்ப சொல்லியிருந்தார், நானும் ஏதோ நமக்கும் இன்னும் சிலருக்கும் மட்டும் அனுப்பியிருப்பாரென்று உட்கார்ந்து அனுப்பினால் அண்ணன் 30 பேருக்கு அனுப்பியிருக்கார், இவர் 30 பேருக்கு அனுப்பியது முன்னாலேயே தெரிந்திருந்தால் காசிக்கு தேவையான அளவிற்கு பதில் கிடைத்திருக்குமென டிமிக்கி கொடுத்திருப்பேன்... அப்புறம் சொந்த பதிவிலேயே போட்டுக்கொள்ளுங்கள் என்று வேறு சொல்லிவிட்டார்... சரி அதான் இங்கே

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்ற எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவு இல்லை என்றே கருதுகிறேன், அதிலும் குறிப்பாக புவியியல், தொழில்நுட்பம், அறிவியல் போன்றவைகளில் கடும் வறட்சி நிலவுகிறது, வரலாறு தன்னிறைவடையவில்லையென்றாலும் வரலாறு.காம் போன்ற ஓரிரு தளங்களினால் கொஞ்சமேனும் உள்ளது, அறிவியல் தளத்தில் 12ம் வகுப்பு வரை உள்ள தமிழ் வழி கல்வி அறிவியல் புத்தகங்களில் உள்ளவைகள் கூட இணையத்தில் தமிழில் இல்லை.

தமிழில் தொழில் நுட்பமே இல்லையா என்றால் அது நிச்சயம் தவறு, பாலிடெக்னிக் பாடதிட்டங்கள் எல்லாம் சுரா பப்ளிகேஷன்ஸ் என்ற பதிப்பகம் தமிழில் கொடுத்துள்ளது, லேத் எப்படி வேலை செய்கிறது என்பதிலிருந்து மைக்ரோபிராசஸர் தொழில்நுட்பம் வரை தமிழில் உள்ளது, நோக்கியா கைத்தொலைபேசியின் சர்க்யூட்டுகளிலிருந்து கான்க்ரீட் தொழில்நுட்பம் வரை தமிழில் உள்ளது. ஆனால் இவைகள் எல்லாம் இணையத்தில் இல்லை இதற்கு முக்கிய காரணம் தற்போதைய தமிழ் இணைய பயன்பாட்டாளர்களுக்கு இவைகள் எல்லாம் தேவை இல்லை என்பதே...

தமிழ் இணைய பயன்பாடு அதிகரித்து வந்து கொண்டே உள்ளது, ஆனால் அவைகள் செய்திகள், அரசியல்,இலக்கியம் சினிமா கிசு கிசு படிப்பது மற்றும் பலான பலான என்ற அளவிலேயே பெரும்பாலும் உள்ளது. தற்போதுள்ள இணைய பயனாளர்களுக்கு பெரும்பாலும் புவியியலோ, அறிவியலோ தேவையில்லை, அப்படியே தேவை என்னும் போது அவர்கள் எளிதாக ஆங்கிலத்தில் தேடி பார்த்துவிட்டு போவார்கள்.பட்டம் நடிகை, ஒல்லிப்பிச்சான் நடிகர் என்ற கிசு கிசுக்களை எல்லாம் ஆங்கிலத்தில் படித்தால் சுவராசியமாக இருக்குமா? இருக்காது... எனவே சுவாரசியத்திற்காக கிசு கிசுவை தமிழில் தான்படிக்கவேண்டி உள்ளது...

தற்போதைய பெரும்பாண்மை தமிழ் இணையதள பயனாளர்கள் பிழைப்புக்கும் தொழிலுக்கும் ஆங்கிலத்தையும் பொழுது போக்கிற்கு தமிழையும் பயன்படுத்துபவர்கள். எனவே தமிழ் உள்ளடக்கம் இணையத்தில் நிறைய பெருக வேண்டுமெனில் தொழிலுக்கும் பிழைப்புக்கும் தமிழை பயன்படுத்துபவர்கள் இணைய பயன்பாட்டிற்கு நிறைய வரவேண்டும், அப்படி அவர்கள் வரும்போது யாரும் ஒன்றும் கழட்ட வேண்டாம் தானாகவே தமிழில் நிறைய உள்ளடக்கங்கள் வரும்.



2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? என்றால் இதற்கு ஆம் மற்றும்இல்லை என்ற இரண்டு பதில்களையும் சொல்ல முடியும், இதற்கும் முதல் கேள்வியில் சொன்ன பதிலே, ஆன்லைன் வசதிகளை பயன்படுத்துவர்கள் பெரும்பாலும் சாஃப்ட்வேர் ஆட்களே... இன்னும் இணையம் பலருக்கும் எட்டாகனியாகவே உள்ளது, அப்படியாகும் போது நிச்சயம் கைத்தொலைபேசி பரவலானது போன்ற நல்ல பரவலான பலன் கிட்டும்...


3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

தமிழ் இணைய சமூகத்தில் இது ஒரு வேதனையான விடயம் தான், தமிழக அரசாங்கம் செய்ய வேண்டியதை,பல்கலைகழகங்கள் செய்ய வேண்டியதை இங்கே ஒரு சில தனி நபர்கள் செய்ய முயற்சித்திருக்கின்றார்கள்,தமிழில் எளிதாக தட்டச்சு செய்ய முதலில் முகுந்த் என்ற தனிநபரே ஈ-கலைப்பையின் மூலம் செய்யவேண்டியிருந்தது, கிட்டத்தட்ட இன்று தமிழ் இணையத்தின் வளர்ச்சி என்பது அரசாங்கம்,பல்கலைகழகங்களின் பங்களிப்பில்லாமல் முழுமையாக தன்னார்வலர்களின் பங்களிப்பே, இது மாதிரி இன்னும் நிறைய குறிப்பிடலாம். விக்கிப்பீடியா போன்ற குழுக்களை சரியாக முறைப்படுத்தினால் பரவலான ஆதரவை பெறும்.

சில முக்கிய தேவைகள் வியாபரமாக கூட இங்கே செய்ய இயலாத அளவிற்கு உள்ளது, உதாரணத்திற்கு OCR ஆப்டிக்கல் கேரக்டர் ரீடர் எனப்படும் ஒரு விசயம் தமிழுக்கு மிக முக்கியமான தேவையாக இருக்கின்றது, ஸ்கேன் செய்தவற்றை எழுத்துக்களாக மாற்றும் இந்த வசதி ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் இருக்கிறது, ஆனால் தமிழில் இல்லை, இதை ஒரு திட்டப்பணியாக அண்ணா பல்கலை கழகத்தில் ஒருவர் செய்திருக்கின்றார் ஆனால் அதுவும் முழுமையடையவில்லை, இது கிட்டத்தட்ட உவேசாமிநாதர் அவர்கள் செய்தது போன்ற ஒரு விசயம், அவர் ஓலைச்சுவடியிலிருந்து அச்சு ஆக்கினார், இந்த OCR மூலம் அச்சிலிருந்து கணிணிக்கும் மாற்றலாம்.


4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?


என்னங்க திடீரென "நான் முதல்வரானால்" என்று சின்னவயசில் கட்டுரை எழுத சொல்வது போன்ற கேள்வியை போட்டுவிட்டீர்.

தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்திற்கு செல்லும் முன் வேறு சில விசயங்கள் மிக முக்கிய தேவையாக உள்ளது, அதில் முதலாவது ஈ-கவர்ணென்ஸ், இந்திய மற்றும் தமிழகத்தில் அரசு, தனியார், தனி நபர் என அத்தனையும் ஊழல் மயமான ஒரு இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஊழல் என்பது திருட்டு என்பதை தாண்டி அடாவடி என்ற நிலையை தொட்டுக்கொண்டிருக்கின்றது, அதில் மிக முக்கியமானது நில ஊழல்கள், பல இடங்களில் ஒரு சாதாரண பொது மக்களின் வாழ்க்கையை சிதைக்கும் அளவிற்கு சென்று கொண்டுள்ளது, இதற்கு முக்கிய காரணம் பத்திர பதிவு அலுவலகத்தில் உள்ளவர்களை கைக்குள் போட்டுக்கொண்டு மூல பத்திரங்களை திருடி அதிலிருந்து போலி தயார்செய்வதில் ஆரம்பித்து ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு ஒரே சொத்தை விற்பது வரை நடைபெறுகின்றது... இதில் அமைச்சர்கள் முதல் அல்லக்கைகள் வரை அத்தனை பேரும் ஈடுபடுகிறார்கள், இன்றைக்கு தமிழகத்தை மிகவும் அச்சுறுத்தும் ஒரு மாபெரும் மோசடி இது. காவல்துறை பற்றி சொல்லவே வேண்டாம், காவல்துறையில் ஒரு கைதி தடுத்துவைக்கப்பட்டுள்ளாரா? கைது செய்யப்பட்டுள்ளாரா? தேடப்படுபவர்கள் எந்த குற்றத்துக்காக தேடப்படுகிறார்கள் என்பதிலிருந்து எந்த தகவலும் தெரிவதில்லை,

சென்ற ஆண்டு நடைபெற்ற ஒரு செய்தி சிங்கப்பூரில் ஒருவரை காணவில்லை என்று ஊரில் பதறுகிறார்கள், காணாமல் போன நபரின் சொந்தக்காரர் ஒரு மின்மடல் சிங்கப்பூர் காவல்துறைக்கு அனுப்பிய இரண்டாம் நாள் எந்த குற்றச்செயலுக்காக, எந்த செக்ஷனுக்கா எப்போது எங்கே அவர் தடுத்து வைக்கப்பட்டார் என்ற தகவல்களை அனுப்பி வைத்தார்கள்.. இவைகளையெல்லாம் தெரிந்து கொள்ள பல நேரங்களில் தற்போதுள்ள நடைமுறைகளில் உள்ள தாமதம் பல ஏமாற்று வேலைகளுக்கும் குற்றச்செயலுகளுக்கும் ஒரு முக்கிய காரணம், எனவே பத்திரபதிவு, நீதிமன்றங்கள், காவல்துறை போன்ற அதிமுக்கியமான துறைகளை உடனே கணிணி மயப்படுத்தி அவைகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கான ஆன்லைன் வசதியும் செய்ய வேண்டும்.

10 மற்றும் 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு எழுதி, தேர்வு முடிவுகளுக்காக மாலைமலர் பத்திரிக்கை வரும்வரை காத்திருந்து பாஸா பெயிலா என்பதை தெரிந்து கொண்டு அடுத்த கட்டமாக மதிப்பெண் பட்டியல் கையில் வரும்வரை நகம் கடித்திருந்திருக்கிறோம், இன்று பட்டனை தட்டினா பட்டுன்னு மதிப்பெண் பட்டியலையே கொட்டி விடுகிறது...

இந்த ஈ-கவர்ணனெஸ்ல் பல ஆண்டுகளாக வேலை செய்து கொண்டிருப்பதால் இதன் முழுப்பலன் எந்தஅளவிற்கு இருக்கும் என்பதை நேரடியாக கண்டிருப்பதால் இதற்கே முதன்மை, இம்மாதிரியான விசயங்களுக்கு முன்னுரிமை தருவதை விடுத்து தேசிய அடையாள அட்டை அடிப்பதை முக்கியமாக்கிக்கொண்டு திரிகின்றன இந்த அரசுகள், கணிணி மயமாக்கப்பட வேண்டிய பல முக்கிய விடயங்களுக்கு முன்னுரிமை தராமல் தேசிய அடையாள அட்டைக்கு மட்டுமே அலைவது ஒவ்வொரு குடிமகனையும் நன்றாக வேவு பார்க்க மட்டுமே முக்கியமாக பயன்படும், காவல்நிலையத்தில் ரவுடிகளுக்கு ஃபைல் போடப்படுவது போலதான் இதுவும், முக்கியமான சில மாற்றங்களை செய்யாமல் தேசிய அடையாளஅட்டையை வைத்துக்கொண்டு பொதுமக்கள் நாக்கு கூட வழிக்க முடியுயாது.

இவைகள் எல்லாம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது இதில் தானாகவே தமிழ் வரும்.


5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

ஹா ஹா... தமிழ் வலைப்பதிவுகள் இப்போது வரை நிறைய பொழுது போக்கு, கொஞ்சம் சீரியஸ் என்றுதான் உள்ளது, புதிதாக வலைப்பதிய வருபவர்களுக்கு யோசனை சொல்லுமளவிற்கு ஒன்றுமில்லை, அவரவர்கள் அவரவர்களாகவே இருந்தாலே போதும்


6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

தமிழ்மணத்திற்கு என் வாழ்த்துகள், தமிழ்மணம் இதன் சேவையை பற்றி எழுத வேண்டுமெனில் பக்கங்கள்போதாது, ஏற்கனவே பலமுறை எழுதியிருக்கின்றேன், தமிழ்மணம் கிட்டத்தட்ட ஒரு புரட்சியை இணையத்தில் செய்துள்ளது என்றே சொல்லலாம், நான் தமிழ்மணத்தில் இணைந்த போது பதிவுகளின் எண்ணிக்கை 400க்கும் குறைவு இன்றோ 5000க்கும் மேல், தமிழ் இணையத்தில் குழுமங்களின் காலம் அது, அங்கே மாற்று கருத்து என்பதே பெரும்பாலும் இல்லாத நிலை, சங்கராச்சாரியை 'ர்' போடாமல் எழுதினால் மரியாதை குறைவு என்று குழுமத்தை விட்டே வெளியேற்றிய பாசிச நிலையில் ஒரு சாரரின் ஆதிக்கத்தில் இருந்தது, அதை உடைத்தது தமிழ்மணம், பலமுறை தமிழ்மணத்தை உதிர வைக்க பல முயற்சிகள் நடந்த போதும் பல முறையற்ற விமர்சனங்களை தமிழ்மண நிர்வாகத்தை விட தமிழ்மணத்திலிருந்த பதிவர்கள் பதிலடி கொடுத்து முறியடித்தனர் இதற்கு முக்கிய காரணம் தமிழ்மணம் வேறு தாம் வேறு என்று பதிவர்கள் நினைக்கவில்லை, அந்தளவிற்கு தமிழ்மணம் பதிவர்களோடு பிணைந்திருந்தது

தமிழ்மணம் செய்ய வேண்டியவை என்பதை விட தமிழ்மணம் செய்ய தவறியவை என்ன என்று சொல்கிறேன்.. தமிழ்மணத்திற்கு ஒரு மிக அருமையான வாய்ப்பு ஆனால் அதை தவறவிட்டுவிட்டது என்றே சொல்லலாம், தமிழ்மணம் தனியாக வலைப்பதிவுலகில் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் தமிழ்மணம் ஒரு லீட் ரோல்(தலைமை) எடுத்திருக்கலாம், தனி மனிதனாக காசியிடமிருந்து 15க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் கொண்ட குழுவிடம் சென்ற போது நிறைய எதிர்பார்த்தேன், இன்னும் சரியாக சொல்வதென்றால் தமிழ்மணம்

ஒரு கட்டத்திற்கு மேல் தேங்கிவிட்டது, தமிழ்மணம் வலைப்பதிவு என்பதோடு மட்டுமின்றி ஒரு மீடியாவாக, ஊடகமாக, இணையத் தலைமையாக உருவெடுக்கும் என்றே எதிர்பார்த்தேன், தனியாக ஓரிரண்டு பேர் நடத்தும் திரட்டிகளாலோ வலைதளாங்களாலோ இது முடியாது, ஆனால் 15 இயக்குனர்கள் இருக்குமிடத்தில் பணம், வேலையை பகிர்ந்து கொள்ளுதல் என்பது சுலபம்( இது சுலபமா, கடினமா என்பது அவரவர்களுக்கு தான் தெரியும், என்றபோதும் இது என் எதிர்பார்ப்பு என்றே கூறலாம்)...

தமிழ்மணம் தவறிய இன்னொரு விடயம், அது தன் வளர்ச்சியில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை, தமிழ்மணம் கொஞ்சம் கொஞ்சமாக பதிவர்கள் தங்கள் நண்பர்களிடம் சொல்லி அங்கிருந்து அப்படியே வேறொருவருக்கு சொல்லி என்றே பெரும்பாலும் வளர்ந்ததே, இதனால் exponential growth ஆக இருக்க வேண்டிய தமிழ்மணத்தின் வளர்ச்சி gradual ஆக மட்டுமே இருந்தது... வலைப்பதிவுகளை பரவலாக்குவது, வெளியாட்களிடம் கொண்டு செல்வது, புது தன்னார்வ குழுமங்களை உருவாக்குவது, கம்யூனிட்டியாக உருவாகுவது என லீட் ரோல் எடுத்திருக்கலாம், இதெல்லாமே எளிதான விடயங்கள் இல்லை என்றாலும் தமிழ்மணம் செய்திருக்கலாம்.. செய்யக்கூடிய சூழல் அப்போது இருந்தது என்றே சொல்லலாம், ஆனால் இப்போது வலைப்பதிவுலகம் பெரிதாகிவிட்டதும் மற்ற பல அரசியல்களாலும் இதையெல்லாம் இனி செய்ய இயலுமா என்பது சந்தேகமே.

செய்ய தவறியது என்று சொன்னதிலிருந்தே எதையெல்லாம் தமிழ்மணம் செய்ய வேண்டும் என்ற பதிலும் இருக்கின்றது....

வாய்ப்பளித்த காசி அண்ணாவுக்கும், பலரையும் என்னையும் உருவாக்கிய தமிழ்மணத்திற்கும் இத்தருணத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்

பொட்டீகடை சத்யாவின் மாஸ்டர் பீஸ் - முடவனை பகிடி செய்யும் பாம்பு



பொட்டீகடை சத்யா எப்போவாவது எழுதுவான்... சமீபத்திய அவன் பதிவு "முடவனை பகிடி செய்யும் பாம்பு", முதலில் படித்தேன்... கொஞ்சம் பின் நவீன வாடை அடித்த உடன் சரி இதையெல்லாம் அவசரத்தில் படிக்க முடியாது ஆற அமர படிப்போம் என்று....

திரும்ப போய் படித்தேன்... ஆள் தற்போது நிஜத்தில் முட்டியை உடைத்துக்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கான்... அது ஒரு மாஸ்டர்பீஸ் படைப்பை தந்திருக்கு... மாம்ஸ்க்கு முட்டி உடைஞ்சதும் ஒரு நல்லதுக்கோ?

கதை(யா?) படிக்கும் போது ஜெமோ வின் பார்த்தீனியம் படித்தது போல காட்சிகள் கண் முன் விரிந்தன, சத்யா கொஞ்சம் அழுத்தி புடிச்சான்னா சாருவும் ஜெமோவும் கலந்த கலவையாக புனைவிலக்கிய உலகில் வலம் வர வாய்ப்புகள் உண்டு

முடவனை பகிடி செய்யும் பாம்பு படிக்க இங்கே அமுக்குங்கள்

இன்று சுதந்திர தினமாம்!


சிங்கப்பூருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்


44வது பிறந்த நாளை கொண்டாடும் சிங்கப்பூருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்....

இரண்டு வருசம்தான் அப்புறம் ஊருக்கு போயிடனும் முதல் தடவை வந்த போது சொன்னது, இரண்டிரண்டு வருடங்களாக கடந்து கொண்டே இருக்கின்றன.ஒரு ஒரு வெள்ளியையும் ரூபாய்க்கு மாற்றி கணக்கு பார்த்து செலவழித்தது போய் ஊரில் செலவு செய்யும் ரூபாய்களை வெள்ளிக்கு மாற்றி கணக்கு பார்க்க பழகிவிட்டது மனம்.

பைசா கையில் எதுவும் மிச்சமில்லையே சரி யு.எஸ் ஆவது போகலாம்... ம்...ஏனோ இந்த ஊரைவிட்டு நகர மனமில்லை... முதல் சில முறைகள் ஊருக்கு போன போது அங்கே கால்பதித்தவுடன் ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பா என்றிருக்கும், இப்போதெல்லாம் இங்கே கால்பதிக்கும் போது தான் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பா என்றிருக்கிறது...

இந்த ஊர், இந்த ஊர் தமிழ், ஒலி96.8, வசந்தம் என கொஞ்சம் கொஞ்சமாக கட்டிப்போட்டுவிடும் ஆட்களை.... இந்த ஊரை விட்டு நகரவிடாது....



பிறந்தநாள் வாழ்த்துகள்... சிங்கப்பூர்...

வெள்ளைக்காரனுக்கும் சிங்களச்சிக்கும் பொறந்த மிஸ் சென்னை மற்றும் சென்னை மேன்

மிஸ் சென்னை மற்றும் சென்னை மேன் என்றொரு போட்டி விஜய் தொலைக்காட்சியில் நடைபெறுகிறது...

இன்றைக்கு தான் கொஞ்சூண்டு பார்த்தேன்...

பெயர் தான் மிஸ் சென்னை மற்றும் சென்னை மேன், ஆனால் வெள்ளைக்காரனுக்கு பொறந்தவர்களை போல நிகழ்ச்சி முழுவதும் நடைபெற்றது ஆங்கிலத்தில், நிகழ்ச்சி நடக்கும் இடமோ சிங்களக்காரிக்கு பிறந்தது போல இனவாத சிங்களவெறி நாடான இலங்கையின் தலைநகர் கொழும்பில்.

தமிழ் மக்கள் கொல்லப்பட்டு கொண்டிருக்கும் போது Srilanka is amazing என்று ஒரு குட்டி சொல்வதை விளம்பரப்படுத்துவதும், இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் உறவுப்பாலம் அமைக்கிறார்களாம் இந்த நிகழ்ச்சியின் மூலம்... காசுக்காக எதையும் தின்னும் பொறம்போக்கு நாய்கள்...

மும்பைகாரன் எல்லாம் ஹிந்திகாரன்களை ரவுண்டு கட்டி அடிப்பது சரிதானோ? பின்னே மராட்டிய தலைநகரில் எங்குமே மராட்டி இல்லாமல் ஹிந்தி புழங்கினால் வெறியாக மாட்டானுங்களா?

150 பேரை பாக்கிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள் சுட்டு போட்டுடானுங்களாம் அதுக்கும் குய்யோ முய்யோ என்று கூச்சல் போட்டுக்கொண்டு பாக்கிஸ்தானோடு கிரிக்கெட் விளையாட அனுப்பாத இந்தியா இலைங்கைக்கு அனுப்பியது... ஆனால் பல ஆயிரம் தமிழர்களை கொன்ற சிங்கள இனவெறி நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட மட்டுமல்ல ஹை கிளாஸ் அ...ம் களை உருவாக்கும் அழகி போட்டியும் அங்கே நடத்துவார்களாம், அதை கோயிந்துகளான நாம் பார்க்க ஒளிபரப்புவார்கள்...

என்ன கொடுமை இது...

இங்கே எழுதுவதால் என்ன நன்மைன்னா கேட்கிறீங்க? ஒரு மயிரும் இல்லைதான் வயிற்றெரிச்சலை புலம்பலை கொட்டுவதற்கு ஒரு இடம் அவ்ளோ தான்

திரட்டி நடத்த ஆகும் செலவு கணக்கு மற்றும் சக்திவேல் என்னும் காமெடி பீஸ்

சக்திவேல் என்னும் பதிவர் பதிவுலகின் சமீபத்திய காமெடி பீஸ் என்பது பதிவுலகறிந்ததே, அவரின் (காமெடி)அறசீற்றத்தின் உச்சகட்டமாக நேற்று தமிழ் திரட்டிகளின் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்திருந்தார்... அது "6. பதிவர்களின் பதிவை மட்டும் வெளியிட்டு பணம் சம்பாதித்து விட்டு மாங்கு மாங்கென்று எழுதும் பதிவர்களுக்கு நயா பைசா தராமல் இருக்கும் திரட்டிகள்."

திரட்டி நடத்த ஆகும் செலவை சக்திவேல் ஏற்றுக்கொண்டால் நான் தமிழ்மணம், தமிழ்வெளி, தமிலிஷ், திரட்டி.காம் ஆகிய முக்கிய நான்கு திரட்டிகளிடமும் பேசி அவர்களின் மொத்த மாத வருமானத்தையும் சக்திவேலிடம் தரத்தயாராக உள்ளேன்.

சக்திவேல் மட்டுமல்ல, ஏற்கனவே செல்வராஜ் என்பவரும் இதே போல திரட்டி நடத்துபவர்கள் பெரும் பொருள் ஈட்டுவது போன்று பதிவிட்டிருந்தார், அதற்காகவே இந்த தகவல்.

இனி திரட்டி செய்ய மற்றும் நடத்த ஆகும் செலவுகள் கீழே:

One Time Cost (ஒரு முறை ஆகும் செலவு)

ஒரு PC அல்லது லேப்டாம் ரூ. 50,000

திரட்டி சாப்ட்வேர்
(இணையத்தில் ஓப்பன் சோர்ஸ் என்ற முறையில் இது கிடைத்தாலும், அதை அப்படியே பயன்படுத்த இயலாது, பல மாற்றங்கள் செய்ய வேண்டும், இதற்கு ஒரு மாதம் ஆகும், அதாவது 22 Mandays, 1 Manday = 8 Manhours) மொத்தம் (22 X 8 = 176 Man hours) ஒரு Man hour = 15$, 1$ = ரூ. 45 மொத்தம் 176 Manhours க்கு இந்திய மதிப்பில் ரூ 1,18,800

தள முகப்பு வடிவமைப்பு (web page designing) = ரூ 15,000

வருடாந்திர செலவுகள்

தள முகப்பு வடிவமைப்பு மாற்றுதல் = ரூ.15,000

திரட்டியை பிரபலமாக்க செய்யும் விளம்பர செலவுகள் = ரூ 25,000 - 1,00,000

போட்டி நடத்துவது மற்றும் இன்ன பிற பரிசு செலவுகள் = ரூ 25,000 - 1,00,000

திரட்டி விடயம் தொடர்பாக பதிவர்கள் மற்றும் பலருடன் தொலைபேசியில் உரையாடுவது = ரூ 25,000 (இந்தியாவிற்குள் என்றால் ரூ 5,000)

புதிய சர்வீஸ்களை உருவாக்குவது(ஒரு மாதம்) = 1,18,000

மாத செலவுகள்

செர்வர் ஹோஸ்டிங்( திரட்டிகளின் பளு கூடுதல் என்பதால் டெடிக்கேட்டர் செர்வர் போக வேண்டும், இது குறைந்தது $100 ஆகும் ) ரூ 4,500

தினம் 2 மணி நேரம் வேலை செய்தல் (பதிவுகளை அப்ரூவ் செய்தல், மின் மடல் அனுப்புதல், தளம் சரியாக வேலை செய்கிறதா என்று பார்த்தல், ப்லாக்ஸ்பாட், வேர்ட்பிரஸ் மற்றும் பல வலைதளங்களின் கோடிங் மாறும் போது திரட்டி கோடிங்கை மாற்றுவது மாதம் 60 மணி நேரம், 1 Manhour = 15$, 1$=Rs45)
மொத்தம் 60 X 15 X 45 = Rs 40,500
(இதில் பொண்டாட்டியுடன் பேசாமல், குழந்தையோடு விளையாடாமல் தினம் இரண்டு மணி நேரம் செலவு செய்து குடும்பத்தில் வசை வாங்கும் கணக்கையும், கணிணி முன் உட்கார்ந்து உடம்பு குண்டடித்தல், கண் பார்வை, முதுகுவலி பிரச்சினைகள் ஏற்படுத்தும் மருத்துவ செலவு கணக்கில் இல்லை)

ப்ராட் பேண்ட் இணைய செலவு மற்றும் மின்சாரம் = 1500

ஆக ஒரு திரட்டியை மாதா மாதம் நடத்த தேவைப்படும் உழைப்பு மற்றும் பணம் ரூபாய் 46,500 ஓராண்டிற்கு ரூ 5,58,000

மாத செலவு தவிர்த்து ஓராண்டுக்கு தேவைப்படும் உழைப்பு மற்றும் பணம் ரூபாய் 2,08,000 (விளம்பரம் மற்றும் போட்டி செலவு குறைந்த அளவு கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது)

ஒரு முறை திரட்டியை நிறுவ எடுக்கும் உழைப்பு மற்றும் செலவு ரூ 1,83,000

ஆக மொத்தம் ஒரு ஆண்டிற்கு திரட்டி நடத்த ஆகும் உழைப்பு மற்றும் செலவு ரூபாய் ரூ7,66,000 மற்றும் One time cost ரூபாய் 1,83,000 ஆக மொத்தம் 9,49,000( ஒன்பது இலட்சத்து நாற்பத்தி ஒன்பதாயிரம் ரூபாய்கள் மட்டுமே)

திரட்டி நடத்துபவர்களில் பெரும்பாலும் கணிணி வல்லுனர்கள் என்பதால் அவர்களின் உழைப்புக்கான பொருள் செலவு சேர்க்காமலும் கூட மாதம் ரூபாய் 6,000(செர்வர் ஹோஸ்டிங் + இணைய மற்றும் மின்சார செலவு) (12 X 6000 = 72,000) மற்றும் ஆண்டுக்கு 70,000 முதல் 90,000 ஆக மொத்தம் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணமாக செலவு செய்தே ஆக வேண்டும்...

கணிணி வல்லுனர்கள் உழைப்பை சேர்த்தால் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு ரூபாய் பத்து இலட்சமும், அதை சேர்க்காமல் பணமாக ரூபாய் ஒன்றரை இலட்சமும் செலவு செய்யும் இந்த திரட்டி செலவை அண்ணன் சக்திவேல் எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு மாதமும் திரட்டிகளுக்கு கிடைக்கும் முழுவருமானத்தையும் அண்ணன் சக்திவேலுக்கு அளிக்க நான் தமிழ்மணம், தமிழ்வெளி, தமிலிஷ் மற்றும் திரட்டி.காம் திரட்டிகளிடம் பேசி வாங்கி தர நான் தயாராக உள்ளேன், அண்ணன் சக்திவேல் இதற்கு தயாரா என்று தெரிவிக்கவும்...

இவ்வளவு பணமும் உழைப்பும் போட்டு திரட்டிகளை ஏன் நடத்துகிறார்கள் என்றால் அது அவர்களின் "நானும் ஏதாவது செய்யனும் என்கிற சுயஅரிப்பு" மட்டுமே, திரட்டி நடத்துவதால் கிடைக்கும் மனதிருப்தி, தமிழ்மணம் காசி, தேன்கூடு சாகரன் என்று கிடைக்கும் பெயர் அதனால் ஏற்படும் திருப்தி மட்டுமே....


திரட்டி கிசு கிசு
திரட்டி நடத்தி நடத்தி அது நடத்துவதற்கான மாத செலவுகளும் உழைப்பும் கை மீறி போவதால் வேறெதிலும் கவனம் செலுத்த முடியவில்லை தன் உழைப்பில் உருவாக்கி சமீபத்தில் அதிக பிரபலமான ஒரு திரட்டியை ஒரு குழுவிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கிக்கொண்டார் அந்த திரட்டி ஓனர்...

இந்த கிசு கிசுவுக்கான குளூ : அந்த திரட்டி பெயர் இந்த பதிவில் குறிப்பிடப்படவில்லை

தொரையின் துறை பறிபோன கதை சில அரசியல் கிசு கிசுக்கள்

வாரம் இருமுறை பத்திரிக்கைகள், இட்லி வடை போன்றவைகள் எல்லாம் துரையின் துறை போனதைப்பற்றி கிசு கிசுக்கின்றன.

தொரை காலேஜ் கட்டறாரு, தொரை சொத்து சேர்த்துட்டாரு, தொரை நண்பருக்கு சாதகமா நடந்துக்கிட்டாரு இது தான் கம்ப்ளெய்ண்ட் இதனால தான் தூக்கிட்டாங்க என்று புலனாய்வு பத்திரிக்கைகளெல்லாம் பொலனாய்வு செய்து போட்டாங்க, இதற்காகவெல்லாம் நடவடிக்கை எடுக்கனும்னா தாத்தாவும் தாத்தா குடும்பத்து மேலயும் தான் மொதல் நடவடிக்கை எடுக்கனும்னு தெரியாதா என்ன அவிங்களுக்கு, பின்னே தாத்தா குடும்ப சொத்தெல்லாம் தாத்தா கதை வசனம் எழுதி சேர்த்ததா?

தொரைக்கு துறை புடுங்கப்பட்ட விசயம் நடந்ததென்னமோ இப்போதான் ஆனா பூர்வாங்க வேலைகள் ரொம்ப நாளா நடக்குது, அரசியல் வட்டத்தில் இதற்காக கிசுகிசுக்கப்படும் காரணங்கள்

1. தொரைக்கு தலைவர் தாத்தாவா குடிதாங்கியா என்பதில் தொரைக்கும் குடிதாங்கிக்கும் எந்த டவுட்டும் இல்லையாம், ஆனால் தாத்தாவுக்கு நிறையவே இதில் டவுட் உண்டு.

2. தாத்தாவுக்கு பின்னால வாரிசை கவுக்க எதிர் ஆளுங்க போடுற சதுரங்க பிளானில் வாரிசுக்கு ஆதரவா வாரிசின் பின்னால தம் நண்பர்கள் நிற்பாங்க அப்படிங்கற நம்பிக்கை தாத்தாவுக்கு இல்லை, தொரை மேல மட்டுமில்ல, வீரபாண்டி கோட்டையிலே உள்ள சிக்ஸ்பேஸ் மேலயும், பிச்சை, மணியானவர் என பலர் மேலும் நம்பிக்கையில்லையாம்.

3. குடிதாங்கிக்கும் தாத்தாவுக்கும் ஒறவு புட்டுக்கிட்ட போது தொரை பெயரில் வெளியான அறிக்கையில் தொரையோட பெயர் மட்டும் தான் தொரைதாம் மற்றதெல்லாம் யாருடையது என்று சொல்லி தெரியனுமா?

4.கலக்க போவது காமெடியில் டி.ராஜேந்தர் வறுபடுவது மாதிரி தொரையோட மிமிக்கிரியில் அதிகம் வறுபடுவது அப்போதைய 'இளைய'வாம் இளைய தொணை ஆன பின்பும் தொரை மிமிக்கிரியில் தொடருதாம், தொரைக்கு தொணை மேல மரியாதையில்லைங்கறது தொணைக்கும் தாத்தாவுக்கும் வருத்தமாம்

5. தொரையை மட்டம் தட்ட தொரை ஆளுங்களை தொரை ஊருல பதவி கொடுக்காம காலி செய்தார் அப்போதைய இளைய இப்போதைய துணை, தொரை அழுது ஆர்பாட்டம் செய்து திரும்ப வாங்கிட்டாரு, தொரை இல்லாம ஊருக்குள்ள கட்சி நடத்த முடியும்ங்கற நிலை வரும்வரை விட்டு கொடுத்து இப்போ காலி செய்ததாக பேச்சி

6. வீரபாண்டி கோட்டியிலே கொடி நாட்ட போனாராம் இளைய, சிக்ஸ்பேஸ் உடன் முட்டியதில் தொடருந்து நிலையத்துக்கு ஒரு ஆளும் வரலையாம், அப்புறம் தாத்தா ராசியா போக சொல்லியிருப்பதால் அண்ணா தம்பி என்று உருகுகிறார்களாம்

7.சிக்ஸ்பேஸ்க்கும், குடிதாங்கி கட்சிக்கும் நடக்கும் மோதலை உண்மை என்று தாத்தா வீட்டில் இருக்கும் பொடிசு கூட நம்பலையாம்

8. கோல்ட் ஹேர் காரரோட க க கல்லூரியில் பாதி கவிதைக்கு போயிருச்சாம்

9.பன்னீர்சோடா வாசம் வீசும் ஒருவர் காலேஜ் கட்டுறாருன்னு தகவல் போனதாம், என்னதான் மறைத்தாலும் மொத்தமா நூறூ ஏக்கர் வாங்கினா தெரியாதா என்ன? பாதி காலேஜ் போயிருந்தா கூட பரவாயில்லை, முழுசும் கேட்குறாங்களாம்.

10. தாத்தாவோட தொடர்புக்கு இருக்கும் எல்லா பை-பாஸ் வழிகளையும் நேரம் பார்த்து வெட்டெறிந்துவிட்டு தான் மறுவேலையாம், பின்னே நெல்லுக்கு மட்டும் பாயனுமோ இல்லியோ இங்கே வழியில இருக்கிற புல்லு பூண்டுக்கெல்லாம் பாயுதே...

மீள் கவுஜ

மீள் கவுஜ
காத்திருந்தேன் உனக்காக
காதலுடன் வருவாயென
கால்கடுக்க நின்றிருந்தும்
காணவில்லை உன்னை

உனக்காக ஒரு ரோசா
வைத்திருந்தேன் வாடியது
எழுதிவைத்த கவிதையெல்லாம்
எங்கேயோ ஓடியது

எங்கே போனாயென
ஏங்கி இருந்தபோது
ஏக்கம் தீர்க்கவந்தாய்
என்னிடம் நீ கண்ணே!

வாடிய ரோசாவை
வாசமுடன் நான் நீட்ட
வைத்திருந்த ரோசாவை
வான் நோக்கி நீ எறிய
வானரப்படையாக நான்மாறி
அதை பிடிக்க

வழக்கம்போல் வீசினாயே
வசந்தப் புன்னகையை
அதைப்பிடிக்க என்னால்
இயலவில்லை கண்ணே

நீ பேசுவாயென
நான் மவுனிக்க
நான் பேசுவேனென
நீ மவுனிக்க
இருளும் மவுனமும்
இறுகிக் கொண்டிருந்தது

எனக்காக நீபேச
உதடுபிரிக்க
உனக்காக நான்பேச
உதடுபிரிக்க

எழுந்திருடா
மணியேழு
என்றான்
என் அறைத்தோழன்

சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே (அ) வேறு மழை

சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே
(அ) வேறு மழை
- ஆதவன் தீட்சன்யாவின் கவிதை

மிஞ்சிப்போனா என்ன
சொல்லிற முடியும் உன்னால
இந்த மழையைப் பத்தி

ஓதமேறுன கொட்டாய்ல
கோணில மொடங்கியும்
குளுர்ல நடுங்கியிருக்கியா

உங்கூட்டுப் பொண்டுக
நமுத்த சுள்ளியோட சேந்தெரிஞ்சு
கஞ்சிக் காய்ச்சியிருக்காங்களா
கண்ணுத்தண்ணி உப்பு கரிக்க

ஈரஞ்சேராம எளப்பு நோவெடுத்து
செத்த சொந்தத்த எடுக்க வக்கத்து
பொணத்தோட ராப்பகலா
பொழங்கித் தவிச்சதுண்டா

ஒழவுமாடொன்னு கோமாரியில நட்டுக்க
ஒத்தமாட்டைக் கட்டிக்கிட்டு
உயிர்ப் பதற அழுதிருக்கா உங்குடும்பம்

எதுக்கும் ஏலாம
உஞ்செல்லப்புள்ளையோட
சிறுவாட்டக் களவாண்டு
சீவனம் கழிஞ்சிருக்கா

தங்கறதுக்கு வூடும்
திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா
சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே
ஒண்ணு தெரிஞ்சுக்கோ
மழை ஜன்னலுக்கு வெளியதான்
எப்பவும் பெய்யுது உனக்கு
எங்களுக்கு எங்க பொழப்பு மேலயே.
--
ஆதவன் தீட்சண்யா கவிதை

சோதனை

சோதனை

ரேடியோ திரட்டி - இது செம தூளு

ரேடியோ அனேகமாக 30 வயதுக்கு முற்பட்டவர்கள் பெரும்பாலும் ரேடியோவில் பொழுதை கழித்திருக்க வாய்ப்புண்டு, கம்பி வட தொலைக்காட்சிகளுக்கு பின் கிட்டத்தட்ட மறைந்து போன வானொலியை மீண்டும் கொண்டு வந்தது எஃப்.எம்.

உலக அளவில் தமிழில் நிறைய எஃப்.எம். வானொலிகள் உண்டு, அவைகளை தொகுத்து தந்திருக்கிறார் திரட்டி.காம் வெங்கடேஷ்...

அழகான தள வடிவமைப்பு, நிறைய எஃப்.எம். வானொலிகளை இணைத்து அட்டகாசமாக செய்திருக்கிறார்...



இது செம தூளு ... நீங்களும் கேட்டு பாருங்களேன் திரட்டி ரேடியோ

மக்களின் வயிற்றில் மண் அள்ளி போட்ட அதிமுக,பாமக, மதிமுக

இடைத்தேர்தல் என்றாலே சாதாரணமாகவே கொஞ்சம் கூடுதல் கவனிப்பு இருக்கும், திருமங்கலம் இடைத்தேர்தலும் அதைத் தொடர்ந்து நடந்த நாடாளுமன்ற பொது தேர்தலிலும் மக்களுக்கு செம நோட்டு கவனிப்பு நடந்தது.

இந்த நேரத்தில் ஐந்து சட்டமன்ற இடைத்தேர்தல்கள் வரப்போகின்றது என்றதும் நாக்கில் எச்சில் ஊற மக்கள் காத்திருந்த நேரத்தில் அதில் மண் அள்ளி போடுகிற மாதிரி அதிமுக தேர்தலை புறக்கணிப்பதாக சொல்ல அ.தி.மு.க.வை தொடர்ந்து பா.ம.க. ம.தி.மு.க.வும் தேர்தலை புறக்கணிக்கிறது!

ஆளில்லாத மைதானத்துல ஓடி ஓடி கோல் போட திமுகவும் என்ன கேணையா... இந்த இடைத்தேர்தலில் நோட்டு கவனிப்பு குறையுமா? பார்க்கலாம்...

முதலாளித்துவ பயங்கரவாதம். - பு.ஜ.தொ.மு

இந்த பதிவிற்கு முதலில் வைத்த தலைப்பு வேறு... அது கடைசியில்

முதலாளித்துவ பயங்கரவாதம் பற்றிய கூட்டம் சுப. தங்கராசு, பா. விஜயகுமார், பு.ஜ.தொ.மு போன்றோர் நடத்துகிறார்கள்

நாள் : 21 ஜூலை 2009 செவ்வாய்க்கிழமை
நேரம் : மாலை 6.15 மணி
இடம் : கிழக்கு பதிப்பகம் மொட்டமாடி :-)
மேலதிக தகவல்கள் இங்கே
இந்த பதிவிற்கு முதலில் வைத்த தலைப்பு
"என்ன கொடுமை அசுரன் இது?"

சோதனை 1

சோதனை 1

சோதனை

சோதனை

தெனாலி பல்சுவை தளம் - அறிமுகம்

தெனாலி ராமன் ஒரு அதி புத்திசாலியான நகைச்சுவை தூக்கலாக சாதுரியமாக செயலாற்ற கூடிய ஒரு பல்செயல் ஆளுமை...

அந்த தெனாலி ராமன் போன்றே தெனாலி இணைய தளமும்..

தெனாலி தளம் அசத்தலான வடிவமைப்பு, சமூக சிந்தனைகளோடு கூடிய கட்டுரைகள் ஸ்பெஷல்ஸ் பகுதியில்(கண்ணீர் தேசம் போர் என்ன செய்யும், இந்தியாவிடமிருந்து சுதந்திரம் வாங்கிய 50 கிராமங்கள்! என செவிட்டில் அறையும் கட்டுரைகள்...)

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, சினிமா என்ற தலைப்புகளின் கீழ் செய்திகள்...


பிரகாஷ்ராஜ் எழுதும் பெர்சனல் தொடர், திரைப்பட கேலரி , அரசியல் நையாண்டி, ரகசிய தெனாலி(கிசு கிசு??), திரை விமர்சனம் என ஒரு பல்சுவை இணைய தளத்திற்கான அத்தனை அம்சங்களுடன் கலக்கலான தெனாலி தளம்...

பொதுவாக பல்சுவை இணையதளங்கள் தினம் தினம் புதுப்பிக்கப்படாது, ஆனால் தெனாலி தளம் தினம் தினம் நிறைய புதியவைகள் பதியப்படுகின்றன...

உங்களின் படைப்புகளையும் தெனாலிக்கு அனுப்பலாம்...

ஏற்கனவே கலக்க ஆரம்பித்திருக்கும் "தெனாலி" தமிழ் இணையத்தில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க வாழ்த்துகள்..
http://www.thenaali.com/

தெனாலி பல்சுவை தளம் - அறிமுகம்

தெனாலி ராமன் ஒரு அதி புத்திசாலியான நகைச்சுவை தூக்கலாக சாதுரியமாக செயலாற்ற கூடிய ஒரு பல்செயல் ஆளுமை...

அந்த தெனாலி ராமன் போன்றே தெனாலி இணைய தளமும்..

தெனாலி தளம் அசத்தலான வடிவமைப்பு, சமூக சிந்தனைகளோடு கூடிய கட்டுரைகள் ஸ்பெஷல்ஸ் பகுதியில்(கண்ணீர் தேசம் போர் என்ன செய்யும், இந்தியாவிடமிருந்து சுதந்திரம் வாங்கிய 50 கிராமங்கள்! என செவிட்டில் அறையும் கட்டுரைகள்...)

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, சினிமா என்ற தலைப்புகளின் கீழ் செய்திகள்...


பிரகாஷ்ராஜ் எழுதும் பெர்சனல் தொடர், திரைப்பட கேலரி , அரசியல் நையாண்டி, ரகசிய தெனாலி(கிசு கிசு??), திரை விமர்சனம் என ஒரு பல்சுவை இணைய தளத்திற்கான அத்தனை அம்சங்களுடன் கலக்கலான தெனாலி தளம்...

பொதுவாக பல்சுவை இணையதளங்கள் தினம் தினம் புதுப்பிக்கப்படாது, ஆனால் தெனாலி தளம் தினம் தினம் நிறைய புதியவைகள் பதியப்படுகின்றன...

உங்களின் படைப்புகளையும் தெனாலிக்கு அனுப்பலாம்...

ஏற்கனவே கலக்க ஆரம்பித்திருக்கும் "தெனாலி" தமிழ் இணையத்தில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க வாழ்த்துகள்..
http://www.thenaali.com/

தமிழ் விக்கிபீடியா - வருந்துகிறேன்

ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ள விக்கிபீடியாவை ஏன் நான் ஆதரிப்பதில்லை என்று ஒரு பதிவிட்டிருந்தேன், விக்கிபீடியாவில் எமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையும் செய்தியையும் சொல்லியிருந்தேன், ஆனால் தமிழ்விக்கிபீடியாவா ஆங்கில விக்கிபீடியாவா என்ற குழப்பத்தில் அது தமிழ்விக்கிபீடியாவில் ஏற்பட்டது போன்ற பொருள் தொனித்துவிட்டது... நான் குறிப்பிட்ட இரண்டும் தமிழ்விக்கிபீடியாவில் ஏற்பட்ட அனுபவம் இல்லை என்பதால் அம்மாதிரி பொருள் தரும் வகையில் எழுதியதற்கு வருந்துகிறேன்...

ஆனால் விக்கிபீடியாவின்(இதில் தமிழும் உண்டு) விதிகள், நடைமுறை பிரச்சினைகள், நிர்வாகியின் கூடுதல் அதிகாரங்கள், எளிதில் குழுக்களால் ஆக்கிரமிக்க படும் அளவிற்கு பலவீனமாக உள்ள விதிகள், குழு பிரச்சினைகள் குறித்தான விமர்சனங்கள் அப்படியே இருக்கின்றன... வேறென்ன விக்கிபீடியா மாதிரி இருக்கிறது காண்பியுங்கள் என்று தான்சொல்ல இயலுகிறதே தவிர இதற்கான களைதலை சொல்ல இயலவில்லை..

ஒரு குழுமம் நடத்துவதோ, ஒரு நிறுவனம் நடத்துவதற்கும் விக்கிபீடியா என்பதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு, ஒரு செய்தி முரசொலியில் வருவதற்கும் நமது எம்ஜியாரில் வருவதற்கும் தினமலரில், தினகரனில் வருவதற்கும் தினமணியில் வருவதற்கும் அதன் உண்மை தன்மைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு, முரசொலி, நமது எம்ஜிஆர், தினமலர் இன்ன பிற தாள்களை படிக்கும் போது செய்திகளோடு சேர்ந்து அந்த நிறுவனத்தின் நிலைப்பாடும் அது எப்படி அதன் செய்தி சேவையில் எதிரொலிக்கும் என்பதை அறிந்தே பகுத்துணர்ந்தே படிப்பார்கள், அது போல ஒரு கலைகளஞ்சியம் ஒரு குழுமத்தாலோ ஒரு நிறுவனத்தாலோ நடத்தப்பட்டால் அதன் சார்புகள் நடைமுறைகள் எல்லாம் கணக்கில் கொள்ளப்பட்டே அது படிக்கப்படும் அதன் தாக்கமும் இருக்கும், ஆனால் பொதுப்படையான பெயரில் இயங்கும் (ஆங்கில)விக்கிபீடியா குழுமத்தின் கட்டுப்பாட்டில் பக்க சார்புடையதாக இருந்தாலும் reference என்றால் அதிலிருந்தே காட்டுகின்றனர்.

எளிதாக பெறப்படாத நடுநிலைபெயர். எளிதில் கிடைக்காத பொதுவானவை என்ற அங்கீகாரம் விக்கிபீடியாவிற்கு எளிதில் கிடைக்கும் போது அதன் நடைமுறைகள் விதிகள் நிர்வாகி அதிகாரங்கள் எல்லாம் இத்தனை குழப்பமாகவும், எளிதில் குழு ஆக்கிரமிப்புக்குள்ளாகும் வகையிலும் நிர்வாகிகள் நினைத்தால் எளிதில் எதையும் தூக்கலாம்(அப்புறம் போராடி பெற வழி உண்டு என்றாலும்) என்னும் போது நிச்சயம் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். இன்று நான் நாளை வேறு யாரேனும் விமர்சனம் செய்வார்கள்.

எனக்கு மின்மடலிலும் பின்னூட்டங்களிலும் மறுமொழிந்த அனைவருக்கும் நன்றி...

இந்தியாவிடமிருந்து சுதந்திரம் வாங்கிய 50 கிராமங்கள்!


ராணுவத்தை அனுப்பி, சொந்த தேசத்து மக்கள்மீதே கொலைவெறித் தாக்குதல் நடத்தும் கொடூரம் ஈழத்தில் நடந்தபோது அதைக் கண்டித்த, கொதித்தெழுந்த மனிதாபிமானிகள் பலர் இப்போது மேற்கு வங்காளத்தில் நடப்பது என்ன என்பதை குறைந்தபட்சம் தெரிந்துகொள்ளக்கூட விரும்பவில்லை. ‘அது மாவோயிஸ்ட் வன்முறை...’ அவ்வளவுதான்! வழக்கம்போல் இந்த இங்கிலீஷ் மீடியா, போர்க்களத்தில் நின்று செய்தி சேகரிப்பது போல சாகசத்தனங்களில் ஈடுபட்டிருக்கிறது. ஏதோ எல்லையில் இந்திய ராணுவமும் பாகிஸ்தான் ராணுவமும் சண்டையிடுவதை வர்ணிப்பது போல் இருக்கிறது அவர்களின் செய்கைகள். லால்கர் என்ற நடுத்தரமான நகரில் இருக்கும் ஆள்நடமாட்டமில்லாத ஒரு போலீஸ் ஸ்டேஷனைப் பிடித்ததும், பரபரப்பான ஃபிளாஷ் நியூஸ்! ஏதோ போரில் சீன வீரர்களை துரத்திவிட்டு சீனப் பெரும்சுவரைக் கைப்பற்றியது போன்ற கூக்குரல்கள்! மாநில முதல்வர் உடனடியாக போலீசுக்கும் துணை ராணுவப் படைக்கும் வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார். இந்த ஆரவாரங்களுக்கு நடுவே சந்தாலி பழங்குடியினரின் கூக்குரல்கள் யார் காதுகளிலும் விழவில்லை...

மேலும் படியுங்கள் இங்கே அழுத்தி

செந்தழல்ரவியிடம் கேளுங்கள்


செந்தழல் ரவி க்கு அறிமுகம் எதுவும் பெருசாக தேவையில்லை, ஜூன் 18, வியாழன் அன்று பிற்பகல் 2.00-4.00 இந்திய நேரத்தில் தமிழ்வெளி தளத்தின் உரையாடியில்(chat) டேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடுகிறார்... டேட்டா எண்ட்ரி தொழில் மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றிய உங்கள் சந்தேகங்கள், விபரங்களை அவரிடம் கேளுங்கள்...

செந்தழல்ரவியிடம் கேளுங்கள்


செந்தழல் ரவி க்கு அறிமுகம் எதுவும் பெருசாக தேவையில்லை, ஜூன் 18, வியாழன் அன்று பிற்பகல் 2.00-4.00 இந்திய நேரத்தில் தமிழ்வெளி தளத்தின் உரையாடியில்(chat) டேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடுகிறார்... டேட்டா எண்ட்ரி தொழில் மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றிய உங்கள் சந்தேகங்கள், விபரங்களை அவரிடம் கேளுங்கள்...

ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ள விக்கிபீடியாவை ஏன் நான் ஆதரிப்பதில்லை

விக்கிப்பீடியா என்பது ஒரு ரெஃபரன்ஸ் தளமாக பயன்படுத்தப்படும் அளவிற்கு எதைப்பற்றியும் அதை மேற்கோள் காட்டி சொன்னால் அது சரியானதாக இருக்கும் என்று நம்ப தகுந்த அளவிற்கு செல்வாக்கு செலுத்த கூடிய ஒரு தளம், அப்படியென்றால் அந்த தளம் எத்தனை தூரம் நடுநிலையாக இருக்க வேண்டும்? எத்தனை தூரம் எந்த குழுவின் ஆதிக்கமும், தனி நபர்களின் ஆதிக்கம் இல்லாமல் இருக்க வேண்டும்? ஆனால் அப்படி இருக்கின்றதா தமிழ் விக்கி பீடியா தளம்?

இது பற்றியெல்லாம் எதுவுமே இல்லாமல் விக்கிபீடியா என்பது ஏற்கனவே அதில் உள்ளே புகுந்த ஒரு குழுவின் ஆதிக்கத்தில் இருப்பது மிக மோசமானது...

சில ஆண்டுகளுக்கு முன் விக்கிபீடியாவில் தகவல்களை தேடியபோது அதிர்ச்சியே மிஞ்சியது... உதாரணத்திற்கு பாமக அன்புமணி அவர்களை பற்றி எழுதியிருந்த தகவல் உண்மைக்கு புறம்பானது, அது என்ன தகவல் என்றால் அன்புமணி அவர்கள் ஒரு பிராமண பெண்ணை அந்த பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக கடத்திக்கொண்டு திருமணம் செய்து கொண்டார் என இருந்தது, அன்புமணி ராமதாஸ் அவர்கள் திருமணம் செய்து கொண்டவர் கிருஷ்ணசாமி என்கிற காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரின் மகள், அவர் சிவப்பு நிறமாக இருப்பார் என்பதாலோ என்னவோ அவரை பிராமண பெண், கடத்திக்கொண்டு திருமணம் செய்துவிட்டார் என்றெல்லாம் இருந்தது, இதை நான் திருத்தி விட்டு வந்தால் மறுநாளே என் திருத்தம் அங்கே இல்லை, மீண்டும் பழைய கதையே அங்கே இருந்தது, பிரபலமான அரசியல் வாதி காங்கிரஸ் தலைவர், எம்.பி என்றெல்லாம் இருக்கும் ஒரு அரசியல்வாதியின் மகளை திருமணம் செய்திருந்த போதே இம்மாதிரி செய்திகளை விக்கிபீடியா தளத்தில், அதை மாற்றம் செய்தாலும் மீண்டும் மீண்டும் அங்கே வருகிறது.

பெரியார் பற்றியும் விக்கிபீடியாவில் எழுதப்பட்டிருந்த அவதூறுகளை திரு அவர்களும் அருள் போன்றோரும் மாற்றி மாற்றி எழுதி சலித்தே போய்விட்டார்கள், முதல்நாள் இவர்கள் மாற்றுவார்கள் மறுநாளே இவர்கள் மாற்றியது இருக்காது... காரணம் ஏற்கனவே அதில் உள்ளே புகுந்தவர்களின் ஆதிக்கத்தில் இருப்பதுவே, இன்றைக்கு விக்கிபீடியாவில் சேருபவருக்கு இருப்பதை விட முன்பே அதில் இணைந்தவர்களுக்கு பிரிவிலேஜ் அதிகம் என நினைக்கிறேன்.

டோண்டு போன்றவர்கள் வலைப்பதிவில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மதிவதினையை கடத்தி திருமணம் செய்துகொண்டாரா என்று தானே கேள்வி தானே பதில் போன்ற தம் வலைப்பதிவில் எழுதினால் யாருக்கும் பிரசிச்னையில்லை ஏனெனில் டோண்டு போன்றோரின் பக்க சார்புகளும் விருப்பு வெறுப்புகளும் நன்றாகவே வாசகர்களுக்கு தெரியும், ஆனால் விக்கிபீடியா ஒரு நடுநிலை தளமாக அதை மேற்கோள் காட்டும் தளமாக நம்(இணையத்தில் உள்ளவர்கள்) உழைப்பில் உருவாக்கி அதன் பின் அதில் இம்மாதிரி உண்மைக்கு புறம்பான தகவல்களை திருத்தி எழுதிணாலும் ஏற்கனவே அதில் நடுநிலைதளமாக பெயர் எடுத்துக்கொண்டு ஒரு சிலருக்கு ஒத்த மாதிரியான கருத்துகள் மட்டுமே அதில் வெளியாகும். நாம் எவ்வளவு மாற்றினாலும் மறுநாளே நம் மாற்றம் திருத்தப்படும்.

இது மாதிரியான ஒரு தளத்துக்கு நம் உழைப்பை தர வேண்டுமெனில் அதன் குறைகள், முன்பு சேர்ந்தவன் பின்பு சேர்ந்தவன் என்ற பிரிவிலேஜ், நடுநிலை கட்டுரை என முத்திரை குத்துவதும் பக்க சார்பு கட்டுரை என லேபில் ஒட்டுவதுமான குறைகள் எல்லாம் திருத்தப்படாமல் விக்கிபீடியாவுக்கு ஆதரவு அளிப்பது என்பது மிக தவறான ஒரு தகவலை பரப்புவதற்கு நாமும் காரணமாகிவிடும்.

எனவே தான் ஒரு சிலரின் ஆதிக்கத்தில் இருக்கும் விக்கிபீடியாவிற்கு நடுநிலை பெயர் கொடுத்து, உழைப்பை கொடுத்து அந்த சிலருக்கு சாதகமான கருத்துகளே நடுநிலை கருத்துகள், ரெஃபரன்ஸ் க்கு தகுந்தவை என்று கொண்டு போகப்படும் நிலைக்கு நானும் ஒரு காரணமாக இருக்க விரும்பவில்லை... அதனால் நான் விக்கி பீடியாவை ஆதரிப்பதில்லை...
தொடர்புள்ள பதிவுகள்
கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: தமிழ் விக்கிபீடியா

வலைப்பதிவர்கள் விக்கிப்பீடியாவுக்கு ஆற்றக்கூடிய பங்களிப்புகள்

விடுபட்டவை » இன்று பதிவர்களுக்கான ...

தமிழகமும், தமிழர்களும் புறக்கணிப்படுகின்றனர்-ஆகா தலைவர் எதுக்கோ அடிபோடுறார்.

தமிழகமும், தமிழர்களும் புறக்கணிப்படுகின்றனர்-மக்களவையில் திமுக காரசாரம்...

சென்னை: ஈழத் தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் சம உரிமை கொடுக்க வேண்டும். ஜனாதிபதி உரையில் தமிழ்நாடும், தமிழர்களும் புறக்கணிக்கப்பட்டதாக நாங்கள் உணர்கிறோம் என திமுக எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன் காரசாரமாக பேசினார்....

தட்ஸ்டமில் செய்தி

உடன்பிறப்பு1: இன்னுமாடா இந்த உலகம் நம்மை நம்புது? கனிமொழி என்னு தமிழச்சிக்கு இன்னும் கேபினேட் அமைச்சர் கொடுக்காமல் தமிழகத்தை புறக்கணிக்கின்றது...

உடன்பிறப்பு2: விடுங்க உடன்பிறப்பே, அதான் தலைவர் கலைஞர் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறதுன்னு அடி போட்டுட்டாரில்லையா கனிமொழிக்கு கண்டிப்பா கேபினேட் கிடைச்சிரும்

தரணி இயக்கத்தில் கலைஞர் கருணாநிதியின் தூள் நடிப்பு

தரணி இயக்கத்தில் கலைஞர் கருணாநிதியின் 'தூள்' நடிப்பில் பட்டைய கிளப்பிய நாடகம்... எத்தேச்சையாக பார்த்தபோது அசந்துவிட்டேன், 'தூள்'படம் எடுக்கப்பட்டு வெளிவந்த‌ போது இந்த காட்சியை கடுமையாக விமர்சித்தேன், இது தமிழ் உணர்வாளர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்துவது போன்றது என்று நண்பர்களிடம் பேசும்போது பகிர்ந்து கொண்டேன்... தரணி இயக்கட்தில் தூள் படத்தில் வந்தது ஃப்ரேமுக்கு ப்ரேம் வரிக்கு வரி, வசனத்துக்கு வசனம் அப்படியே கலைஞர் கம் நடிகர் கருணாநிதி நடித்ததில் அப்போது நான் தரன் மீது வைத்த விமர்சனத்தை திரும்ப பெற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக என்ன நடக்கும் என்பதை அன்றே படமெடுத்த தரணி பாராட்டுகிறேன்...

மைடியர் உடன்பிறப்பு பிரியாணி குஞ்சுகள் இதை பார்த்துவிட்டு என்னை திட்டுவதற்கு பதில் அறிவாலயத்தில் மொத்த குடும்பத்தினரும் தின்றுவிட்டு துப்பிய மிஞ்சிய எலும்பு துண்டை பொறுக்க ஓடவும்

சாருவின் பின்புறத்தில் முள்கம்பி ஏற்றப்படும் போதும்

வாசிப்பு அனுபவம் என்பது வாசிப்பு பயங்கரமாகிவிடக்கூடாது என்பதற்காக இந்த பதிவின் தலைப்பு சாருவின் சூ..வில் முள்கம்பியை ஏற்றினாலும் என்று வைக்கவில்லை.

சாரு என்கிற அறிவுஜூவி எழுத்தாளனின் வன்முறையின் தோல்வி என்ற கட்டுரை படித்தேன், அகிம்சை காந்தி கன்றாவி என்று என்னென்னமோ சொல்கிறார்... எங்களுக்கு வேலையின் போது சொல்லப்படும் பாடம் கஸ்டமர் ஷீவில் இருந்து பார், சரி மாய்ந்து மாய்ந்து இதற்கு மாற்று எழுதுவதை விட ஈழத்தமிழனின் இடத்தில் சாருவை வைத்து பார்த்தேன்...

படங்களை வெட்டி ஒட்டுவதில் எமக்கு அவ்வளவாக என்ன சுத்தமாவே வராது என்றாலும் ஏதோ சும்மா சாருவை ஈழத்தமிழன் இடத்தில் ஒட்டி வச்சிருக்கேன்...



தமிழ்நாட்டில் மீண்டும் ஆரியர் -திராவிடர் போராட்டம் - கருணாநிதி



"தமிழ்நாட்டில் மீண்டும் ஆரியர் -திராவிடர் போராட்டம் ஆரம்பித்துள்ளது நாங்கள் சிப்பாய்களாக இருந்து அவர்களை எதிர்கொள்வோம்" என்று கருணாநிதி தெரிவித்தார்.





உடன்பிறப்பு: என்ன தலைவா இப்போதானே தேர்தல் முடிந்தது, இனி அடுத்த தேர்தலுக்கு தனே ஆரிய திராவிட போரெல்லாம்

ஓ டில்லி அமைச்சரவை பிரச்சினையா?

விடுங்க விடுங்க தலைவா. அதான் சூத்திரர் தயாநிதி மாறன், சூத்திரர் அழகிரிக்கு மந்திரிபதவி கொடுத்தாச்சே, மிச்ச ஆரிய-திராவிட போராட்டத்தை பிறகு பார்த்துக்கலாம் ஓஓ சூத்திரர் கனிமொழிக்கு கேபினேட் தரலைங்கற கோபமோ? இப்போ பாருங்க தலைவா, ஏ பார்ப்பனர்களே, பார்ப்பன அடிவருடிகளே, ஆரிய-திராவிட போர் தமிழ்நாட்டிலே, சூத்திரனுக்கு கேபினேட் இல்லையா? எப்புடி தலைவா ஓகே வா?

சூத்தை பிளந்து



இந்தியாவின்
இறையாண்மையும்

இலங்கையின்
இறையாண்மையும்

காப்பாற்றப்பட்டது

ஈழக்குழந்தையின்
சூத்தை பிளந்து

பிராந்தியில் வீசும் ரத்த வாசனை

நேர்மையான வாக்காளன் நான்
வாங்கின காசுக்கு
வாக்களித்தேன்

குவார்ட்டர் குமட்டியது
எப்போதும் அடிக்கும்
புழுத்த வீச்சமல்ல அது
வேறு ஏதோ ஒன்று!

அரை முட்டையில்
முழு குவார்ட்டர்
அடிப்பேன், இன்றைக்கு
வீச்சம் அதிகமாக உள்ளது

வீச்சம் குறைக்க
பிரியாணி சோத்தை
உள்ளே தள்ளினேன்

பிரியாணியில் தட்டுப்பட்டது
தொடை பீஸ்
கடித்து பார்த்தேன்
கோழியா? கெளதாரியா?

அய்யோ பிரியாணியில்
ஈழத்தமிழ் பிஞ்சின்
தொடை பீஸ்

அப்போ
குவார்ட்டர் பிராந்தியில்?
வீசும் வீச்சம்?
ஈழத்தமிழனின் ரத்த வாசம்

காத்திருக்க வேண்டும்
ஓசி பிராந்திக்கும்
ஒரு பிளேட் பிரியாணிக்கும்
அடுத்த தேர்தல்வரை

அந்த பிரியாணியில்
எந்த பிஞ்சின்
தொடை பீசோ
அந்த பிராந்தியில்
எவன் ரத்த வாசனையோ



காத்திருக்க வேண்டும்
ஓசி பிராந்திக்கும்
ஒரு பிளேட் பிரியாணிக்கும்
அடுத்த தேர்தல்வரை

ஈரோடு கணேசமூர்த்தி மீது கொலைவெறி தாக்குதல்

ஈவிகேஎஸ்.இளங்கோவனை தோற்கடித்த கணேசமூர்த்தி அவர்களின் மீது ஈவிகேஎஸ்.இளங்கோவனின் மகன் குடித்து விட்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார், கணேசமூர்த்தி கைகள் முறுக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து பின் வெளியேறியுள்ளார்... இந்த செய்தி இன்னும் ஊடகங்களில் வெளிவராதது ஆச்சரியம்

திமுக-காங்கிரசுக்கு தமிழக மக்கள் அங்கீகாரம்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக-காங்கிரசுவின் சாதனை செயல்களை தொடர சொல்லி தமிழக மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். வாழ்க தமிழினம்


பணமா? ஈழமா? மற்றும் சில தொகுதி நிலவரங்கள்

தற்போது வாக்கு பதிவு நடைபெற்று கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பணமா? ஈழமா? என்ற அளவில் போட்டி, ஈழம் அதிக அளவில் தாக்கத்தை உருவாக்கினால் திமுக-காங்கிரஸ் மொத்தமாக ஊத்திக்கொள்ளவும் வாய்ப்புள்ளது... பணம் அதிகமென்றால் அதிமுக கூட்டணியின் வெற்றி தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது, யார் மீதும் நம்பிக்கையில்லாமல் 49ஓ போடுவதும் நடக்கிறது எனக்கு முன் வரிசையில் நின்றிருந்தவ்ர் 49ஓ போட்டார்.

போட்டி மிக கடுமையாக உள்ளது, பெரும்பாலான தொகுதிகள் கணிக்க இயலாததாகவே உள்ளது, பத்தாயிரத்துக்கும் குறைவான வாக்குவித்தியாசம் என்பது 4 கிளை செயலாளரோ, ஒரு நகர செயலாளரோ கவிழ்த்துவிட்டாலே தொகுதி கை மாறிவிடும் என்ற நிலையில் கணிப்பு தப்பி போக நிறைய வாய்ப்புகள் உண்டு.

மிககுறைந்த வாக்குவித்தியாசம் என்றாலும் சில தொகுதி நிலவரங்கள் கீழே... ஒவ்வொரு தொகுதிக்குட்பட்ட சிலரிடம் பேசியது, பழைய புள்ளிவிபரங்கள், தொகுதி மறுசீரமைப்பு, கூட்டணி, ஈழம், பணம், உள்ளூர் மற்றும் உள்குத்து அரசியல் என பல விசயங்களை கொண்டே இது தனிப்பட்டு என்னால் கணிக்கப்பட்டுள்ளது. வரும் ஆனா வராது என சொல்ல விரும்பவில்லை, ஒரு ஓட்டு வித்தியாசமென்றாலும் இது தான் என்று சொல்லவே விரும்புகிறேன், எல்லா கணக்கும் 16ம் தேதி நண்பகலுக்கு முன்பே தெரிந்துவிடும்.

வட சென்னை - தா.பாண்டியன்

மத்திய சென்னை - தயாநிதி மாறன்

தென்சென்னை - சிட்லபாக்கம் ராஜேந்திரன்

காஞ்சிபுரம் - டாக்டர் ராமகிருஷ்ணன்

ஸ்ரீபெரும்புத்தூர் - ஏ.கே.மூர்த்தி
எல்லாவற்றிலும் சம வலுவிருந்தாலும் மத்திய தரவர்கத்திடமும் மிடில்கிளாஸ் பெண்களிடமும் மூர்த்தி எடுத்துள்ள நல்ல பெயர் வெகுசில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை படுத்தும்.

விழுப்புரம் - ஆனந்தன்
வாக்குவித்தியாசம் 30 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும், கட்சி பாகுபாடின்றி தலித் மற்றும் தலித் அல்லாதோராக சாதியாக பிளந்துள்ள தொகுதி விடுதலை சிறுத்தைகளுக்கு பாதகமாக உள்ளது.

பாண்டிச்சேரி - நாராயணசாமி
வாக்குவித்தியாசம் 20 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும், கூட்டணி பலம் மற்றும் எல்லாம் பண மயம். ஈழப்பிரச்சினை இங்கு நன்றாக எடுபட்டிருந்தாலும் அதையெல்லாம் ஓட்டாக்குமளவுக்கு பாமகவிற்கு பலமான கட்டமைப்பு மற்றும் கூட்டணி அதிமுகவுக்கு செல்வாக்கு இல்லாததே காங்கிரசை போட்டு பார்க்க இயலாமல் உள்ளது.

கடலூர் - எம்.சி.சம்பத் (விஜயகாந்த் கட்சி சுமாராக ஒரு இலட்சம் வாக்குகளை பெறும்)வாக்குவித்தியாசம் 30 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்

சிதம்பரம் - கணிக்க இயலவில்லை
வாக்கு வித்தியாசம் 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்கும், தொகுதி மறுசீரமைப்பில் விடுதலை சிறுத்தைகளின் வலுவான மங்களூர், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பாதி இவை களுக்கு பதில் பாமக வலுவான ஜெயங்கொண்டமும், அரியலூரும்(இங்கே சிறுத்தைகளும் வலுவானநிலையில் உள்ளார்கள்), குன்னம் சிதம்பரம் தொகுதியில் வந்திருப்பது, கட்சி வித்தியாசமில்லாமல் சாதியால் தொகுதி பிளவுபட்டுள்ளதும் திருமாவிற்கு பாதகமான அம்சங்கள்.

அரக்கோணம் - ஜெகத்ரட்சகன் / ஏ.வேலு - கணிக்க இயலவில்லை

கள்ளக்குறிச்சி - தன்ராஜ் வாக்குவித்தியாசம் 10-15 ஆயிரம், கொமுபே வின் புண்ணியம் கொஞ்சம் தன்ராஜை முன்னிலை படுத்தும்.


திருவண்ணாமலை - வேணுகோபால், வாக்குவித்தியாசம் 10 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் குருவின் நல்ல(?) பெயரும் வேணுகோபாலின் நல்ல பெயரும் என்ற பரப்புரை வேணுகோபால் முந்த முக்கிய காரணியாக இருக்கும்

தர்மபுரி ‍- டாக்டர் செந்தில்

போடுங்கய்யா ஓட்டு ரெட்டெலைய பார்த்து...

தேர்தல் என்றால் வாக்காளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஜாலியோ என்னமோ சிறு வயதிலிருந்தே அரசியல் ஆர்வத்தோடு இருக்கும் எனக்கு எப்போதும் குஜாலாக இருக்கும், ஒரு கிரிக்கெட் போட்டியை பார்ப்பது போன்று பத்திரிக்கைகள் படிப்பது, நண்பர்களுடன் அலசுவது, கருத்து கணிப்பு செய்வது என்று ஒரு சுவாரசியமான விசயமாகவே இருந்தது... வலைப்பதிவு எழுத ஆரம்பித்த பின் தளம் இன்னும் விரிவானது, கடந்த சட்டமன்ற தேர்தலில் நிறைய பதிவுகள் தொகுதி நிலவரங்கள் என்று பதிவு செய்திருந்தேன்...

மும்பையில் தீவிரவாதிகள் தாக்கிய அன்று சில மணி நேரங்களில் அந்த செய்திகளை முதலில் வலைப்பதிவுகளில் பார்த்து அதன் பின் இணையத்தில் செய்திகளை தேடினேன், பின் நேரமாகிவிட்டது என தூங்க சென்றுவிட்டேன் காலையில் பார்த்துகொள்ளலாமென்று, பெரிய அளவில் எந்த விதமான பதட்டமோ பதைபதைப்போ எனக்கு இல்லை, அது எனக்கு மற்றுமொரு வருந்த வைத்த செய்தி என்பதை தவிர இந்தியா என்றோ உணர்வுப்பூர்வமாகவோ அது எனக்கு இல்லை.

கிளிநொச்சி முற்றுகை நிலைமை மோசம் என்று உறுதியாக படித்த அன்று இரவு தூக்கமே வரவில்லை அதிகாலை வரை ஒரு ஒரு இணைய தளமாக தேடுகிறேன், அதிர்ச்சியோடும் துக்கத்தோடும் அடுத்த சில நாட்கள் இதே விசயங்களை தேடிக்கொண்டே இருந்தேன், தூக்கம் வரவில்லை, உணவும் இறங்கவில்லை... அன்று ஆரம்பித்தது இன்று வரை தூக்கத்தில் இருந்து அவ்வப்போது விழித்துகொள்வது என நிம்மதியாக தூங்கி பல நாட்கள் ஆயிற்று.

மும்பை தாக்குதல் உணர்வுப்பூர்வமாக என்னை பாதிகவில்லை ஆனால் ஈழம் உணர்வுபூர்வமாக பாதித்துள்ளது இந்திய தேசியம் பற்றி மிக கடைசியாக எஞ்சியிருந்த குழப்பத்தையும் தீர்த்துவைத்தது.

தேர்தல் அறிவுப்புகள் கூட்டணி கூத்துகள் என அல்லோகலப்பட ஆரம்பித்தும் இதில் மனம் ஒட்டவில்லை, தேர்தல் கணிப்புகள் எழுத முக்கியமான அடிப்படை தேவை நாம் எந்த கட்சி வெற்றி பெறவேண்டும் என நாம் நினைப்பதை கணிப்பாக திணிக்க கூடாது, தேர்தல் கணிப்பு எழுதுவது வெறும் கூட்டல் கழித்தல் கணக்கு மட்டுமல்ல. அது ஒரு பக்குவமாக செய்யப்படவேண்டிய கலை முந்தை தேர்தல் புள்ளிவிபரங்கள், கட்சி உள்ளூர் நிலவரங்கள், சாதி, படிநிலை சாதி உருவாக்கிய சமூக தாக்கங்கள், சாதி மத சமூக முரண்கள், என ஏகப்பட்ட விசயங்கள் உள்ளன, இம்முறை தொகுதி மறுசீரமைப்புஅதனால் குறிப்பாக மிக நன்றாக தெரிந்த தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளுக்கு கணிப்பு எழுதுவது "வரும்.... ஆனா வராது..." மாதிரிதான்....

1991,1996 சட்டமன்ற தேர்தலில் தனியாக நின்று சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயங்கொண்டத்தில் தோற்ற பாமக இரண்டாம் இடத்தை பிடித்தது, வெற்றிக்கு வெறும் ஓரிரு ஆயிரம் வாக்குகள் மட்டுமே தேவைப்படும் நிலையில் 2006ல் திமுக கூட்டணியோடு நின்ற போதும் சில ஆயிரம் வாக்குகளில் பாமகவுக்கு மீண்டும் தோல்வி ஏன்? 1999 பாராளுமன்ற தேர்தலில் தொல்.திருமா என்ற வலுவான வேட்பாளரை எதிர்த்து 65ஆயிரம் வாக்குகள் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் பெற்ற பாமக 2001 சட்டமன்ற தேர்தலில் வென்ற போதும் 48 ஆயிரம் வாக்குகளே பெற முடிந்தது ஏன் என்று அலசினால் அது வெறும் கூட்டல் கழித்தல் கணக்கு மட்டுமல்ல, சாதிபடிநிலை இந்த சமூகத்தில் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பது புரியும்.

2001 தேர்தலில் குறிஞ்சிப்பாடியில் பாமக அதிமுக கூட்டணியில் இருந்த போது திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களிலேயே மிக அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் அந்த நேரத்தில் மாநிலமெங்கும் திமுக தோல்வியடைந்திருந்தது, ஆனால் 2006ல் திமுக கூட்டணி மாநிலமெங்கும் வெற்றி பெற்ற போதும் பாமக திமுக கூட்டணியில் இருந்தும் திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெறும் இரண்டாயிரத்து சொச்சம் வாக்குகள் வித்தியாசத்திலே தான் வெற்றிபெற்றார். இதை ஏன் என்று நோண்டினால் உள்குத்து அரசியல், சொந்த சாதிகாரர்களிடம் சம்பாதித்த வெறுப்பு என எக்கச்சக்கமாக வெளிப்படும்.

நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியில் 1996ல் கூட்டணியில்லாமல் பாஜக வெறும் 10,000 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது, 1998ல் எல்லோரும் பாஜகவெற்றி என்று கணித்த போதும் நாகர் கோவிலில் அதிமுக கூட்டணி இருந்தும் அதே 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது, இதையும் நோண்டி பார்த்தால் மதப்பிரச்சினை புரியும்.

குறைந்தபட்ச புள்ளிவிபர அலசல், அரசியல் மற்றும் சமூகத்தின் நிகழ்வுகள் ஏற்படுத்தும் மாற்றங்களை தொடர்து நோக்குவது என்று கூட இல்லாமல் டேபிள் கருத்துகணிப்புகள் எழுதிய சிலரின் பதிவுகளை பார்த்தபோது எழுத வேண்டும் என்று கை அரித்தது என்றாலும் ஈழ வேதனையில் தேர்தல் கும்மிகளில் நாமும் கலந்து கொண்டு ஈழவேதைனையை மறைக்க என்பதிவுகளும் உதவ வேண்டாமென தொடர்ச்சியாக ஒதுங்கியே நின்றேன்.

சென்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவை விட திமுகவே மேல் என்று திமுக கூட்டணி வெற்றிபெற வேண்டுமென விரும்பி அதை ஆதரித்து பதிவுகளும் பலரிடம் தொலைபேசி திமுக கூட்டணிக்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டேன், சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியின் முதல் இடியாக

நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக முன்பு செய்தது போன்றே திமுக செய்த அடாவடி ரவுடியிசம், அதை தொடர்ந்து மாமன் மச்சான் குடும்ப பிரச்சினையில் அதிமுகவினர் தர்மபுரிவாலாபாக் படுகொலை போலவே மதுரையில் அப்பாவிகள் மூன்று பேரை எரித்து கொன்றது என திமுக தாம் அதிமுகவை விட எந்த விதத்திலும் வித்தியாசப்படவில்லை என்று காட்டியது.

சீமான், கொளத்தூர்மணி போன்றோரை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே தள்ளி தமக்கு எதிராக கருத்து சொல்பவர்களை கைது செய்யும் பாசிச போக்கை கடைபிடித்து ஜெயலலிதாவிற்கும் தமக்கும் எந்த வித்தியாசமுமில்லை என்று காட்டினார் கருணாநிதி.

முத்துக்குமார் செந்தழலில் வெந்து போனதை கூட தம் ஊடக வலிமையால் மறைக்க முயன்றதும் இன்றைக்கு ஈழப்பிரச்சினை தேர்தல் பிரச்சினையல்ல என்று இன்றும் தன் அடிபொடி ஜால்ராக்களின் மூலம் முழுங்குவதும் ஈழ எழுச்சியை ஒடுக்க முயல்வதும் திமுகவிடம் எதிர்பாராத ஒன்று.

சமீப காலமாக ஜெயலலிதாவின் ஈழ ஆதரவும் கோத்தாபய ராஜபக்சே, கபில்சிபிலுக்கு கொடுத்த மறு அடி பதில்களையும் ஜெயலலிதாவின் தேர்தல்கால நாடகமாக எடுத்து கொண்டாலும் கருணாநிதியின் கபட நாடகங்களும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல.

எது எப்படியாயினும் தேர்தலுக்காகவேனும் ஈழ ஆதரவு பேச்சு பேச வேண்டுமென்ற நிலை எல்லோருக்கும் ஏற்பட்டது மிக்க மகிழ்ச்சியே. அதிலும் குறிப்பாக ஜெவின் ஈழ ஆதரவு பேச்சு அதன் தொடர்ச்சியாக

தேர்தல் கள நிலை முழுக்க ஈழத்தை மையம் கொண்டது தமிழின அரசியலை ஒதுக்கிவிட்டு எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.

அதிமுகவை விடுத்து தமிழின அழிப்பை மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசிற்கு ஆதரவும் உதவியும் தரும் காங்கிரஸ் கட்சியை தன் தோள்மேல் தாங்கிக்கொண்டு தமிழின எழுச்சியை அடக்க முயலும் திமுகவை ஆதரிக்கும் அளவிற்கு திமுக எந்த விதத்தில் அதிமுகவை விட மேலானதாக இல்லை... சமதூரத்தில் இரண்டும் இருக்கும் போது தற்போது காங்கிரசை ஆதரிக்காத அதிமுக கூட்டணியை தேர்ந்தெடுக்கும் நிலை.

மேலும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைக்கும் படுதோல்வி தமிழின அரசியலை முன்னெடுக்காததற்கு ஈழப்படுகொலைகளை நிறுத்தாததற்கு கிடைக்கும் தண்டனையாக அமையும்.


இன்றைய நிலையில் ஈழம் விசயத்தில் காங்கிரஸ் என்பது கோப்பை முழுக்க நிரம்பிய விஷம், திமுக என்பது விஷம் கலந்த தேநீர், அதிமுக என்பது பழைய தேநீர், பழைய தேநீர் குடித்தால் ஃபுட் பாய்சன் ஆகாதா என்றால் இந்த மூன்றில் எதையாவது ஒன்றை எடுக்க வேண்டுமெனில் , நாளைக்கு ஃபுட்பாய்ஸன் ஆயிடுமோ என பீதியடைந்து கோப்பை விஷத்தையோ, விஷம் கலந்த தேநீரையோ எடுக்க மாட்டேன்....

காங்கிரசு சிறையில்

திராவிடச் சிங்கம்
என்ற பதிவில் முத்துகுமார் நான் எழுத நினைத்தவைகளையே எழுதியுள்ளார்...

தமிழின உணர்வாளர்களை அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க தள்ளியது கருணாநிதியே... இதை புரிந்து கொள்ளாமல் வலைப்பதிவாளர்கள் சூ... வில் சுண்ணாம்பு என்றெல்லாம் கொக்கரித்தால் (சொல்லி வாயை மூடும் முன் பொய் செய்தியை பரப்பி உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டு சுண்ணாம்பு தடவிட்டார் என்று சொன்னவர்களுக்கெல்லாம் சுண்ணாம்பு தடவினார் கருணாநிதி) வன்னியர் ஒற்றுமை ஓங்குக என அனானியாக பின்னூட்டம் போட்டு காலத்தை ஓட்டலாம்.

Test

Test

கருணாநிதியின் நண்பரா பிரபாகரன்? என் பதிவும் ஜூவி கட்டுரையும்

கட்டுரைகளுக்காக தொடர்ச்சியாக ஈழ‌ம் குறித்து சில விசயங்களை ஆராய்ந்த போது கிடைத்த ஒரு விசயம் கருணாநிதி எப்போதுமே புலிகள் இயக்கத்திற்கு கருணாநிதி எந்த காலத்திலும் ராஜீவ்காந்தி கொலைக்கு முன்பு பின்பு என எக்காலத்திலும் விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக இருந்ததில்லை என்பதை குறித்து ஜனவரி மாதத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதே கருத்துகளோடு ஜூவியில் வந்திருக்கும் கட்டுரை இங்கே....



'பிரபாகரன் எனக்கு உற்ற நண்பர். அவர் தீவிர வாதி இல்லை' என்று கருணாநிதி தனியார் சேனலுக்குப் பேட்டி கொடுத்ததாகவும் பின்னர் மறுத்ததாகவும் தமிழக அரசியல் களம் அதிர்ந்து கிடக்கிறது!

இந்நிலையில், பிரபாகரனின் பழைய நண்பர்கள் பற்றி அறியும் முயற்சியாக ஈழ ஆதரவாளர்கள் சிலரி டம் பேசினோம். ''பிரபாகரன் தமிழகத்தில் காலடி வைத்தபோது, அவருடைய பெயர் கரிகாலன்.

'தமிழ் நியூ டைகர்ஸ்' என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகத் தமிழகம் வந்த பிரபாகரன், எழுபதுகளின் இறுதியில் நெடுமாறனோடு தங்கினார். தமிழகத்தில் பிரபாகரனுக்கு முதல் நண்பர் நெடுமாறன்.

பின்னர் ம.தி.மு.க-வின் ராதாகிருஷ்ணனோடு தொடர்பு ஏற்பட்டது. இருவரும் ரூம் மேட்டாக இருந்தார்கள். அந்த சமயத்தில் தமிழ் நியூ டைகர்ஸ் அமைப்பைச் சேர்ந்த முகுந்தனுக்கும் பிரபாகரனுக்கும் பிரச்னை வர, பாண்டிபஜாரில் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

துப்பாக்கி சூடு சம்பவம் பிரபாகரனுக்குப் பின்ன டைவைக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் பேசினார் நெடுமாறன். மற்ற தமிழகத் தலைவர்களிடம் அந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கச் சொன்னார் எம்.ஜி.ஆர்.! பிரபாகரன் சார்பாக பேபி சுப்பிரமணியமும், ராதாகிருஷ்ணனும் கருணாநிதியை சந்தித்தார்கள். 'இதெல்லாம் இப்போ முக்கியமில்லை. இதுக்காக என் நேரத்தைச் செலவிட முடியாது!' என்று பிரபாகரன் தூதர்களைத் திருப்பி அனுப்பினார் கருணாநிதி.

அப்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த நெடுமாறன், ஈழப் பிரச்னையை இந்திரா காந்தி யின் கவனத்துக்குக் கொண்டுசென்றார். இந்திரா காந்தியும் பயிற்சிக் களம் அமைத்துக் கொடுத்து உதவி னார். கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளில் பயிற்சித் தளங்களை உருவாக்கினார்கள்.

தி.அழகிரிசாமி என்பவர் சிறுமலையில் இருக்கும் தன்னுடைய தோட்டத்தில் புலிகளுக்காக பயிற்சித் தளத்தை அமைத்துக் கொடுத் தார். இதற்கெல்லாம் எம்.ஜி.ஆர். ரொம்பவே உதவியாக இருந்தார். அந்த சமயத்தில் ஒருநாள் எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்துக்குவரும்படி பிரபாகரனை அழைத்திருந்தார் எம்.ஜி.ஆர். காலை நேரத்தில் நடந்த அந்த சந்திப்பின்போது பிரபாகரன் இடியாப்பம் பாயா சாப்பிட்டார். அப்போது, 'உங்களுக்காக மட்டன் செய்து வைத்திருக்கிறேன். எலும்புகளைக் கடியுங்கள். அதிலிருக்கும் மஜ்ஜைகளில் போராட்டத்துக்குத் தேவையான உணர்வு கிடைக்கும்' என்று பிரபாகரனுக்கு அசைவ அயிட்டங்களை சாப்பிடக் கொடுத்தார்.

கிட்டத்தட்ட இதே சமயத்தில் பிரபாகரனை சந்திக்க விரும்பினார் கருணாநிதி. ஆனால், அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. 86-ம் வருடம் தன்னுடைய பிறந்தநாளில் வசூலான தொகையை ஈழப் போராளிக் குழுக்களுக்கு தலா ஐம்பதாயிரமாகப் பிரித்துக் கொடுத்தார் கருணாநிதி. அதைப் புலிகள் வாங்க மறுத்துவிட்டனர். அதன்பிறகு ஈழப் போராளி களுக்குள் சண்டை மூள, சபாரத்தினத்தைக்கொன்று விட வேண்டாம் என்று புலிகளிடம் கருணாநிதி வேண்டுகோள் வைத்தார். ஆனால், சபாரத்தினம் கொல்லப்பட்டார்.

தி.மு.க. புலிகளைக் கொஞ்சம் தள்ளி வைத்துப் பார்த்த சமயத்தில்தான், தி.மு.க-வில் இருந்த வைகோவுக்கு புலிகளுடன் நெருக்கம் ஏற்பட்டது. ராஜீவ் தயார்செய்த இலங்கை ஒப்பந்தத்தில் புலிகளைக் கையெழுத்திடச் சொல்லி இந்தியா நெருக்கடிகள் கொடுத்தபோது, பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய புலித் தலைவர்கள் தமிழகத்திலிருந்து ஈழத்துக்குப் போய்விட்டார்கள்.

அப்போது பிரபாகரனை சந்திக்க வைகோ வன்னிக்காட்டுக்குப் போனார். அதனைத் தொடர்ந்து, 'புலிகளால் கலைஞர் உயிருக்கு ஆபத்து. இதில் வைகோவுக்கும் தொடர்பு' என்று தமிழக அரசின் உளவுத்துறை எச்சரிக்கை செய்ததாக பேராசிரியர் அன்பழகன் அறிக்கைவிட, வைகோ கட்சியிலிருந்து பிரிந்து வந்தார். அதன்பிறகு, புலிகளின் நட்பு வட்டாரத்தில் தி.மு.க. என்றுமே இருந்ததில்லை!'' என்றார்கள் அவர்கள்.


- எஸ்.சரவணகுமார்
- Junior Vikatan