பத்மவியூகம் - அபிமன்யு,அரவாணன்

அபிமன்யு,அரவாணன் இருவருமே மகாபாரத்ததின் முக்கிய பாத்திரங்கள், இரண்டும் சொல்லும் சேதிகள் பல பல...

அபிமன்யு அரண்மனையில் பிறந்து எல்லா அரண்மனை சுகத்தையும் அனுபவித்து, பிறப்பினால் சமூகத்தில் கிடைத்த அத்தனை மதிப்பையும் மரியாதையையும் அனுபவித்து வந்தவன் எல்லாவற்றிற்கும் மேலாக பிறப்பிலேயே திறமை உண்டு என்ற புழுத்து போன சமூக அவலத்தை கருத்தாக்க பத்மவியூகத்தை உடைப்பதை கர்ப்பத்திலே கற்றுக் கொண்டதாக உருவகப்படுத்தப்பட்டவன் இதை இன்று வரை அறிவுசீவி 'சோ'க்கள் புளகாங்கிதப்பட்டுக் கொண்டு திரிகின்றனர், அரைவேக்காட்டு தனமாக அரை குறை புரிதல்களோடு போர்களத்திலே பத்மவியூகத்தை உடைக்கிறேன் பேர்வழியென்று தவறான புரிதல்களோடும் மண்டை கணத்தோடும், தாம் மட்டுமே பெரிய வில்லாளி என்ற மம்மதையோடும் பத்ம வியூகத்தை உடைத்து உள்ளே சென்று மாட்டிய போது அவனுடைய புரிதல்கள் அரைவேக்காட்டு தனமானது அரை குறையானது என்று அபிமன்யூவிற்கு தெரிந்ததா அல்லது எப்போதும் போல தம்மை பீடத்தில் வைத்துக் கொண்டே பிறர்தான் தவறு,லூசு என்று நினைத்துக்கொண்டே செத்தானா என்பது விளக்கப்படவில்லை.


இந்த படத்திற்கு நன்றி முகமூடி

அரவாணன் மகாபாரதத்தின் வஞ்சிக்கப்பட்ட பாத்திரம், காட்டிலேயே பிறந்து வளர்ந்து காட்டானாக சுற்றி திரிந்தவன்,அர்ஜீனனின் மகனே ஆனபோதும் அரசாளும் வாரிசு அபிமன்யூதான், அபிமன்யூவைப்போல் அரண்மனை சுகங்களை கண்டானா? இல்லையே ஆனால் குருசேத்திர போருக்கு முன் கொண்டுவரப்பட்டான் எதற்காக களப்பலியிட, பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்றாலும் அரவாணன் நிச்சயம் செத்திருப்பான் அதற்காகத் தான், இந்த சூழ்ச்சி தந்திரம் தான் சங் பரிவார்களும், ஆர்.எஸ்.எஸ் கும்பலும் பல இடங்களில் இந்து மத்திலேயே சம உரிமை தராமல் வைத்திருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களையே இந்து மதம் இந்து மதம் என்று கூறி பயன்படுத்திக்கொண்டது, மகாபாரத அரவாணனுக்கு பாண்டவ குலத்தில் பிறந்தவன் என்ற தூண்டில் இந்த அரவாணர்களுக்கு இந்து மதம் என்ற தூண்டில் ஆனால் இரண்டிலுமே வஞ்சிக்கப்படவர்கள் அரவாணர்களே.

வீரனுக்கு அழகே போர்களம் சென்று போரிடுவது தான், அதில் தான் அவன் ஆத்ம திருப்தியும் இருக்கும், இங்கேயோ போர் செய்து அவன் திறமையை காட்ட கூட வாய்ப்பளிக்காமல் அபிமன்யூக்களுக்காக தியாகம் என்று கூறி அவன் கழுத்து கீழே மாற்றி மாற்றி கத்தியை சொருகிவிட்டனர், கடைசி ஆசையாக திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட போதும் அவன் திருமணம் செய்து கொண்டது உண்மையையல்ல மாயையைத்தான்.

ஒரே மதத்தில் குலத்தில் பிறந்தும் கல்வி, வித்தைகள்(அவைகள் அரை குறையாகவே இருந்தாலும்), சமூக மரியாதைகள், அரசு கட்டில் எல்லாம் அபிமன்யூவிற்கு அபிமன்யூ செத்ததற்கு பழிவாங்கவில்லையென்றால் தன் உயிரையே விடத் துணிந்த அர்ஜீனன், அபிமன்யூவின் மீது கை வைத்தால் என்ன நடக்கும் என எச்சரித்து கட்டமைப்பை காப்பாற்ற சூழ்ச்சி செய்து உதவும் கண்ணன் போன்ற பெரியவர்கள் என மிக அழகாக மிக நீண்ண்ண்ண்ண்ட கால தொலை நோக்கு திட்டங்கள் எல்லாமே அபிமன்யூக்கள் வாழ இது எதுவுமே இல்லாமல் அபிமன்யூக்கள் வாழ்வதற்கு தம்மை பலி கொடுக்க அரவாணன்கள், அரவாணனின் கழுத்து கீழே இறங்கிய ஒரு ஒரு குத்தும் அபிமன்யூக்கள் வாழ பெரியவர்களால் நடத்தப்பட்ட துரோக குத்துக்கள்.



அபிமன்யுவை போல் அழகாக சித்திரம் தீட்டமுடியாத அளவிற்கு அரவாணனின் கழுத்திற்கு கீழே அத்தனை துரோக குத்துகள் என்பதால் தலைமட்டும் இருக்கும் அரவாண சாமியின் படம் இங்கே (அரவாணன் சாமிதான் அவனை நம்பியவர்களுக்கு மட்டுமாவது)

இது வெறும் அபிமன்யூவின் புரிதல்களின் தவறு மட்டுமே அல்ல, அவன் அப்படித்தான் அரண்மனையில் வளர்க்கப்படிருந்தான், பெரியவர்கள் அப்படித்தான் வளர்த்தார்கள் இப்போதும் நான் கருதுவது இவை எல்லாம் அபிமன்யூவின் தவறுகளல்ல, அவனின் புரிதல்களின் தவறே

பெரியவர்களின் கட்டமைப்புகள் பெரியாரினால் உடைக்கப்பட்டதால் அபிமன்யூக்கள் வாழ இங்கே அரவாணன்கள் கிடைப்பதில்லை, புழுத்துப்போன வீச்சங்களை எதிர்த்து அரவாணன்கள் உரக்க சமூகநீதிக் குரல் எழுப்புவதால் அரவாணன்கள் மீதே அபிமன்யூக்களின் தாக்குதல். பீடங்கள் உடைந்து அரவாணன்கள் எழுந்து கொண்டிருக்கும் காலம் இது, அபிமன்யூக்கள் புரிந்து கொள்ளவில்லையென்றால் அரவாணன்களின் பத்மவியூகத்தில் மாட்டி அடிபட நேரிடும்.

மதிமுக எக்ஸ்ட்ரா லக்கேஜா?

தமிழக அரசியல் அரங்கின் தற்போதை தலையை பிய்க்கும் கேள்விகளில் ஒன்று மதிமுக திமுக கூட்டணியில் தொடருமா? அதிமுக கூட்டணிக்கு செல்லுமா?

தமிழகத்தில் அதிமுக,திமுக,காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்தபடியாக மாநிலமெங்கும் கிளைகள் பரப்பி வேரூன்றியுள்ள இயக்கம் மதிமுக, வட மாவட்டங்களை விட தெற்கேயும் மேற்கேயும் சற்று பலம் வாய்ந்த இயக்கம், தொடர் தோல்விகளால் தொண்டர்கள் மட்டுமல்லாமல் தலைவர்களும் சலிப்படைந்துள்ளனர்.



கடைசி சொட்டு பலம் என்று ஒவ்வொரு கட்சிக்கும் உள்ளது, அதாவது உலகமே இடிந்து விழுந்தாலும் அந்த கட்சிக்கென விழும் வாக்குகளுக்கு நாங்கள் வைத்திருக்கும் பெயர்தான் இது, திமுகவின் கடைசி சொட்டு பலம் 1991 தேர்தலிலும் அதிமுக,மதிமுக,பாமக வின் கடைசி சொட்டு பலம் 1996 தேர்தலிலும் தெரிந்தது.

2001 சட்டமன்ற தேர்தல் அலையில்லாத தேர்தல், ஆளுங்கட்சியின் மீது வெறுப்புமில்லை, அந்த அசம்பாவிதமும் நிகழாமல் எந்த அலையுமில்லாத அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது முழுக்க முழுக்க கூட்டணி கூட்டல் கழித்தல்களே, 2006 தேர்தலும் இன்று வரை அலையில்லா தேர்தல் களமாக காட்சியளிக்கின்றது, அதனால் கூட்டணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

மதிமுக கூட்டணியிலால் திமுகவிற்கு என்ன நன்மை, திமுக கூட்டணியால் மதிமுக விற்கு என்ன நன்மை? மதிமுக திமுக கூட்டணியிலிருந்தால் அதிமுக விற்கு என்ன நட்டம்?

2001 தேர்தலில் கடைசி நேரத்தில் மதிமுக திமுக கூட்டணியிலிருந்து விலகியது/விலக்கப்பட்டது. 23 தொகுதிகள் பேசி முடிக்கப்பட்டு மதிமுக கேட்ட 3 தொகுதிகள் திமுகவினால் தரப்படாததால் மதிமுக தனியாக போட்டியிட்டு ஒரு இடத்திலும் வெற்றி பெறாமல் போனது.

2001 தேர்தலில் மதிமுக திமுக கூட்டணியில் இல்லாமல் போனதால் திமுக கூட்டணி 26 இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது,இவற்றில் 20க்கும் மேற்பட்ட தொகுதிகள் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில்.

இதனால் அதிமுக தனிப்பெரும்பான்மை பெறாமல் போயிருக்கலாம் ஆனால் திமுகவிற்கு மேலும் சில தொகுதிகள் மட்டுமே கூடுதலாக கிடைத்திருக்கும்,
2001 தேர்தலில் மிகப்பெரும்பாலானா தொகுதிகளில் வெற்றி தோல்வி வாக்கு வித்தியாசம் சில ஆயிரங்கள் மட்டுமே மதிமுக வால் வெற்றி வாய்ப்பிழந்த 26 தொகுதிகளில் பல தொகுதிகள் மதிமுக திமுக வாக்குகளை கூட்டியபோது அவை அதிமுக கூட்டணியைவிட ஓராயிரம் இரண்டாயிரம் வாக்குகள் மட்டுமே கூடுதலாக இருந்தது,இத்தனைக்கும் அப்போது திமுக கூட்டணியில் இருந்தவைகள் வாக்கு வங்கி உள்ள கட்சிகள் அல்ல.

மதிமுகவிற்கு அணைத்து தொகுதிகளிலும் பரவலாக கிளைகள் இருந்தாலும் பெரும்பாலுமான தொகுதிகளில் 5,000 முதல் 10,000 வாக்குகள் தான் பெறுகின்றன, அதிலும் வட மாவட்டங்களில் சில தொகுதிகள் தவிர்த்து பிற தொகுதிகளில் வாக்குகள் 5,000ற்கும் குறைவு, தனிப்பட்ட முறையில் வைகோ என்ற மனிதருக்கும், தலைவருக்கும் அவரது இயக்கத்திற்கும் பெரும்பாலானவர்களிடம் இருக்கும் மதிப்பும் மரியாதையும் வாக்குகளாகும் காலம் இன்னும் கனியவில்லை.

இப்போது கூட்டல் கழித்தல் கணக்குகளை பார்ப்போம்

இந்த தேர்தலில் தற்போதைய சூழலின்படி,

திமுகவுடன் காங்கிரஸ்,பாமக இருந்து மதிமுக வெளியேறி தனித்து போட்டியிட்டால் அது கூட்டணியின் வெற்றியை 10க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே பாதிக்கும், அதுவும் சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்,ஆனால் கூட்டணியில் மதிமுக இருந்தால் மதிமுகவிற்காக குறைந்த 15 தொகுதிகள் விட்டுக்கொடுக்கப்பட வேண்டும்.

திமுகவுடன் காங்கிரஸ்,பாமக இருந்து மதிமுக அதிமுகவுடன் சேர்ந்து போட்டியிட்டால் அது தனிப்பட்ட முறையில் அதிமுகவிற்கு வட,தென் மாவட்டங்களில் வெற்றி தோல்வி சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் இழுபறியில் இருக்கும் தொகுதிகளி வெற்றி பெற செய்யும் ஆனால் இதுவும் 15 தொகுதிகளுக்குள் தான் இருக்கும், ஆனால் கூட்டணியில் மதிமுக இருந்தால் மதிமுகவிற்காக குறைந்த 30 தொகுதிகள் விட்டுக்கொடுக்கப்பட வேண்டும், திமுக-பாமக-காங்கிரஸ் கூட்டணி இருப்பதால் வட மாவட்ட தொகுதிகளில் பெரும்பாலும் திமுக கூட்டணிக்கு தாரை வார்க்கப்படும் மதிமுக கூட்டணியால் அதிமுகவிற்கும் சரி திமுகவிற்கும் சரி வட மாவட்டங்களில் இலாபம் ஏதுமில்லை, பாமகவால் கூட்டணிக்கு தென் மாவட்டங்களில் பலன் ஏதுமில்லை ஆனால் காங்கிரஸ் கூட்டணி தென் மாவட்டங்களில் பலமாக உள்ள அதிமுகவுடன் மோதி பார்க்க பக்க பலமாக இருக்கும்.

திமுக,பாமக,காங்கிரஸ் கூட்டணியில் மதிமுக தொடர்ந்தால் 15 தொகுதிகளோடு திருப்தி பட்டுக் கொண்டு மதிமுகவின் தனிப்பட்ட செல்வாக்கினால் ஏறக்குறைய 10 தொகுதிகளை கூட்டணி கூடுதலாக வென்றெடுக்கும், ஆனால் தனிப்பட்ட முறையில் திமுக 15 தொகுதிகளை மதிமுகவிற்கு தருகின்றது.

தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் காங்கிரசும்,பாமகவும் தொடர்ந்து மதிமுக தனித்து நின்றால் திமுக கூட்டணிக்கு பாதிப்பு மிக குறைவு,அதிமுக கூட்டணிக்கு சென்றாலும் தனிப்பட்ட முறையில் திமுகவிற்கு நட்டம் ஏதுமில்லை மதிமுக பாதிப்பேற்படுத்தும் 10-15 தொகுதிகளுக்கு பதில் கூடுதலாக 15 தொகுதிகளில் திமுக போட்டியிட்டு பார்க்கலாம்

ஏதோ ஒரு கூட்டணியில் போட்டியிட்டால் 10வரையிலான தொகுதிகளை தனக்கும் 10தொகுதிகளை கூட்டணிக்கும் மதிமுக வென்று தரும்....

கூட்டணியால் மதிமுகவிற்கு தான் நிறைய இலாபம்....

2001 தமிழக சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்

தேர்தல் 2006 - மதிமுக எக்ஸ்ட்ரா லக்கேஜா?

தமிழக அரசியல் அரங்கின் தற்போதை தலையை பிய்க்கும் கேள்விகளில் ஒன்று மதிமுக திமுக கூட்டணியில் தொடருமா? அதிமுக கூட்டணிக்கு செல்லுமா?

தமிழகத்தில் அதிமுக,திமுக,காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்தபடியாக மாநிலமெங்கும் கிளைகள் பரப்பி வேரூன்றியுள்ள இயக்கம் மதிமுக, வட மாவட்டங்களை விட தெற்கேயும் மேற்கேயும் சற்று பலம் வாய்ந்த இயக்கம், தொடர் தோல்விகளால் தொண்டர்கள் மட்டுமல்லாமல் தலைவர்களும் சலிப்படைந்துள்ளனர்.



கடைசி சொட்டு பலம் என்று ஒவ்வொரு கட்சிக்கும் உள்ளது, அதாவது உலகமே இடிந்து விழுந்தாலும் அந்த கட்சிக்கென விழும் வாக்குகளுக்கு நாங்கள் வைத்திருக்கும் பெயர்தான் இது, திமுகவின் கடைசி சொட்டு பலம் 1991 தேர்தலிலும் அதிமுக,மதிமுக,பாமக வின் கடைசி சொட்டு பலம் 1996 தேர்தலிலும் தெரிந்தது.

2001 சட்டமன்ற தேர்தல் அலையில்லாத தேர்தல், ஆளுங்கட்சியின் மீது வெறுப்புமில்லை, அந்த அசம்பாவிதமும் நிகழாமல் எந்த அலையுமில்லாத அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது முழுக்க முழுக்க கூட்டணி கூட்டல் கழித்தல்களே, 2006 தேர்தலும் இன்று வரை அலையில்லா தேர்தல் களமாக காட்சியளிக்கின்றது, அதனால் கூட்டணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

மதிமுக கூட்டணியிலால் திமுகவிற்கு என்ன நன்மை, திமுக கூட்டணியால் மதிமுக விற்கு என்ன நன்மை? மதிமுக திமுக கூட்டணியிலிருந்தால் அதிமுக விற்கு என்ன நட்டம்?

2001 தேர்தலில் கடைசி நேரத்தில் மதிமுக திமுக கூட்டணியிலிருந்து விலகியது/விலக்கப்பட்டது. 23 தொகுதிகள் பேசி முடிக்கப்பட்டு மதிமுக கேட்ட 3 தொகுதிகள் திமுகவினால் தரப்படாததால் மதிமுக தனியாக போட்டியிட்டு ஒரு இடத்திலும் வெற்றி பெறாமல் போனது.

2001 தேர்தலில் மதிமுக திமுக கூட்டணியில் இல்லாமல் போனதால் திமுக கூட்டணி 26 இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது,இவற்றில் 20க்கும் மேற்பட்ட தொகுதிகள் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில்.

இதனால் அதிமுக தனிப்பெரும்பான்மை பெறாமல் போயிருக்கலாம் ஆனால் திமுகவிற்கு மேலும் சில தொகுதிகள் மட்டுமே கூடுதலாக கிடைத்திருக்கும்,
2001 தேர்தலில் மிகப்பெரும்பாலானா தொகுதிகளில் வெற்றி தோல்வி வாக்கு வித்தியாசம் சில ஆயிரங்கள் மட்டுமே மதிமுக வால் வெற்றி வாய்ப்பிழந்த 26 தொகுதிகளில் பல தொகுதிகள் மதிமுக திமுக வாக்குகளை கூட்டியபோது அவை அதிமுக கூட்டணியைவிட ஓராயிரம் இரண்டாயிரம் வாக்குகள் மட்டுமே கூடுதலாக இருந்தது,இத்தனைக்கும் அப்போது திமுக கூட்டணியில் இருந்தவைகள் வாக்கு வங்கி உள்ள கட்சிகள் அல்ல.

மதிமுகவிற்கு அணைத்து தொகுதிகளிலும் பரவலாக கிளைகள் இருந்தாலும் பெரும்பாலுமான தொகுதிகளில் 5,000 முதல் 10,000 வாக்குகள் தான் பெறுகின்றன, அதிலும் வட மாவட்டங்களில் சில தொகுதிகள் தவிர்த்து பிற தொகுதிகளில் வாக்குகள் 5,000ற்கும் குறைவு, தனிப்பட்ட முறையில் வைகோ என்ற மனிதருக்கும், தலைவருக்கும் அவரது இயக்கத்திற்கும் பெரும்பாலானவர்களிடம் இருக்கும் மதிப்பும் மரியாதையும் வாக்குகளாகும் காலம் இன்னும் கனியவில்லை.

இப்போது கூட்டல் கழித்தல் கணக்குகளை பார்ப்போம்

இந்த தேர்தலில் தற்போதைய சூழலின்படி,

திமுகவுடன் காங்கிரஸ்,பாமக இருந்து மதிமுக வெளியேறி தனித்து போட்டியிட்டால் அது கூட்டணியின் வெற்றியை 10க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே பாதிக்கும், அதுவும் சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்,ஆனால் கூட்டணியில் மதிமுக இருந்தால் மதிமுகவிற்காக குறைந்த 15 தொகுதிகள் விட்டுக்கொடுக்கப்பட வேண்டும்.

திமுகவுடன் காங்கிரஸ்,பாமக இருந்து மதிமுக அதிமுகவுடன் சேர்ந்து போட்டியிட்டால் அது தனிப்பட்ட முறையில் அதிமுகவிற்கு வட,தென் மாவட்டங்களில் வெற்றி தோல்வி சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் இழுபறியில் இருக்கும் தொகுதிகளி வெற்றி பெற செய்யும் ஆனால் இதுவும் 15 தொகுதிகளுக்குள் தான் இருக்கும், ஆனால் கூட்டணியில் மதிமுக இருந்தால் மதிமுகவிற்காக குறைந்த 30 தொகுதிகள் விட்டுக்கொடுக்கப்பட வேண்டும், திமுக-பாமக-காங்கிரஸ் கூட்டணி இருப்பதால் வட மாவட்ட தொகுதிகளில் பெரும்பாலும் திமுக கூட்டணிக்கு தாரை வார்க்கப்படும் மதிமுக கூட்டணியால் அதிமுகவிற்கும் சரி திமுகவிற்கும் சரி வட மாவட்டங்களில் இலாபம் ஏதுமில்லை, பாமகவால் கூட்டணிக்கு தென் மாவட்டங்களில் பலன் ஏதுமில்லை ஆனால் காங்கிரஸ் கூட்டணி தென் மாவட்டங்களில் பலமாக உள்ள அதிமுகவுடன் மோதி பார்க்க பக்க பலமாக இருக்கும்.

திமுக,பாமக,காங்கிரஸ் கூட்டணியில் மதிமுக தொடர்ந்தால் 15 தொகுதிகளோடு திருப்தி பட்டுக் கொண்டு மதிமுகவின் தனிப்பட்ட செல்வாக்கினால் ஏறக்குறைய 10 தொகுதிகளை கூட்டணி கூடுதலாக வென்றெடுக்கும், ஆனால் தனிப்பட்ட முறையில் திமுக 15 தொகுதிகளை மதிமுகவிற்கு தருகின்றது.

தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் காங்கிரசும்,பாமகவும் தொடர்ந்து மதிமுக தனித்து நின்றால் திமுக கூட்டணிக்கு பாதிப்பு மிக குறைவு,அதிமுக கூட்டணிக்கு சென்றாலும் தனிப்பட்ட முறையில் திமுகவிற்கு நட்டம் ஏதுமில்லை மதிமுக பாதிப்பேற்படுத்தும் 10-15 தொகுதிகளுக்கு பதில் கூடுதலாக 15 தொகுதிகளில் திமுக போட்டியிட்டு பார்க்கலாம்

ஏதோ ஒரு கூட்டணியில் போட்டியிட்டால் 10வரையிலான தொகுதிகளை தனக்கும் 10தொகுதிகளை கூட்டணிக்கும் மதிமுக வென்று தரும்....

கூட்டணியால் மதிமுகவிற்கு தான் நிறைய இலாபம்....

2001 தமிழக சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்

தேர்தல் 2006

களைகட்டிவிட்டது தமிழக அரசியல், ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் நண்பர் குழுவோடு அலசல்கள் செய்வதுண்டு தற்போது தமிழ்மணத்தில்....

கருத்துகணிப்பும் தொகுதி நிலவர அலசல்களும் பத்திரிக்கைகள் மட்டுமின்றி தனிப்பட்ட மனிதர்களாலும் செய்யப்படுவதுண்டு... நானும் செய்ததுண்டு....

பல நேரங்களில் கருத்து கணிப்பு பொய்ப்பதற்கு காரணம் உண்மை நிலவரம் அறிந்தோ/அறியாமலோ தம் சார்பு நிலையை கருத்துகணிப்பில் ஏற்றி கூறுவதே.... இதை பெரும்பாலானா/அத்தனை இதழ்களும் செய்தன, கடந்த சில தேர்தல்களில் நக்கீரன் நடுநிலையாக நடந்து கொண்டது, ஆனால் இந்த முறை தெளிவாகவே ஜெயலலிதா எதிர்ப்பு நிலையால் திமுக ஆதரவு நிலையை எடுத்துள்ளது எனவே தகவல்களை மட்டும் நக்கீரனிலிருந்து எடுத்துக்கொண்டு முடிவுகளை விட்டுவிடலாம்.

ஒரு பக்கம் திமுக தலைமையில் ஏழு கட்சி கூட்டணி, மறுபுறம் அதிமுக தனித்து. இராமதாசுவைவிட இந்த முறை வைகோ திமுக கூட்டணியில் தொடர்வாரா இல்லையா என்று பரபரப்பான பேச்சுகள்.... கம்யூனிஸ்ட் தோழர்களும் காங்கிரஸ் தலைகளும் பாமகவும் வைகோவும் மற்ற அத்தனை கூட்டணி கட்சிகளும் ஜெயலலிதாவுடன் கூட்டணியென்றால் சத்தம் போடாமல் கிடப்பதும், திமுக கூட்டணியில் உரிமைக்குரல் எழுப்புவதும் வழக்கமாகிவிட்டது, இப்போதும் உரிமைக்குரல்கள் கேட்கின்றன.

எனக்கு நன்கு அறிமுகமான சில தொகுதிகள் பற்றிய அலசல்கள் இனி வரும்.

தற்போதைக்கு தலையிடிக்கும் இரண்டு கேள்விகள்

1. திருமா திமுக கூட்டணிக்குள் வருவாரா?
2. வைகோ திமுக கூட்டணியில் தொடர்வாரா?