குள்ளநரித்தனம், ரத்தம் குடிக்கும் ஓநாய்

சாதிக்கலவரங்கள் எப்படி உயர்த்தப்பட்ட சாதிக்காரர்களால் தூண்டிவிடப்படுகிறது என்பதை சில புனித பிம்பங்கள் தவிர பலரும் அறிந்திருக்க கூடும்... வேண்டும் முசுலீம்களை கொல்ல நாமெல்லாம் 'இந்து' என்ற வேசம் போட்டு தலித்களை பயன்படுத்திய கூட்டம் இப்போது தி.க.வினரோடு மோத இத்தனை நாள் 'பள்ளி சாதி'யாக இருந்தவர்கள் 'கம்மாள'காரர்கள் இப்போது 'சான்றோர் சாதி' ஆகிவிட்டார்கள்.... இரத்தம் குடிக்கும் ஓநாய்களே, இனியும் உமக்கு கிடைக்கு இரண்டு ஆடுகள் கிடைக்காது....

கடலூர் மாவட்டங்களில் சாதிக்கலவரங்கள் நடந்த காலகட்டங்களில் பெரும்பாலானவை நிலவுடமையாளர்களால் தூண்டிவிடப்பட்டவையாகவே இருக்கும், என்ன "படாச்சி" (படையாட்சி) அவனுங்க துள்ளுறானுங்களே எதுனா கேக்கறது, நாங்க எப்படி கேக்கமுடியும் நீங்க தான் கேக்கனும், இப்படியாக கொளுத்தி விட்டுவிட்டு சென்றுவிடுவர்கள் உயர்சாதி நிலவுடைமையாளர்களாக இருக்கும் ரெட்டியார்கள், உடையார்கள் இன்ன பிற அப்புறம் நேற்று வரை "பள்ளி"யா இருந்தவங்க படையாட்சின்னு ரெட்டியாரே சொல்லிட்டாரு, ஒடையாரே(உடையார்) சொல்லிட்டாருன்னு மூளையை மூத்திர சந்தில் வைத்துவிட்டு கிளம்பிடுவானுங்க.... ரெட்டியார் சொல்லி ஒண்ணு, உடையார் சொல்லி ஒண்ணு, தம் பங்குக்கு ஒண்ணுன்னு கலவர காடாகிடும் ஊரு, இப்போ இந்த மாதிரி எதுவும் வேலைக்காகலை போல கொஞ்ச நாளா அமைதியாத்தான் இருக்கு ஊரு மருத்துவர் இராமதாசு, வி.சி. தலைவர் திருமா போன்றோர்கள் அதிக அக்கறை எடுத்து கிளம்பும் பொறியை உடனடியாக அணைத்துவிடுவதால்....

தினமலரில் ஒரு குள்ளநரி ஓநாய்தனமாக இரத்தம் குடிக்க எழுதிய கடிதம் கீழே... இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு அப்போ மட்டும் தகுதியில்லாதவங்க, ஆனா பூணுல் அறுத்தவங்களை உதைக்க மட்டும் ஆள் தேவை, கோவில் கருவறைக்குள் அனுமதி இல்லை, கோவில் சிற்றம்பலத்தில் பாட போனால் கையை உடைத்து அனுப்புவார்கள் அப்போதெல்லாம் மனுசனா கூட மதிக்கவில்லை இப்போ "சான்றோர்கள்" பூணுல் அறுப்பாளர்களை உதைக்க வேண்டுமாம், குள்ள நரிகளின் குசும்பு வேலைகள் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது, ஓநாய்களின் அழுகுரல் ஓங்கி ஒலிப்பது புரிகிறது.


பூணுல் அறுப்பு வீர தீரம் ஓயுமா?

டி.வி.நரசிம்மன், மயிலாப்பூரிலிருந்து எழுதுகிறார்: ஈ.வெ.ரா., சிலை எந்த ஊரில் சேதப்படுத்தப்பட்டாலும், உடனே பிராமணர் பூணுõலை அறுத் தெறிந்து, தம் வீரத்தை வெளிக்காட்டிக் கொள்வதில், தி.க.,வினர் வெகு முனைப்புடன் செயல்படுகின்றனர்.பிராமணன் மட்டும் பூணுõல் அணிந்து கொள்வதில்லை. "கருமார்' அதாவது, இரும்பு உலைக் களத்தில் வேலை செய்கிறவரும், கோமுட்டி செட்டியாரும், வைசிய செட்டியாரும், சத்திரியர்களும் கூட பூணுõல் அணிகின்றனர்.வன்னிய குல சத்திரியர்கள் பூணுõல் அணிகின்றனர். அவர்கள் தங்களை சான்றோர் என அடைமொழியோடு அழைத்துக் கொள்கின்றனர். சத்திரியனுக்கு உரிய அந்த வேகம், ஆக்ரோஷம், ஆவேசம் இவைகளோடு விவேகமும் கொண்டவர்கள் என்பதாலேயே அவர்கள், "சான்றோர்' எனப்படுகின்றனர்.கருமார் இனத்தவர் பூணுõலை அறுத்தால், உலைக்கள நெருப்பிலேயே போட்டுப் பொசுக்கிடுவர்; வன்னிய குல சத்திரியர் பூணுõலை அறுத்தால் அறுக்கிற கையைக் கண்டந்துண்டமாக வெட்டிப் போடுவர்; பிராமணன் பூணுõலை அறுத்தால் அவன் ஒன்றும் செய்ய மாட்டான். அவன் கையில் தர்ப்பைக் கட்டுதானே இருக்கிறது; இது தான் நிதர்சனம்.ஈ.வெ.ரா., சிலைக்கு தினசரி அபிஷேக, ஆராதனைகள் செய்யச் சொல்லி பணம் கொடுத்துப் பணியில் அமர்த்தினால், தன் வயிற்றுப் பிழைப்புக்காக ஈ.வெ.ரா., சகஸ்ரநாமம் கூட இயற்றி, பூஜை செய்ய முடியும் பிராமணரால். புராண காலத்தில் இரண்யகசிபு, ராவணன் போன்றோர் கூட பூணுõல் அணிந்து கொண்டிருந்தனர். அவர்களும் முனிவர்களை இம்சை செய்ததாக புராணம் சொல்கிறது. ஆனால், அவர்கள் அதற்கான பயனை அடைந்து விட்டனர்.இவர்கள் கூற்றுப்படி ராவணன் தமிழ் பிராமண அரக்கன். ஆகவே, பூணுõல் அணிந்திருந்தாலும் அவன், "நம்மவன்' என்ற பாசம் தி.க.,வினருக்கு உண்டு. ஆனால், அவனை வேட்டையாடியவன் ஒரு சூர்ய குல சத்திரியன் தான்.சூர்ய குலம், சான்றோர் குலம் என்றாலே வன்னியகுல சத்திரியர் தான். அவர்கள் தான் பிராமணர்களை தி.க.,வினரிடமிருந்து காப்பாற்ற வேண் டும். தி.க.,வினர் பிராமணன் மேல் கை வைக்கும்போது, சான்றோர் குலம் கொடுக்கப் போகும் அடியில் தான் இவர்கள் அடங்குவர் போலிருக்கிறது.தங்களுக்கு சம வலிமை படைத்த சத்திரியனோடு மோதிப் பார்க்க தி.க.,வினர் தயாராகும்போது தான், இவர்களின் வீர தீரப் பிரதாபங்கள் அம்பலம் ஏறும்

பின்குறிப்பு:
அய் அய் ஆசை தோசை அப்பள வடை.....

மாயக்கண்ணாடி - சேரனின் சாதிய கூறு

மாயக்கண்ணாடி படம் பற்றி ஏற்கனவே தல பாலபாரதியின் விமர்சனத்தின் தலைப்பு மட்டுமே படித்தேன், எப்படியும் படம் பார்க்கப்போறோம் எதிர்பார்ப்பு இல்லாமல் போகலாமென.... பட விமர்சனம் எழுதலாமென நினைத்திருந்தேன் படம் பார்க்க பார்க்க அந்த ஆர்வமே போய்விட்டது..... முதலில் சுருக்கமா பட விமர்சனம்

இடைவேளைக்கு முன் - போடாங்க.....
இடைவேளைக்கு பின் - ம்....

சேரனுக்கு சொல்ல நினைப்பது - நாலு நல்ல வசனங்கள் மட்டும் படத்தை தூக்கி நிறுத்தாது....

இப்படியாக மட்டுமே நினைத்துக்கொண்டிருந்தேன் படத்தின் கடைசி கட்டத்தில் ராதாரவி வழங்கும் அந்த பெரிய லெக்சர் வரை, ஏற்கனவே சேரன் மீது பாரதி கண்ணம்மா போன்ற படங்களின் வசனங்களில் சாதிய கூறு வசனங்கள் கொட்டி கிடந்ததும் சேரன் மீது புரட்சி புடுங்கி முற்போக்கு பிம்பங்கள் எதுவும் எனக்கு இல்லை.

முகவரி என்றொரு படம் அஜீத் நடித்திருந்தது, கிட்டத்தட்ட இதே கதைதான் எந்த உறுத்தலும் இல்லாமல் படம் முடிக்கப்பட்டிருக்கும், ஆனால் சேரன் இங்கே குலக்கல்வி திட்டத்திற்கு ஆதரவு தருவது மாதிரி உன் தொழிலில் நீ தான் மாஸ்ட்டர், புது தொழிலுக்கு போகனும்னா அங்கே நீ முதலிலிருந்து ஆரம்பிக்கனும், இதைத்தானேய்யா சாதிய சனாதான தர்மம் சொல்லிக்கொண்டு வருகின்றது, பாட்டன் பூட்டன் அப்பன் தொழில் உனக்கு எளிதாக வரும் அதையே செய் என்று அதற்கு சப்பைகட்டும் கட்டுகிறது, முடிவெட்டுபவன் காலம் பூரா முடி வெட்டதான் வேண்டும் என்ன முதலில் தரையில் ரோட்டில் உக்கார்ந்து வெட்டலாம், பிறகு வேண்டுமானால் குளிர்சாதனம் பூட்டப்பட்ட கடையில் வைத்து வெட்டலாம், ஆனால் முடிதான் வெட்ட வேண்டும் கடைசிவரை என்பதைத்தான் வலியுறுத்துகிறாரா சேரன்.

ஏற்கனவே "செய்யும் தொழில் தெய்வம்" என்று சொல்லி அடித்தட்டு மக்களின் கையிலலேறிய பீ வாளியும், தொடப்பைகட்டையும், சவரகத்திகளும், இன்ன பிற கருவிகளும் கையிலிருந்து இறங்காமல் பார்த்துக்கொண்டது சமூகம், இப்போது புது உத்தியாக தொழில் திறமை, செய்யும் தொழிலிலேயே முன்னேறு என்று ஆரம்பித்துவிட்டது சாதிய கூறுகளை தொடர்ந்து வைத்திருக்க.....

பிற்சேர்க்கை
இதுல ஏங்க சாதிப் பிரச்சன வந்தது.? இதிலே சாதிய கூறுகள் நுட்பமாக திணிக்கப்பட்டுள்ளது, புது தொழிலுக்கு போனால் அங்கே நீ முதலிலிருந்து ஆரம்பிக்கனும்... என்பதில் ஆரம்பிக்கிறது, அப்படியென்றால் அப்போ அவனுடைய பழைய தொழில் பிறக்கும்போதே ரத்தத்தில் ஊறியிருந்ததா என்ன? அது கற்றுக்கொள்ளும்போது அதுவும் புதுத்தொழில் தானே? அப்போ மட்டும் அதில் எல்.கே.ஜி இல்லையா?

இங்கே பழைய தொழில் என குறிப்பிடப்படுவது என்ன? ஒரு தொழிலை புதிதாக கற்றுக்கொண்டாலும் அது எப்போது பழைய தொழிலாகுமென்றால் அவங்க அப்பன், குடும்பம் செய்யுற தொழில்தான் அவன் பிள்ளை புதிதாக கற்றுக்கொண்டாலும் அவன் பிள்ளைக்கு அது பழைய தொழில் தான்....

இன்னமும் சாதியை அடிப்படையாக வைத்து அடிமட்ட தொழில் செய்யும் முறை மாறவில்லை, இப்படியான நேரத்தில் அம்மாதிரியான ஒரு தொழிலை காண்பித்து இப்படியாக பேசியிருப்பது சாதிய கூறு அல்லாமல் வேறென்ன?

பாசிச தமிழ்மணம், ராயர் காபி கிளப்பை பார்த்தாவது திருந்துமா?

ஏ பாசிச தமிழ்மணமே, வலைப்பதிவருக்கு 24 மணி நேரம் கெடு அளிக்கின்றீர் உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்க, ஏ பாசிச தமிழ்மணமே உமக்கு என்ன கலைஞர் கருணாநிதி என்று நினைப்போ விளக்கம் விளக்கத்திற்கு விளக்கம் அதற்கு தமிழில் அருஞ்சொற்பொருள் தருதல் அதற்கு இன்னொரு விளக்கமென்று ஸ்ப்பா தாங்கலை, ஏ பாசிச தமிழ்மணமே பதிவு வைத்திருப்பதால் அரவிந்தனை நீக்குகின்றாய் அன்பிற்கினிய ச.திருமலையை என்ன சொல்லி நீக்குவாய் அவர்கிட்டதான் வலைப்பதிவே இல்லியே இருந்தாலும் அது தமிழ்மணத்தில் இல்லியே, அட்லாண்டிக்கிற்கு அப்பால் இருந்து எழுதும் மாபெரும் எழுத்தாளர் சிந்தனையாளர் மா மேதை அன்பிற்கினிய பி.கே.சிவக்குமார் ஏற்கனவே மானத்துடன் பதிவை பாசிச தமிழ்மணத்திலிருந்து விலகியிருக்கும் போது அவரை எப்படி நீக்குவாய் பாசிச தமிழ்மணமே...

ஒரு வலைப்பதிவை நீக்க அதுவும் உம் மீது சந்தனம் பூசும் வலைப்பதிவை நீக்க பாசிசத்தனமாக மின் மடல் அனுப்புகிறாய், பாசிசத்தனமாக பதிவர் பக்கங்களில் அறிவைப்பை வெளியிடுகிறாய், வெளிப்படையாக கெடுவைக்கிறாய்.... ராயர் காப்பி கிளப்பு தெரியுமா? அதை பார்த்து திருந்துமா பாசிச தமிழ்மணம்?

எல்லே ராம் என்ற ராயர் காப்பி கிளப்பு யாகு குழு மாடரேட்டர் எத்தனை அழகாக சொன்னார் ஒரு கடிதத்தில் "பொது மேடை தந்து உபசரிக்கிறோம் என்பதற்காக அங்கே அசிங்கம் பண்ணித் தலையில் பூசிக்கொண்டு ஆடுவேன் என்பதா?

இனிமேலாவது இந்த மாதிரி வி்ஷயங்களில் பெரும்பான்மையினரை இங்கே
புண்படுத்தும்படி எழுதி எங்களைத் தர்ம சங்கடத்துக்கும், வெறுப்புக்கும்,
வேதனைக்கும் உள்ளாக்காதீர்கள். வெளிப்படையாகவே சொல்லுகிறேன். யாருக்காவது இங்கே வருவதோ, நாங்கள் ஏதாவது எழுதுவதோ, பேசுவதோ பிடிக்கவில்லை என்றால், தயவு செய்து தாராளமாக விலகி விடுங்கள். ராகாகிக்கு ஆரம்ப காலத்திலிருந்தே யாரையும் நாங்கள் கையைப் பிடித்து அழைத்து வரவில்லை.

இன்னும் மூன்று வருடங்களில் விண்வெளிக்கு இந்தியா போகப் போகிறது. தரையிலாவது கொஞ்சம் நாகரிகமாக நடந்து கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.

நான் சொல்லுவதை நல்லவிதமாகப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

எல்லே ராமராயன்
"
எல்லே ராமராயன் எத்தனை அழகாக 'ர்' விட்டு போனதற்கு எவ்வளவு ஜனநாயகத்தன்மையோடு பதில் சொல்லியுள்ளார், என்னது என்ன 'ர்' விட்டு போச்சா? ஜெயேந்திரர் எவ்வளவு புனிதமானவர், அவரைப்போய் ஜெயேந்திரன் என்று சொன்னால் என்னாவது.... அது மட்டுமா சொன்னார் எவ்வளவு சனநாயகத்தன்மையோடு சொல்லியிருக்கிறார் "மட்டுறுத்துனர்/ஓனரான என்னால் உங்களை இங்கிருந்து விலக்கியிருக்க முடியும்.
கடிதத்தை வெளியிடாமல் இருந்திருக்கவும் முடியும். ஆனால் நான் செய்யவில்லை.
உங்கள் மடலை மட்டுறுத்தி, எதையும் மாற்றாமல் வெளியிட்டவனும் நான் தான்.
"புரியலையா மேலும் படியுங்கள்

--- In RaayarKaapiKlub@yahoogroups.com, "Nambi" wrote:
தீய சக்திகள் எல்லா இடத்திலும் உண்டு. ஆனால் அதை ஒரு பிரிவினர் மேல் மட்டும் தீவிரவாதம் என்றால் என்ன என்று சற்று சிந்திக்க வேண்டி உள்ளது. ஒஸாமாக்கள், புஷ் கள், ஜெயேந்திரன்கள் மட்டும்தான் தீவிரவாதிகளா?

அன்புடன்
நம்பி.

http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/2800

http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/2798

-0-

Re: Fwd: Condemnation


நம்பி,

ஒசாமா, தெரியும்; புஷ், கேள்விப்பட்டிருக்கிறேன்; ஜெயேந்திரன் யார்?

எல்லே ராமராயன்

------------------------------------------
எல்லே ராமராயன் இப்படின்னா இன்னொரு மாடரேட்டர் இரா.முருகனோ ஜெயேந்திரனில் "ர்" விட்டுபோனதற்கு துடித்து போனாராம், எல்லேராமின் மின் மடலிலிருந்து

"நேற்று முருகன் எந்த அளவுக்குத் துடித்துப் போயிருந்தார் என்பது எனக்குத் தெரியும். நானும் முருகனும் இந்தக் குழுவின் இரு கண்கள். ஒரு கண் வலியில் துடிக்கையில் இன்னரு கண் தூங்குமா? நான் நேற்று பட்ட வேதனைக்கு அளவே இல்லை. இத்னால் கேவலம் அவருக்கோ எனக்கோ இல்லை."

(பாவம் இரா.முருகன் ஜெயேந்திரனில் "ர்" விட்டுப்போனதற்கே துடித்துப்போனவர் சொர்ணமால்யா, சங்கரராமன் கொலை இத்தியாதி இத்தியாதிக்கெல்லாம் என்ன ஆயிருப்பார் என்றே தெரியவில்லை)

ஜெயேந்திரனில் "ர்" விட்டுப்போன மாபெரும் ஆபாச செயலுக்கு, மாபெரும் குற்றச்சாட்டிற்கு ஒரு நீண்ட விளக்க மடல் அப்புறமாதான் நீக்கம், அதும் கூட "After this Nambi was banned from the group. i.e. he existed in the
group. but his priviledge to send mails were taken away." இப்படி சனநாயகத்தன்மையோடு இருக்கும் ராயர் காபி கிளப்பை பார்த்து கற்றுக்கொள்ளட்டும் பாசிச தமிழ்மணம்.

அண்ணார் எல்லே ராமராயனின்(பதிவர் முகமூடி அல்ல, அவரே இதை ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார்) முழுகடிதம் மிகுந்த சனநாயகத்தன்மையோடு இருக்கும் படித்து பாருங்கள்.... பாசிசத் தமிழ்மணம் இனியாவது இதை படித்து திருந்தி நடக்கட்டும்.....


Re: Fwd: Condemnation


நம்பி,

இந்துக்களின் மனதை மிகவும் புண்படுத்தி விட்டீர்கள். தனிப்பட்ட முறையில் எனது நேற்றைய தூக்கம் பலியானதற்கு இந்துமதப் பெரியவர் ஜெயேந்திரர் பற்றிய உங்கள் இழி சொல்லே காரணம். மிகவும் வருத்தப்பட்டேன். 'அவன். இவன்' என்றெல்லாம் சபை நாகரிகம் கூட இல்லாமல் எழுதி விட்டீர்களே? ;-(((

மட்டுறுத்துனர்/ஓனரான என்னால் உங்களை இங்கிருந்து விலக்கியிருக்க முடியும். கடிதத்தை வெளியிடாமல் இருந்திருக்கவும் முடியும். ஆனால் நான் செய்யவில்லை. உங்கள் மடலை மட்டுறுத்தி, எதையும் மாற்றாமல் வெளியிட்டவனும் நான் தான். இந்துவான நீங்கள் ஒரு முஸ்லிம் பெரியவரைப் பற்றியோ, கிறிஸ்தவப் பாதிரியாரைப் பற்றி
யோ கேவலமாக இப்படித் துணிந்து எழுதியிருப்பீர்களோ?

இந்த வருட ஆரம்பத்தில் சென்னை சென்றிருந்தபோது எதிர்பாராத விதமாக, ஜெயேந்திரரின் தரிசனம் எனக்கு மூன்று முறை கிட்டியது. அதில் இரண்டு முறை தனியே வெகு நேரம் பேசவும் முடிந்தது. இதற்கு முன் நான் அவருடன் பேசியதில்லை. அவரோடு பேசுவதற்கு டாட்டாக்களும், பிர்லாக்களும் காத்திருக்கையில் அவர் என்னோடு 45 நிமி
டங்கள் பேசியது மட்டுமல்ல, தனியறையில் பல வி்ஷயங்களைப் பற்றி இரு முறை பேசி ய்து என் அதிர்ஷ்டம், நான் எதிர்பார்க்காத மிகப்பெரிய ஆச்சரியம். பிறகு அவரது பலவித நடவடிக்கைகளை, மிக அருகில், பல பிராமணர் அல்லாத நண்பர்களோடு சேர்ந்து அருகே அமர்ந்து கவனிக்கவும் முடிந்தது. எந்த விதமான ஜாதிப் பிரஷ் டங்களையுமோ, ஏற்றத் தாழ்வுகளையுமோ நான் சத்தியமாக அங்கே காணவில்லை.
சொல்லப்போனால் கூட்டம் கூட்டமாகத் தமிழக அமைச்சர்கள் தான் அங்கே வந்து அவர் காலில் விழுந்து விழுந்து அவரைப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.

நான் பிறந்த ஊரில் அரிஜனக் காலனியில், அங்கே இருப்பவர்கள் அடிக்கடி
கேட்டுக்கொண்டதனால், என்னால் இயன்ற அளவில், ஒரு காளி கோவில் கட்டித் தர ஏற்பாடுகள் செய்து வருகிறேன். (இதையெல்லாம் நான் வெளியில் சொல்லிக் கொள்ளுபவன் இல்லை. இப்போது வருத்த மிகுதியால் சொல்லும்படி ஆக்யிருக்கிறது. மற்ற நண்பர்கள் மன்னிப்பார்களாக.) மிகுந்த சந்தோ்ஷத்துடன் அதைக்கேட்ட ஜெயேந்தி ரர் மடத்திலிருந்தே கொஞ்சம் பண உதவி கொடுக்கவும் ஏற்பாடு செய்கிறேன், அரசிடம் சொல்லி ஏதாவது செய்யச் சொல்கிறேன் என்றார். அரிஜனக் காலனியில் கோவில்
கும்பாபி்ஷேகத்துக்கும் அவரே வருகை தருகிறேன் என்றிருக்கிறார். இத்தனைக்கும் என்னாலோ எங்கள் ஊர் மக்களாலோ அவருக்கு எந்த விதப் பிரதிபலனும் இல்லை. நான் எங்கள் ஊர் அரிஜனக் காலனிக்குள் நுழைந்து எல்லோருடனும் உட்கார்ந்து ஜாலி யாகப் பேசிக் கொண்டிருந்தது ஒரு இனிமையான, சகஜமான நிகழ்வு. மனித நேயம் பழகத் தெரிந்தவர்களிடம் மத மாச்சரியங்கள் அண்டுவது இல்லை.

நேற்று முருகன் எந்த அளவுக்குத் துடித்துப் போயிருந்தார் என்பது எனக்குத் தெரியும். நானும் முருகனும் இந்தக் குழுவின் இரு கண்கள். ஒரு கண் வலியில் துடிக்கையில் இன்னொரு கண் தூங்குமா? நான் நேற்று பட்ட வேதனைக்கு அளவே இல்லை. இத்னால் கேவலம் அவருக்கோ எனக்கோ இல்லை.

பொது மேடை தந்து உபசரிக்கிறோம் என்பதற்காக அங்கே அசிங்கம் பண்ணித் தலையில் பூசிக்கொண்டு ஆடுவேன் என்பதா?

இனிமேலாவது இந்த மாதிரி வி்ஷயங்களில் பெரும்பான்மையினரை இங்கே
புண்படுத்தும்படி எழுதி எங்களைத் தர்ம சங்கடத்துக்கும், வெறுப்புக்கும்,
வேதனைக்கும் உள்ளாக்காதீர்கள். வெளிப்படையாகவே சொல்லுகிறேன். யாருக்காவது இங்கே வருவதோ, நாங்கள் ஏதாவது எழுதுவதோ, பேசுவதோ பிடிக்கவில்லை என்றால், தயவு செய்து தாராளமாக விலகி விடுங்கள். ராகாகிக்கு ஆரம்ப காலத்திலிருந்தே யாரையும்
நாங்கள் கையைப் பிடித்து அழைத்து வரவில்லை
. எங்களுக்குப் பிடித்ததை எங்கள் வீட்டுக்குள் தான் நாங்கள் பேசிக் கொள்கிறோம். எங்களுக்கு வெற்றுக் கூட்டம், வெறுப்பு கோ்ஷங்கள் தேவையில்லை. கற்றுத் தெளிந்த பல அறிஞர்கள் இங்கே எங்களுக்குப் பக்கபலமாக இருந்து எங்களை நல்ல வழியில் நடத்திச் செல்லுகிறார்கள்.

இன்னும் மூன்று வருடங்களில் விண்வெளிக்கு இந்தியா போகப் போகிறது. தரையிலாவது கொஞ்சம் நாகரிகமாக நடந்து கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.

நான் சொல்லுவதை நல்லவிதமாகப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

எல்லே ராமராயன்

பின்குறிப்பு

"மாம்ஸ்களா ஆட முடியலையா?"

ஸாரி மாம்ஸ்களா

எங்க அப்பன் தாத்தன் இளிச்ச வாய்காலம் மலையேறிடுச்சி,
தட்டு தடுமாறின எங்க அண்ணனுங்க காலமும் முடிஞ்சி போச்சி
இப்போ ஃபுல் ஸ்பீடு தான், குறுக்கால நீ பூந்தா பேஜார் ஆயிடுவ

பலவீனமான இதயம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்



நேற்று இரவு சிங்கை வந்திறங்கிய பொட்டீக்கடையார் படம் இது, படத்திற்கு போஸ் கொடுத்து விட்டு சென்றவர் அதன் பிறகு மொத்தமாக காணாமல் போய்விட்டார், மேற்படி படத்தில் காணப்படும் நபரை யாராவது பார்த்தால் உடனடியாக எமக்கு தெரிவிக்கவும்..

அமுக இளஞ்சிங்கம் வரவனை செந்திலின் பிறந்தநாள் ஏற்பாடுகள் சிங்கையில் செய்யப்பட்டிருந்தன, ஆனால் இளஞ்சிங்கம் அவசர அலுவல் காரணமாக வரமுடியாததால் சிங்கையில் அமுகவினர் சோகமாக காணப்பட்டனர், அமுக இளஞ்சிங்கம் வரவனைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

பொட்டீகடையார் அழைக்கிறார் - சிங்கையில் அமுக மாநாடு

பொட்டீக்கடையார் அழைக்கிறார்



அனானிகள் முன்னேற்ற கழகத்தின் (அமுக) முதல் உலக மாநாடு சிங்கையில் இன்றிரவு தொடங்கி ஞாயிற்றுகிழமை முடிவடைகின்றது(6,7,8 ஏப்ரல் 2007) மாநாட்டு அழைப்பாளர் அஞ்சா நெஞ்சன், அசகாய சூரன், அகில உலகமெங்கும் அவுஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை படையெடுப்பு நிகழ்த்தும்(டேட்டிங் சைட்டுகளில்) பொட்டீக்கடையார் என்று அழைக்கப்படும் சத்ய ராஜேந்திர சோழர்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அமுக வின் மற்றொரு முக்கிய புள்ளி இளஞ்சிங்கமும் வருகை புரிகின்றார், பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது பெயர் மற்றும் இன்ன பிற விபரங்கள் இரகசியமாக வைக்கப்படுகின்றது.

மாநாட்டு விபரங்கள் சந்திப்பு தொடர்பாக இளம் புயல் குழலியை தொடர்பு கொள்ளவும்

நேரடியாக அமுக பொட்டீக்கடையாரை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் மற்றும் இடவிவரங்களை பிறகு இதே பதிவில் வெளியிடுகின்றோம்.

அமுக மாநாட்டில் கண் பார்வையற்றவர்கள் பேசும் அதிசயமும், வாய்பேச முடியாதவர்கள் கேட்கும் அதிசயங்களும் நிகழ்த்தப்படும், ஹால்மார்க் முத்திரை பொறித்த வைர மோதிரத்தை பொட்டீக்கடையார் தம் மந்திர சக்தியால் வரவழைத்து இளம் புயல் குழலிக்கு வழங்கும் அதிசயமும் இடம்பெறலாம்.

அலைகடலென திரண்டு வாரீர்.... ஆதரவு தாரீர்

இடஒதுக்கீடு பாடல் - திரு.ஆர்யா ஐ.ஐ.டி. காரக்பூர்



1957. The first day of Dorothy Counts at the Harry Harding High School in the United States . Counts was one of the first black students admitted in the school, and she was no longer able to stand the harassments after 4 days.

இப்போதும் ஐ.ஐ.டி ஏ.ஐ.எம்.எஸ் போன்ற கல்விநிலையங்களில் உயர்சாதிவெறியர்கள் இம்மாதிரி பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களை அவமானம் செய்ததாக படங்கள் வெளியாயின... இது தொடர்பான படங்கள் பதிவுகலை வலைப்பதிவிலே ஏற்கனவே படித்திருந்தேன் இப்போது சுட்டி கிடைக்கவில்லை யாரேனும் அந்த படங்களையும் சுட்டிகளையும் தந்துதவுங்கள்.

செல்லாவின் இந்த பதிவிலிருந்து ஐ.ஐ.டி. காரக்பூர் திரு. ஆர்யா அவர்களின் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான பாடல் இங்கே



F**k you..
For your mistakes
they just dont blame you
they blame your community
blame your ancestors too
They say its obvious
call it genetical issue

this is what happens
I know, for i went through
why wont your heart say
"f**k you" ??

So whats your fault
according to them?
can, being from this race
be a matter of shame?
They'll always be harsh
no matter what you proclaim

this is what happens
yeah this is true
why wont your heart say
"f***k you"??

I dont think you err
when you spit on them
their shitty practices
is to be condemn
we never wanted
but they rose the issue of "us and them"

we wanted equality
our policy needs review
its better to kick
and snatch it from you

you donno wat justice means
cause you are askew
and thts why our heart says
"f***k you"!!!

-- Saurav arya
http://panaache.blogspot.com/
Mechanical Engineering
IIT Kharagpur

நன்றி செல்லா...

உயர் சாதியிலிருந்து க்ரீமி லேயரை ஆரம்பிப்போம்

க்ரீமிலேயர் வரையறை என்ன? பொருளாதார நிலை க்ரீமிலேயரை தீர்மாணிக்கின்றதா? ஏற்கனவே பலமுறை தேய்த்து விளக்கி சலித்து போனது புரியவேண்டாமென்று இருப்பவர்களுக்கு விளக்கி கிழிக்கத்தேவையில்லை, ஆனால் புரிய வேண்டியவர்களுக்கு புரியாமல் இருப்பது தான் கொடுமை, விளக்கமாக பின்னொரு நாள் க்ரீமிலேயர் பற்றி எழுதுகிறேன் அதற்கு முன் க்ரீமிலேயரை உயர்சாதியிலிருந்து ஆரம்பிக்கலாம் சோதனை முறையில். இதை வலியுறுத்தி முன்பு நான் எழுதிய கட்டுரை இங்கே மீள்பதிவாக

செல்லா சொல்வது போல நாங்கள் என்று வந்துவிட்டால் கலைஞர் ராமதாஸ் குழந்தைகள் தான் கண்ணுக்கு தெரிகிறார்கள். அதுவே உங்களுக்கு என்று வந்தால் கோயிலில் மணியாட்டும்ஏழை அம்பிகள் தான் தெரிகிறார்கள்.

பொருளாதாரம் க்ரீமிலேயருக்கு அடிப்படையாக இருக்கக்கூடாது, க்ரீமிலேயர் பற்றிய உயர்சாதியினரின் கூச்சலுக்கு அடிப்படை காரணம் இடஒதுக்கீட்டை முழுமையாக ஒழிப்பதுவே, அதே மாதிரி இடஒதுக்கீட்டை ஒருதலைமுறை பயன்படுத்தினால் அவர்களின் பிள்ளைகள் பயன்படுத்தக்கூடாது என்பதும் ஒயின்ஷாப்பில் ஊற்றிக்கொடுக்கும் அரசாங்க வேலை இடஒதுக்கீட்டில் கிடைத்துவிட்டால், 'டி' கிரேட் பியூனாகவும், கிளார்க்காகவும் இடஒதுக்கீட்டால் பெற்றுவிட்டால் அவர்கள் பிள்ளைகள் இடஒதுக்கீட்டிற்கு தகுதியில்லையா? கலைஞருக்கும் இராமதாசுக்கும், பிற்படுத்தப்பட்ட ஐ.ஏ.எஸ், தாசில்தார்கள் எத்தனை பேர் இருக்கின்றனர்?

படிக்காத, கல்வி விழிப்புணர்வு இல்லாத குடும்பத்திலிருந்து ஒரே தலைமுறையில் ஹைஜம்ப் அடித்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்ல இயலாது, படிப்பறிவில்லாத குடும்பத்திலிருந்து கிளார்க்காகவும், 'டி' கிரேட் பணியாளர்களாகவும் வெளிவருவார்கள் (என் தந்தை தலைமுறை இப்படித்தான் பெரும்பாலும் ), அதிலிருந்து அடுத்த தலைமுறை தான் அடுத்த உயர்கல்வி நிலைக்கு கொண்டு சேர்க்க முடியும், உயர்சாதியினர் இடஒதுக்கீட்டிற்கே ஆப்பு வைக்கும் எண்ணத்தில் தான் இதை தடை செய்ய சொல்கின்றனர், ஒயின்ஷாப்பில் ஊற்றிகொடுக்கவும், 'டி'க்ரூப் கிளார்க்காக்வும் தலைமுறையை நிறுத்திவிட்டு அய்யோ பாருங்கள் இடஒதுக்கீடு கொடுத்தும் ஐஐடியில் இத்தனை இடம் காலியாக இருக்கின்றது, கல்லூரி ட்ராபவுட் இத்தனை என்று ஓலமிட்டு இடஒதுக்கீட்டினால் பலன் இல்லை என்று மொத்த இடஒதுக்கீட்டிற்கும் ஆப்படிக்க நினைக்கின்றனர். பொருளாதாரத்தை க்ரீமிலேயருக்கு அளவுகோலாக கொள்ளச்சொல்லும் உயர்சாதி ஏழைப்பங்காளர்கள் முதலில் அவர்கள் சாதியில் இருக்கும் ஏழைகளுக்கு வழிவிடட்டும், எப்படியா? கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்

உயர் சாதியிலிருந்து க்ரீமி லேயரை ஆரம்பிப்போம்

1994 அரசு பொறியியல் கல்லூரியில் ஓராண்டிற்கான கல்விக்கட்டணம் ரூ.2500, இன்றும் கூட ரூ.17,000 கட்டணம், ஆனால் 1994லேயே ஒரு பொறியாளரை உருவாக்க அரசாங்கம் செய்யும் செலவாக எங்களுக்கு ஒரு கூட்டத்தில் சொல்லப்பட்டது இரண்டு இலட்சம், அன்று ஒரு மருத்துவ படிப்புக்கு அரசாங்கம் செலவு செய்வதாக சொல்லப்பட்ட தொகை ரூபாய் ஐந்து இலட்சம், ஆனால் கல்விக்கட்டணம் க்ரீமிலேயர், க்ரீமி இல்லாத லேயர் என எல்லோருக்குமே ரூ.2500 அப்போது, இப்போது ரூ.17,000 இரண்டு இலட்சம் படிப்புக்கு மொத்தம் மாணவர் செலுத்தியது ரூ.10,000. மட்டுமே.

இடஒதுக்கீடு இன்னும் இரண்டாம் தலைமுறையை எட்டாத நிலையில் (இது தொடர்பான என்னுடைய முந்தைய பதிவு இடஒதுக்கீடு தலைமுறை தலைமுறையாகவா?)இப்போதே க்ரீமிலேயருக்காக அழும் ஆட்கள் முதலில் க்ரீமிலேயரை உயர்சாதியிலிருந்து ஆரம்பிப்போம், ஒரு 5 அல்லது 10 ஆண்டுகள் பரிசோதனை அளவில் செயல்படுத்தலாம், பிறகு மற்றவர்களுக்கும் அதை செயல்படுத்தலாம், இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயருக்காக அழும் ஆட்களின் முரண்பாடு என்னவென்றால் இவர்கள் இடஒதுக்கீடே வேண்டாமென்பவர்கள்.

க்ரீமிலேயர் தொடர்பான ஆலோசனைகள்

1. க்ரீமிலேயருக்கு அரசு நிதியில் நடைபெறும் அல்லது அரசாங்க நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் இடம் இல்லை, அவர்கள் வேண்டுமெனில் தனியார், சுயநிதிக்கல்லூரிகளில் படித்துக்கொள்ளட்டும்.

2. அப்படியே அரசு கல்வி நிறுவனங்களில் சேர்ந்தாலும் க்ரீமிலேயர் கட்டணங்களுக்கு அரசு மானியம் எதுவும் தரப்படக்கூடாது, அவர்களுக்கான முழுக்கல்வி செலவையும் அவர்களே ஏற்கவேண்டும், அதாவது ஒரு மருத்துவ படிப்புக்கு அரசாங்கம் பத்து இலட்சம் செலவு செய்கிறதென்றால் பத்து இலட்சமும் க்ரீமிலேயர் மாணவர்களிடமிருந்தே வசூலிக்கப்படவேண்டும். க்ரீமிலேயருக்கு ஏன் மானியங்கள் ?

க்ரீமிலேயருக்கு எப்படி அரசு ரேசன் கடை அரிசி தேவையில்லையோ அதே போல அரசாங்க கல்வி கூடங்களிலும் அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களிலும் மட்டும் எதற்கு இவர்களுக்கு படிக்க இடம் தரவேண்டும்?

இடஒதுக்கீட்டில் கிரீமிலேயரை விலக்கும்போது எப்படி அதன் கீழுள்ளவர்கள் பயன்பெறுவார்கள் என்று சொல்லப்படுகின்றதோ அதே போல உயர்சாதியில் க்ரீமிலேயரை அரசு கல்வி நிறுவனங்களில் இடமளிக்காமல் இருந்தால் பணமில்லாத ஏழை உயர்சாதி மாணவர்கள் எளிதாக இந்த கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவார்களே....

இதை பரிசோதனை முறையில் உயர்சாதியிலிருந்து ஆரம்பிப்போம், பிறகு அதை மற்ற சாதிகளுக்கும் விரிவுபடுத்தலாம்.

உயர் சாதி க்ரீமிலேயரே தயாரா?, உயர் சாதி க்ரீமிலேயரே நீங்கள் தயாரா சொல்லுங்கள்.

பிற்சேர்க்கை:

ஏன் இந்த க்ரீமிலேயரை உயர்சாதியிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமென்பதற்கான என் பதில்


தினமலர் செய்தியில் பொறியியல் படிப்பில் காலியாக உள்ள 16,440 இடங்களில் பெரும்பாலும் MBC, SC, ST யாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

http://www.annauniv.edu/tnea06/rama21.doc

CATEGORY OC BC MBC SC ST
ANNA UNIVERSITY 0 0 0 0 0
GOVT. & GOVT AIDED 0 0 0 0 1
SELF FINANCING 2839 4757 3804 4569 434

இலட்சக்கணக்கில் பணத்தை அழுது படிக்க வேண்டிய சுயநிதிக்கல்லூரிகளில் மட்டும் தான் இடம் நிரம்பாமல் உள்ளது,

31% OC யில் 2839 இடங்கள் மட்டுமே காலி ஆனால் 30% BC யில் 4757 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 70% அதிக காலியிடங்கள்)

20% MBC யிலோ 3804 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 107% அதிக காலியிடங்கள்)

18% SC யிலோ 4569 இடங்கள் காலி, (OCயை விட கிட்டத்தட்ட 177% அதிக காலியிடங்கள்)

இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் OCயில் படிக்க முடிந்தவர்கள் அதிகம், ஆனால் அதே நிலை BC யில் OC யைவிட குறைவு ஆனால் MBCயைவிட அதிகம், இதே SC யை பார்த்தோமென்றால் காலியிடங்கள் MBCயைவிட அதிகம்.

வர்ணாசிரம அடுக்கு முறை ஏற்படுத்திய ஏழ்மைக்கு இந்த புள்ளிவிபரம் ஒரு உதாரணம்.

அதாவது குறைந்த கட்டணத்தில் அரசு கல்லூரிகள் இடமில்லையென்றாலும் OCயில் பணம் கொடுத்து சுயநிதிக்கல்லூரிகளில் படிக்கும் சக்தி மற்ற அனைத்து பிரிவினரையும் விட அதிகம், அதனால் தான் இதை முதலில் OCயில் ஆரம்பித்தால் உயர்சாதி ஏழை மாணவர்களுக்கு பயன்படும் அல்லவா.

உயர்சாதி க்ரீமிலேயர் பற்றி ஞானியின் கருத்து...

http://www.keetru.com/dheemtharikida/sep06/gnani_5.html
2. இட ஒதுக்கீடு பெற்றுள்ள சாதிகளில் வசதி படைத்த மேட்டுக்குடியினரே (கிரீமி லேயர்) அதிக இடங்களைச் சுருட்டிக்கொள்வதைப் பற்றி எல்லாரும் மழுப்புவது ஏன்?

அரசியல், கல்வி, தொழில் என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், துளியும் பண பலம் இல்லாதவர்களைவிட, ஓரளவேனும் பண பலம் உள்ளவர்கள் தான் முதலில் நுழையவும், நுழைந்த பின் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ளவும் முடியும் என்பதும், வசதி யற்றவர்கள் முண்டியடித்து, முட்டி மோதித்தான் தங்கள் இடத்தைப் பிடிக்க முடியும் என்பதும்தான் நீண்ட காலமாக சமூகத்தின் நிலை. ராஜாஜி, பெரியார், நேரு என்று அரசியலில் பெரும் தாக் கத்தை 20&ம் நூற்றாண்டில் ஏற்படுத்திய பலர், வசதியான பின்னணியில் இருந்து வந்தவர்கள்தான். அவர்களுடைய சமூக அக்கறைகள் தெளிவாக இருந்ததனால் தான், அவர்களைப் பின்பற்றி வந்த வசதியற்றவர்களான சத்தியமூர்த்தி, காமராஜர், அண்ணா போன்றவர்கள் தங்களுக்குரிய இடத்தைப் பெற முடிந்தது. சமூகப் பார்வையில் தெளிவும், தனக்குச் சமமான கூர்மையும் உடைய ஏங்கல்ஸ் போன்ற பணக்கார நண்பர் இருந்திரா விட்டால், வசதி குறைந்தவரான கார்ல் மார்க்ஸ் இன்னும் அதிக சிரமப்பட்டு இருப்பார்.

எனவே, இட ஒதுக்கீட்டிலும், அந்தந்த சாதியில் ஓரளவு வசதியுள்ளவர்களே முதல்கட்டத்தில் உயர் கல்வி வரை வர முடியும். அப்படி வருபவர்களில் அக்கறை உள்ளவர்கள்தான் மற்றவர்களை அரசி யல் படுத்தித் திரட்ட முடியும். அந்த நிலைக்கு வருவதற்கு அந்தந்த சாதி ஏழைகள் முதலில் அடிப்படைக் கல்விக் கான வசதியைப் பெற்றாக வேண்டும்.

தவிர, இட ஒதுக்கீடு என்பது பொருளா தார ஏற்றத் தாழ்வைச் சரி செய்ய வந்த திட்டம் அல்ல. சாதிகளிடையே ஏற்றத் தாழ்வைச் சரி செய்யவும், எல்லாச் சாதிகளுக்கும் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொடுக்கவும் மட்டுமே ஏற்படுத்தப்பட்ட திட்டம். வறுமை ஒழிப்புக்கும் வர்க்க சமத்துவத்துக்கும் வேறு திட்டங் களைத்தான் நாம் உருவாக்க வேண்டும்.

இட ஒதுக்கீட்டில் அந்தந்த சாதிக்கான இடங்களில் முதல் தலைமுறையாகப் படிப்போர், ஏழைகளுக்கு முன்னுரிமை தருவது சரிதான். ஆனால், அதை ரிசர்வேஷன் இடங்களில் மட்டும் செய்வது சரியாகாது. ஓப்பன் கோட்டாவிலும் அதே போல ஏழைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.சமையல்கார பிராமணர், சவுண்டி பிராமணர், டிரைவர் முதலியார் ஆகியோரின் குழந்தைகளுக்கு முன்னு ரிமை தர, மூன்று தலைமுறையாக வக்கீல்களாக இருக்கும் அய்யர்களும், ஆடிட்டர்களாக இருக்கும் அய்யங் கார்களும், டாக்டர்களாக இருக்கும் முதலியார்களும் முன்வருவார்களானால், மற்ற சாதிகளிடமும் இது குறித்து நாம் விவாதிக்கலாம்.

பின்னூட்டத்திற்கு இங்கே சுட்டவும்