ஒரு ரஜினி ரசிகனின் ஆசை

இந்த பதிவு ரஜினியின் முரட்டு பக்தருக்கு சமர்ப்பணம்

குழலி மற்றும் இன்ன பிற வலைப்பதிவர்களுக்கும் ரஜினி தொடர்பான வேலைகளிலிருந்து ரஜினி ரசிகர்கள் ஓய்வளித்துள்ளனர், ஒரு ரஜினி ரசிகனின் ஜீனியர் விகடனில் வெளிப்படுத்திய ஆசை இதோ...

"முட்டாள் ரசிகனாக ரஜினி பிறக்க வேண்டும்"

கோவை மாவட்ட ரசிகர்மன்ற பிரதிநிதியான செளந்தரபாண்டியனிடம் பேசிய போது "இந்த விவகாரம் தொடர்பாக தலைமைக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன், அதையே எனது கருத்தாக போட்டுக்கொள்ளுங்கள்" என்று கடித நகலை கொடுத்தார்.



அதிலிருந்து...

வாய்ஸ் கொடுக்கும் போது ரசிகர்கள் வேண்டும் (சொந்த ஈகோவை தீர்த்துக்கொள்ள), மதுரையில் அடிவாங்க ரசிகர்கள் வேண்டும், படத்தை பார்க்க ரசிகர்கள் வேண்டும்(ஈகோ தீர்ந்தால் போதுமா? துட்டு துட்டுடா கண்ணா). மற்ற எதற்கும் ரசிகர்கள் வேண்டாம் என்பது என்ன நியாயம்? (உதிர்ந்த ரோமம்னு யாருப்பா அங்கே முனகுவது...)

ரசிகர்கள் வேண்டாம் என்றால் எனக்கு ரசிகர்களே வேண்டாம் என்று அறிவித்து விடுவது தானே? (அதெப்படி சிவாஜி படம் ஓடவேண்டாமா? வாய்ஸ் தந்து வெட்டி பந்தா உடவேண்டாமா?)

ஆன்மீகம்,அமைதி என்று அலைந்து கொண்டிருக்கும் உங்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்(ஆன்மீகம்,அமைதி என்று அலையும்போது கூடவே போட்டோகிராபர்,நிருபர்னு சேர்த்துக்கொண்டே தானே அலைகின்றார்...), தமிழகத்தில் உள்ள அனைத்து ரசிகர்கள் உள்ளம் மகிழாமல்....(ரசிகர்களுக்கு மகிழ்ச்சியா?!... அதுவும் ரஜினி ரசிகர்களுக்கா?!) உங்களால் ஆண்டவனையோ, அமைதியையோ காண முடியாது (என்ன இப்படி சொல்லிட்டிங்க, அவர் ஏற்கனவே ஜெயலலிதாவை தைரியலட்சுமியா கண்டிருக்கின்றார், ஒரு வேளை வருங்காலத்தில் இராமதாசை கடவுளா காண்பாரோ என்னமோ? ). மறுஜென்மம் என்று ஒன்று இருந்தால் நான் உங்களைப் போல புத்திசாலி தலைவனாகவும்(உசாரான பார்ட்டிப்பா நீங்க), நீங்கள் எங்களைப்போல முட்டாள் ரசிகனாகவும்(ஆகா அப்படிபோடு அருவாளை!!!), இதே சத்தியநாராயணா அகில இந்திய தலைவனாகவும் அமைய வேண்டும்(அது சரி அப்போ அடுத்த பிறவியிலும் சத்தியநாராயணாவுக்கு ரசிகர்மன்ற தலைவர் தானா?). ரசிகர்களாக இருந்த நாங்கள் பட்ட, படுகின்ற துயரத்தை துன்பத்தை நீங்களும் சத்தியநாராயணாவும் படவேண்டும், இதற்காக இறைவனைப் பிரார்த்திக் கொண்டே இருப்பேன்....(ம்....)

நன்றி
ஜீனியர்விகடன்

அடைப்புக்குறிக்குள் இருப்பவைகள் மட்டும் நம்ம எழுதியதுங்கோ!!!

உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பு ரணகளமா இருக்கு!

தலைவா நீங்க சூழ்நிலைவாதியா? சுயநலவாதியா? சந்தர்ப்பவாதியா?



ரஜினி மனதினுள்: போஸ்டர் ஒட்டி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பு ரணகளமா இருக்கு!

ரஜினி ரசிகர்கள் மனதினுள்: நீங்க பஞ்ச் டயலாக் பேசி பேசி, தேர்தலுக்கு தேர்தல் வாய்ஸ் கொடுத்து உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் எங்க உடம்பு ரணகளமா இருக்கு!

பொது ஜனம்: நல்லவேளை நாங்க தப்பிச்சோம் ரணமாகாம....

ஒரு வலைப்பதிவர்: அப்போது உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என்று கூறிவிட்டு தலைவர் அரசியலுக்கு வரவில்லை, வரவே மாட்டார் எம்.எல்.ஏ கனவு மண்ணாகி போனவுடன் இப்போ சூழ்நிலைவாதியா? சுயநலவாதியா? சந்தர்ப்பவாதியா? என போஸ்ட்டர் அடிக்கும் இவர்கள் பெரிய சுயநலவாதியா? அல்லது ரசிகர்களை சொந்த பகை தீர்க்க பயன்படுத்திய ரஜினி பெரிய சுயநலவாதியா?

நன்றி
தினமலர்

தினமலர் சுட்டி

ராமதாஸ் வளையும் ரகசியம்

'உயிரே போனாலும் கொள்கையை மாற்றிக்கொள்ள மாட்டேன்' என்று சொல்வது அரசியலில் வீரம் நிறைந்த பேச்சாக இருக்கலாம் ஆனால் இயற்கை நமக்கு வேறுவிதமான பாடங்களையே கற்றுத்தருகின்றது, புயல் வீசும் பொழுது பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து விழுகின்றன, வளைந்து கொடுக்கும் நாணலோ பிழைத்து நிற்கின்றது.

தமிழக அரசியலில் பிடிவாதக் காரராக தெரியும் டாக்டர் ராமதாஸ் உண்மையில் சூழ்நிலைக்குத் தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்கிறார் வன்னியர்-தலித் ஒற்றுமைக்காக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவனுடன் இணைந்து பணியாற்ற அவர் விரும்பினாலும் தேர்தல் சூழ்நிலை அதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்கவில்லை அதற்காக அவர் கூட்டணித் தலைமையிடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கவில்லை.

தங்களுக்கு வழங்கப்பட்ட 31 தொகுதிகளை பெற்றுக் கொண்டார் இதை பார்க்கும் போது சூழலுக்கு தகுந்தவாறு அவர் வளைந்து கொடுக்கிறார் என்றே தோன்றுகின்றது 'வாய்ப்பு வந்து கதவை தட்டும் போது அதன் தாடியை பிடித்துக்கொள்.... தாடியை விட்டு விட்டு தலைமுடியைப் பிடித்துக் கொள்ளலாம் என்று நினைக்காதே! ஏனெனில் உன்னைத் தேடிவரும் வாய் பின் தலை வழுக்கையாக இருக்கலாம் என்ற பல்கேரியப் பழமொழியை ராமதாஸ் நன்கு அறிந்து வைத்திருப்பார் போலிருக்கின்றது.

சமீபகாலமாக டாக்டர் ராமதாஸீம் திருமாவளவனும் ஒற்றுமை குறித்து கவனாமக இருந்தனர் என்றாலும் கூட அவர்களால் ஒரே அணியில் இடம் பெற முடியவில்லை, ஏனென்றால் தமிழக அரசியலில் அவர்கள் முக்கிய கதாபாத்திரங்களால வேண்டுமானால் இருக்கலாமே தவிர முதன்மை நாயகர்களாக இல்லை தங்கள் வழையை தாங்களே தீர்மானித்து கொள்ளும் சூழல் இன்று அவர்களுக்கு இல்லை, கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளை சேர்த்து கொள்ள வேண்டும் என்று 'கோரிக்கை' வைக்கும் நிலையில் தான் ராமதாஸ் இருந்தாரே தவிர அதை தீர்மாணிக்கும் சக்தி அவரிடம் இல்லை

அணி மாறுவது என்பது எல்லா கட்சிகளுமே செய்வது தான் சில கட்சிகள் கொள்கைக்காக இடம் மாறும், சில கட்சிகள் இடம் கிடைக்கிறதே என்று இடம் மாறும். பாமகவை பொறுத்தவரை ஒவ்வொரு தேர்தலிலும் தங்களை மதித்து அதிக இடங்களை கொடுக்கும் அணிக்கு அது சென்றிருக்கின்றது, இதனால் யாருடைய கொள்கைக்கும் எந்த விதமான சேதமும் நேர்ந்து விடுவதில்லை

திருமண வீட்டுக்குச் செல்பவர்கள் அவரவர் வீட்டு சமையலறைய இடுத்துவிட்டுச் செல்வதில்லை ஒரு நாள் விருந்து அல்லது ஒரு வேளை விருந்து முடிந்த பின் அவரவர் வீடுகளுக்குத் திரும்பிவிடுகிறார்கள் அடுத்த நாள் முதல் தங்கள் வீடுகளிலேயே சமைக்கிறார்கள தேர்தல் என்பது திருமண விழா போன்றதே என்பது கூட்டணி அமைப்பது திருமண் விந்துக்கு வருவதைப்போலத்தான் என்பதும் அறிஞர் அண்ணாவின் கருத்து இந்தத் தத்துவத்தை மிகச் சரியாக புரிந்து கொண்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி 1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு வாரகாலம் டாக்டர் ராமதாஸ் நடத்திய சாலை மறியல் போராட்ட, தீவிரமான ஒரு பாராட்டம், 'வன்னியர் சங்கம்' என்ற பெயரில் மட்டுமல்லாமது பிற்படுத்தப்பட்டோர் நல அரசியலிலும் சமூக நீதியிலும் அக்கறை கொண்டவர்களையும் டாக்டர் ராமதாசை உன்னிப்பாக கவனிக்கச் செய்தது தமிழகத்தின் கவனம் அவர்பக்கம் திரும்பிய நாட்கள் அவை.

அதன் பிறகு நடந்த 1989 ம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலில் 'தேர்தல் புறக்கணிப்பு' என்ற முழக்கத்துடன் அவரது தேர்தல் பயணம் தொடங்கியது, 'ஓட்டுப் பொறுக்கிகளே உள்ளே நுழையாதீர்கள்' என்று பல கிராமங்களில் கட்சிகள் பிரசாரத்துக்கு நுழைவதே தடை செய்யப்பட்டது.

அடுத்த ஆண்டிலேயே அரசியல் கட்சியாக அவதரித்தது வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் கிளம்பிய பின்னணியில் நடைபெற்ற 1991 சட்டமன்றத் தேர்தலில் முதன் முதலாக களம் இறங்கியது, அந்தத் தேர்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில்தான் வெற்றி பெற்றது, அது போல பாமகவும் ஒரு இடத்தில் ஜெயித்தது, கட்சியின் முதல் எம்எல்ஏ வாக வெற்றிபெற்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

1996ல் திமுக தலைமையிலான ஏழு கட்சிக் கூட்டணியில் இருந்து போராடிக் கொண்டிருந்த பாமக தேர்தல் தொகுதிப்பங்கீட்டில் திமுகவுடன் அதிருப்தி கொண்டு (அப்போது பாமகவுக்கு திமுக அளிக்க முன்வந்த சட்டமன்ற தொகுதிகள் - 4, இன்று அதே திமுக தந்திருப்பது - 31) வாழப்பாடி ராமமூர்த்தி நடத்தி வந்த திவாரி காங்கிரசுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது, அந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு நான்கு இடங்கள் கிடைத்தன. அதே அளவு இடத்தை பாமகவுக்கு மக்கள் வழங்கினர்

1998 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து பாமக 5 இடங்களில் போட்டியிட்டது, தலித் எழில்மலை என்ற தலித் ஒருவரையே அமைச்சராக்கி சமூக நல்லிணக்கம் என்ற முழக்கத்துக்கு வலு சேர்த்தார் ராமதாஸ், 1999 தேர்தலில் திமுக அணியிலிம் அடுத்த நடந்த 2001 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக அணியிலும் இணைந்தார். கணிசமாண இடங்களில் வெற்றிபெற்ற பாமக வுக்கு அரசியல் வரைபடத்தில் எல்லாம் ஏறுமுகமாகவே இருந்தன, 2004 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2006 சட்ட மன்றத்தேர்தலிலும் தான் அவர் திமுக தலைமையிலான கூட்டணியில் நீடிக்கிறாற்.

மீடியாக்களில் அவரது அணிமாற்றங்கள் சந்தர்ப்ப வாதமாக சித்தரிக்கப்பட்டாலும் கூட அவரது கட்சியின் வளர்ச்சிக்கு அந்த அணி மாற்றங்கள் உதவி இருக்கின்றன. அஎன்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும், தொடக்க காலத்தில் வன்னியர் சங்கமாக செயல்பட்ட காரணத்தினாலோ என்னவோ பிற சமூகத்தினர் மத்தியில் பாமகவுக்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லை அதனால் ஒடுக்கப்பட்ட மக்களின் அமைப்பாக மாற்ற விரும்பினார் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களுடன் இணைந்து செயல்பட அவர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார் இருப்பினும் தமிழகத்தின் வடமாவட்டங்கள் தவிர தெற்கில் கால்பதிக்கும் நோக்கத்ஹ்டில் பசுபதி பாண்டியன் மற்றும் பழனிபாபா ஆகியோரை சேர்த்துக்கொண்டு அவர் நடத்த முயன்ற அரசியலுக்கு வரவேற்பில்ல.

எவ்வளவோ முயன்றும் தன் முயற்சிகள் வன்னியர் என்ற அடையாளத்துடன் இணைத்தே பார்க்கப்படுவதையும் வன்னியர்கள் மத்தியிலும் தனது செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவுடன் நின்று போனதையும் ராமதாஸ் உணர்ந்திருக்க கூடும் எஅனவே தான் சமூக நீதியுடன் நிற்காமல் அவரது அடுத்த அவதாரமாகப் பண்பாடு சீரழிவதைத் தடுக்கும் முயற்சிகள் தொடங்கின, ஏற்கனவே மது எதிர்ப்பு, புகை எதிர்ப்பு சினிமாவுக்கு ஐந்தாண்டு காலத் தடை போன்ற கருத்துகளைப் பேச ஆரம்பித்தார்.

இதற்கிடையே 'தமிழ் பாதுகாப்பு இயக்கம்' என்ற பெயரில் திருமாவளவனுடன் கைகோர்த்து இரு சமூக மக்கள் மத்தியிலும் அவரது இமேஜை உயர்த்தியது (இங்கே கவனிக்கவும் பாமக-விடுதலை சிறுத்தைகள் மத்தியில் என எழுதாமல் இரு சமூக மக்கள் மத்தியிலும் என எழுதியிருப்பதை.)

இந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் வேறு வேறு அணிகளில் அவர்கள் இருவரும் நின்றாலும் எதிர்காலத்தில் அவர்கள் இருவரும் ஒரு மாற்று அரசியலை முன்வைத்து தனியாக நிற்பார்கள் என்பதே அரசியலைக் கூர்ந்து நோக்குபவர்களது நம்பிக்கை அப்படி ஒரு காலகட்டம் வரும்போது டாக்டர் ராமதாஸின் தற்போதைய அரசியல் முடிவுகள் எவ்வளவு தூரம் முன்னுணர்ந்து எடுக்கப்பட்டவை என்பது புரியக்கூடும்.

நன்றி விகடன்.காம்

விகடன் இணையதளத்திலிருந்து(ஜீனியர் விகடன்) எடுக்கப்பட்டுள்ளது, இதில் தமக்கு தேவையானதை மட்டும் எடுத்து வெட்டி ஒட்டாமல் முழுகட்டுரையும் இதில் இடுகின்றேன். அடைப்புக்குறிக்குள் இருப்பது மட்டும் நான் எழுதியது.

கிட்டத்தட்ட இதே கருத்துகளை முன்வைத்து நான் எழுதிய முந்தைய பதிவு சமாஜ்வாடி கட்சியும் பாமகவும்

நிகர்நிலை பல்கலைகழகங்கள் என்ன நடக்கின்றது?

நிகர்நிலை பல்கலைகழகங்களில் நடத்தப்பட்டு வந்த பொறியியல் பட்ட படிப்புகள் பற்றியும் அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தெரிகின்றது, இதன் முழு தகவல் கிடைக்கவில்லை, இது வரை இந்த நிகர்நிலை பல்கலைகழகங்கள் அளித்த பட்டங்கள் என்னாவது? தற்போது படித்துக்கொண்டிருப்பவர்கள் நிலை என்ன? தமிழகத்தில் மொத்தம் எத்தனை நிகர்நிலை பல்கலைகழகங்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளன, இது தொடர்பான சுட்டிகளோ தகவல்களோ தெரிந்தால் தரவும், இது தொடர்பான நிறைய தகவல்கள் கிடைக்கவில்லை.

http://www.dinamalar.com/2006mar02/fpnews4.asp